
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
February 6, 2025 at 09:04 PM
Hazrath Books-வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள் - 7th - Feburary - 2025 - Friday
Knowledge and Clarity II Ihya Ulumuddin Al Ghazali kithab II Hazrath Speaks II Nagore Shareef
தீயசெயலால் ஏற்பட்ட மனக்கறையை நற்செயலால் துடையுங்கள்
மகனுக்கு கூறும் அறிவுரை
நன்றாக கேள்! தவறே செய்யாத மனிதனும் இல்லை. நன்மையே செய்யாத மனிதனும் உலகில் இல்லை. நீங்கள் இறைவனிடம் மன்னிப்பு கோரிவிட்டு மாறிவிட்டால், இறைவனிடமிருந்து உனக்கு நன்மாரயம் இருக்கிறது. ஒரு சில நேரம் மனம் கவலை உண்டாக்கும். அதை நினைத்து கவலைப்படாதே.
கண்ணாடியில் மூச்சுவிட்டால் அதில் இலேசான கறை படிவதுபோன்று, நீங்கள் செய்யும் தவறான செயல்கள் ஒவ்வொன்றும் உங்கள் உள்ளத்தில் இலேசான கறையை ஏற்படுத்துகின்றன. மூச்சுவிட்டால் ஏற்பட்ட கறையைக் கைக்குட்டையால் துடைப்பதுபோல், தீயசெயலால் ஏற்பட்ட மனக்கறையை நற்செயலால் துடையுங்கள்.
மனிதன் தவறு செய்வது இயற்கை. தவறே செய்யாத மனிதனும் நன்மையே செய்யாத மனிதனும் உலகில் இல்லை. இந்த இயற்கையை உங்களால் மாற்ற முடியாது. என்றாலும், ஒரு தரம் தவறு செய்த பிறகு மீண்டும் அதில் பிரவேசிக்காதீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் தவறு செய்துவிட்டால், உடனே அதற்கு இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். தொடர்ந்து நன்மையான காரியத்தைச் செய்யுங்கள். நன்மையின் ஒளிக்கற்றை தீமையின் இருள் கீற்றை அடித்து விரட்டட்டும்!
✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
❤️
👍
🪔
8