
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
563 subscribers
About HAZRATH ABDUL WAHHAB BAQAVI
We are here to bring Deep Insights & tools to help you understand Hazrath S. Abdul Wahhab Baqavi's Teachings and Practices. https://www.hazrathabdulwahhab.org/
Similar Channels
Swipe to see more
Posts

ஞான கோட்டைக்குள் வாழ்ந்த ஸூஃபியாக்கள் - உரூஸ் முபாரக் - நாகூர் ஷரீஃப் இறைவனையும் இறைவனுக்காக வாழ்ந்த இறை நேசர்களையும் நினைவுகூறும் போது இறைவனின் அருள் பார்வை நம் மீது பரிபூரணமாக ஏற்படுகிறது. ஷஃபான் பிறை 10 ஸெய்யிதா ஸித்தினா சுல்தான் பீவி அம்மா ஸாஹிபா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூமா.

Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 8th - Feburary - 2025 - Saturday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef இறைதீர்ப்பு அப்படியே ஏற்றுக்கொள் உனது வாழ்வில் நடக்கும் காரியத்தில் இறைதீர்ப்பு அப்படியே ஏற்றுக்கொள் அது உனக்கு மகத்தான வெற்றியை தரும். மனிதனின் வாழ்வில் உயர்வையும் தாழ்வையும் தோற்றுவிக்கிற விதியையே (இங்கே) நான் இறைத்தீர்ப்பு என்று குறிப்பிடுகிறேன். ஏனெனில் இறைத் தீர்ப்பு இல்லாமல் எதுவும் எங்கும் நடக்க முடியாது. உங்கள் விதி எப்படி அமையப்போகிறது? அது நல்லபடியாக அமையப்போகிறதா - இல்லை, உங்களைத் தூக்கிப்போட்டு விளையாடப்போகிறதா? - இறைவழியில் ஈடுபடத் துடிக்கும் உங்களுக்கு இப்படிப்பட்ட வினாக்கள் தோன்றக்கூடும். இவற்றிற்கு உங்களால் விடை காண முடியாது. இதனால் உங்களுக்குக் குழப்பமும் அவநம்பிக்கையும் தோன்றலாம். இதன் இறுதி விளைவு இது : உங்கள் வழிபாட்டுக்குத் தடை ஏற்பட்டுவிடும். எனவே இந்தப் பிரச்சினையில் இறைதீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும்; எது நடக்கக்கூடாதோ அது தவிர்க்கப்படட்டும். நடந்தே தீர வேண்டிய ஒன்றை நடக்கக் கூடாததாக மாற்ற முற்படாதீர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்வது மனிதப் பண்புகளில் மிக உயர்ந்த பண்புகளில் ஒன்று. ஏற்றுக்கொண்டால் ஆன்மிகத்தில் நற்பாக்கியத்தை வெகு விரைவில் நீ பெற்று கொள்வாய். ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி

