HAZRATH ABDUL WAHHAB BAQAVI
HAZRATH ABDUL WAHHAB BAQAVI
February 9, 2025 at 03:25 PM
Burdha Shareef Day - Hazrath Speaks என் அறிவுரை‌ படி வாழ ஆரம்பித்துவிட்டால் இந்த மனநிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்களென்றால் உங்களுக்குகுள் சில கோட்பாடுகள் தனக்குத்தானாகவே உருவாகும். இப்படி ஒவ்வொன்றுக்கும் எதற்கு உள்ளது என்று யாரும் சொல்லாமலே புரிய ஆரம்பித்துவிடும். ஏன் இறைவனின் அருளில் உங்களுக்கு கிடைப்பதில்லை அதன் காரணம் என்ன உங்களின் குணாதிசயங்களால் சரியில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள்? தீய குணம் மனிதனின் விரோதி. உயிரைக் குடிக்கும் கொடிய விஷத்திற்கு அதை ஒப்பிடலாம். தீய பண்புடை யவன் அதன் கொடிய நச்சுப் பல்லுக்கு இரையாகியே தீர வேண்டும். தீய குணம் இறைவனின் அருளுக்கு அப்பாற் பட்டது. நற்பண்பு சுவனப் பாதைக்கு வாயிலாக இருப்பது போல் தீயபண்பு நரகப் பாதைக்கு வாயிலாக இருக்கிறது. தீய குணங்களை மனோ வியாதிகள் என்று குறிப்பிடலாம். ஆனால் இது சரீர வியாதியைவிடக் கொடியது. ஏனெனில் இந்த வியாதி முற்றிப் போகும் போது நிரந்தரமான மறுமை வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. இந்தக் கொடிய பிணி எங்கே? அந்தச் சாதாரண உடல் வியாதி எங்கே? இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் மிகவும் அதிகம். உடல் வியாதியின் விஷயம் இப்படி இல்லை.இது விஷயத்தில் வைத்தியர்கள் அனைவரும் கையை விரித்து விட்டாலும் இந்த வியாதியால் ஏற்படும் மிகப் பெரிய நஷ்டம் மரணம்; சடலத்தின் அழிவு! இதனால் தற்காலிகமான உலக இன்பத்தை இழக்க நேரிடுகிறது. அவ்வளவு தான். மனோ வியாதியின் விஷயத்தில் வைத்தியர்கள் கையை விரித்துவிட்டால் அதனால் இம்மை மட்டுமல்ல, மறுமையும் பாழாகிவிடுகிறது. மனோ வியாதி கொண்டவனுக்கு மறுமையில் ஏது மதிப்பு? தன் மனோ வியாதிக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் அளவிற்கு வைத்திய சாஸ்திரம் கற்றுக் கொள்ளுவது அறிவு டைய ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும். ஏனெனில் எந்த உள்ளமும் முழுக்க முழுக்க வியாதியற்ற நிலையில் இருக்க முடியாது. ஒவ்வோர் உள்ளமும் ஏதாவதொரு வியாதியைத் தன்னுள் வைத்துக் கொண்டு தான் இருக்கும். அதை அசட்டை செய்யக்கூடாது: நன்கு கவனிக்க வேண்டும். இல்லையேல் மிகவும் சாதாரணமாயிருந்த அந்த மனோ வியாதி நாளடைவில் வலுவேறிப் போய் வெளிப்பட ஆரம்பித்து விடும். இப்படி அது பகிரங்கமாகும் போது அதற்குரிய காரணங்களையும் அதை அகற்றுவதற்குரிய மார்க்கத்தையும் ஆராய வேண்டிய அவசியம் மதற்குப் பிறகு மனோ வியாதிக்குச் சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சை குறித்துத் தான் வல்ல நாயன், "உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தியவர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள்" என்று கூறுகிறான். ✍️ நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ II நாகூர் ஷரீஃப்
❤️ 🙏 4

Comments