Burdha Shareef Day - Hazrath Speaks என் அறிவுரை படி வாழ ஆரம்பித்துவிட்டால் இந்த மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்களென்றால் உங்களுக்குகுள் சில கோட்பாடுகள் தனக்குத்தானாகவே உருவாகும். இப்படி ஒவ்வொன்றுக்கும் எதற்கு உள்ளது என்று யாரும் சொல்லாமலே புரிய ஆரம்பித்துவிடும். ஏன் இறைவனின் அருளில் உங்களுக்கு கிடைப்பதில்லை அதன் காரணம் என்ன உங்களின் குணாதிசயங்களால் சரியில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள்? தீய குணம் மனிதனின் விரோதி. உயிரைக் குடிக்கும் கொடிய விஷத்திற்கு அதை ஒப்பிடலாம். தீய பண்புடை யவன் அதன் கொடிய நச்சுப் பல்லுக்கு இரையாகியே தீர வேண்டும். தீய குணம் இறைவனின் அருளுக்கு அப்பாற் பட்டது. நற்பண்பு சுவனப் பாதைக்கு வாயிலாக இருப்பது போல் தீயபண்பு நரகப் பாதைக்கு வாயிலாக இருக்கிறது. தீய குணங்களை மனோ வியாதிகள் என்று குறிப்பிடலாம். ஆனால் இது சரீர வியாதியைவிடக் கொடியது. ஏனெனில் இந்த வியாதி முற்றிப் போகும் போது நிரந்தரமான மறுமை வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. இந்தக் கொடிய பிணி எங்கே? அந்தச் சாதாரண உடல் வியாதி எங்கே? இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் மிகவும் அதிகம். உடல் வியாதியின் விஷயம் இப்படி இல்லை.இது விஷயத்தில் வைத்தியர்கள் அனைவரும் கையை விரித்து விட்டாலும் இந்த வியாதியால் ஏற்படும் மிகப் பெரிய நஷ்டம் மரணம்; சடலத்தின் அழிவு! இதனால் தற்காலிகமான உலக இன்பத்தை இழக்க நேரிடுகிறது. அவ்வளவு தான். மனோ வியாதியின் விஷயத்தில் வைத்தியர்கள் கையை விரித்துவிட்டால் அதனால் இம்மை மட்டுமல்ல, மறுமையும் பாழாகிவிடுகிறது. மனோ வியாதி கொண்டவனுக்கு மறுமையில் ஏது மதிப்பு? தன் மனோ வியாதிக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் அளவிற்கு வைத்திய சாஸ்திரம் கற்றுக் கொள்ளுவது அறிவு டைய ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும். ஏனெனில் எந்த உள்ளமும் முழுக்க முழுக்க வியாதியற்ற நிலையில் இருக்க முடியாது. ஒவ்வோர் உள்ளமும் ஏதாவதொரு வியாதியைத் தன்னுள் வைத்துக் கொண்டு தான் இருக்கும். அதை அசட்டை செய்யக்கூடாது: நன்கு கவனிக்க வேண்டும். இல்லையேல் மிகவும் சாதாரணமாயிருந்த அந்த மனோ வியாதி நாளடைவில் வலுவேறிப் போய் வெளிப்பட ஆரம்பித்து விடும். இப்படி அது பகிரங்கமாகும் போது அதற்குரிய காரணங்களையும் அதை அகற்றுவதற்குரிய மார்க்கத்தையும் ஆராய வேண்டிய அவசியம் மதற்குப் பிறகு மனோ வியாதிக்குச் சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சை குறித்துத் தான் வல்ல நாயன், "உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியவர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள்" என்று கூறுகிறான். ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ II நாகூர் ஷரீஃப்

Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 9th - Feburary - 2025 - Sunday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef அறிவு, வணக்கம் அறிவு, வணக்கம் ஆகிய இரண்டின் உதவியால்தான் இறைவனின் பாதையில் வெற்றியடைய முடியும். திருமறையின் ஒளியில் ஆராய்ந்தவர்கள் இந்த உண்மையை அறிந்திருக் கிறார்கள். மக்கள் அனைவரும் தவறிவிட்டார்கள்.அறிஞர்களைத் தவிர. அறிஞர்களிலும், செயல் வீரர்களைத் தவிர. ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி

Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 7th - Feburary - 2025 - Friday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef தீயசெயலால் ஏற்பட்ட மனக்கறையை நற்செயலால் துடையுங்கள் மகனுக்கு கூறும் அறிவுரை நன்றாக கேள்! தவறே செய்யாத மனிதனும் இல்லை. நன்மையே செய்யாத மனிதனும் உலகில் இல்லை. நீங்கள் இறைவனிடம் மன்னிப்பு கோரிவிட்டு மாறிவிட்டால், இறைவனிடமிருந்து உனக்கு நன்மாரயம் இருக்கிறது. ஒரு சில நேரம் மனம் கவலை உண்டாக்கும். அதை நினைத்து கவலைப்படாதே. கண்ணாடியில் மூச்சுவிட்டால் அதில் இலேசான கறை படிவதுபோன்று, நீங்கள் செய்யும் தவறான செயல்கள் ஒவ்வொன்றும் உங்கள் உள்ளத்தில் இலேசான கறையை ஏற்படுத்துகின்றன. மூச்சுவிட்டால் ஏற்பட்ட கறையைக் கைக்குட்டையால் துடைப்பதுபோல், தீயசெயலால் ஏற்பட்ட மனக்கறையை நற்செயலால் துடையுங்கள். மனிதன் தவறு செய்வது இயற்கை. தவறே செய்யாத மனிதனும் நன்மையே செய்யாத மனிதனும் உலகில் இல்லை. இந்த இயற்கையை உங்களால் மாற்ற முடியாது. என்றாலும், ஒரு தரம் தவறு செய்த பிறகு மீண்டும் அதில் பிரவேசிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் தவறு செய்துவிட்டால், உடனே அதற்கு இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். தொடர்ந்து நன்மையான காரியத்தைச் செய்யுங்கள். நன்மையின் ஒளிக்கற்றை தீமையின் இருள் கீற்றை அடித்து விரட்டட்டும்! ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி

https://youtu.be/smBxdXvkUMg?si=ElJiNcDr7G4TcIDF

Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 11th - Feburary - 2025 - Tuesday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தவையே ஒரு மனிதன் இறைவணக்கத்திலும் தானதரும வகையிலும் வழக்கமாக ஈடுபட்டு வருகிறான். ஒருநாள் அவன் செயல்களைச் சிலர் மதிப்போடும், மரியாதையோடும் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள் என்ற காரணத்தால் அவன் செயல்கள் அவனுக்கு இலகுவாகின்றன. ஆனால், கவனிப்பவர்கள் இல்லை என்ற காரணத்தால் அவன் தன் செயலை விட்டுவிட மாட்டான். செயல்கள் எண்ணத்தைப் பின்பற்றி வெளிப்படுகின்றன. எனவே, எண்ணத்தின் சிறப்பு—அல்லது இழிவு செயலுக்கும் ஏற்படுகிறது. இதனால்தான், நபிகள் திலகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹி வஅஸ்ஹாபிஹி வஉம்மத்திஹ் வஸல்லம் அவர்கள், "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தவையே" என்று கூறினார்கள். ஏனென்றால், செயல்கள் பிந்தியவை. அவற்றிற்கு முன்னால் நிற்பவை எண்ணங்கள். ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி

Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 10th - Feburary - 2025 - Monday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef எண்ணம்தான் பிரதானம் அவனை உற்றுப் பார்! மனிதனின் எண்ணம்தான் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகிறது. நல்லெண்ணம் கொண்டவன் நன்மையடைகிறான். தீய எண்ணம் பூண்டவன் தண்டனையடைகிறான். எண்ணம்தான் பிரதானம். ஒரு மனிதனின் எண்ணம் நேர்மையடைந்துவிட்டால் அவன் செயல்கள் அவசியம் நேர்மையடைந்துவிடும். ஆகவே, செயல்களுக்கு அடிப்படை எண்ணம். எண்ணத்தின் காரணமாகவே செயல்கள் உருவாகின்றன. நல்லெண்ணத்தினால் உருவாகும் செயல்கள் நற்செயல்களாகின்றன. செயல்கள் உருவாவது இரண்டாவது காரியம். நல்லெண்ணம் கொள்வதே நன்மையான காரியமாயிற்றே! ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி

Knowledge and Clarity II path to Enlightenment II Hazrath Secret and Life Teachings II Untold Life of a saint II Nagore Shareef Jaleel II Hazrath Disciple II Nagore Shareef Episode : 3 https://youtu.be/3Vqd_INQsLI 1) ஹஜ்ரத் பாடம் நடத்தும் போது என் மனைவி இந்த நொடி என்ன செய்கிறார் என்று கூறினார்? 2) ஹஜ்ரத்திற்கு பணிவிடை செய்யும் போது நான் இரவு நேரத்தில் தூங்கமாட்டேன்? 3) ஹஜ்ரத் இரவு நேரத்தில் யாரு எல்லாம் ஹஜ்ரத் தேடி வந்தார்களோ அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்து சரி செய்வார்கள்? 4) ஒரு சில நாட்களில் ஹஜ்ரத் 1/2 மணி நேரம் மட்டும் தூங்குவார்கள்? 5) ஹஜ்ரத்திற்கு எல்லா விஷயத்திலும் Order படி தான் செய்வார்கள்? 6) இறைவனின் அருளைப் பெற இறைவன் எந்த விஷயத்தை செய்ய சொன்னோ அதை சரியாக செய்வதற்கும் எடுத்து கூறுவதற்கும் தான் ஸூஃபியாக்கள் அனுப்பட்டார்கள்? 7) கௌது நாயகம் புத்திக்கு அடங்க பொருள் நானவேன் என்று கூறியுள்ளார்கள்? Hazrath Official What's app Group Links : https://chat.whatsapp.com/C7m4WEU5KnG21HN3yaD6uu HAZRATH ABDUL WAHHAB FOUNDATION ~ https://youtube.com/@HazrathFoundation?si=Zk6sIQ6fEyAs3bEg

Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 6th - Feburary - 2025 - Thursday Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef சக்திமிகுந்த கற்பனை சாபமும், வரமும் சக்திமிகுந்த வார்த்தைகளின் விளைவு அல்ல, சக்திமிகுந்த கற்பனையின் விளைவு. ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி