Erode Kathir
Erode Kathir
February 1, 2025 at 02:22 PM
பொதுவாக மாணவர்களுக்கான பயிலரங்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தவுடன் நான் feedbacks கேட்பதில்லை. காரணம், அவை முற்றிலும் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். நிகழ்ச்சி நடந்து ஏழு நாட்கள் கழித்து பள்ளி நிர்வாகம் பெற்றிருக்கும் feedback இது. முழுவதும் இன்னும் என் பார்வைக்கு வரவில்லை. Couldn't resist smiling and sharing such feedbacks எனும் குறிப்போடு இது மட்டும் என்னை வந்தடைந்தது. இரண்டாவது பத்தியில் கூறியிருப்பதுபோல், இடைவேளைக்குப் பிறகு என்னுடைய தொணி மாற்றியது உண்மைதான். அது யதேட்சையாகவோ, தனிப்பட்ட முறையில் எந்த மாணவரையும் முன் வைத்தோ வந்ததல்ல. முதல் பாதியில் இருந்து ஒருவகையில் என்னை அதற்கு நான் தயார்படுத்திக்கொண்டேதான் வந்தேன். அதில் குறிப்பிட்டிக்கும் harsh என்பது கடுமையானது என்பதைவிட உறுதியாக, திடமாக, உரத்துச் சொன்னதொரு கண்டிப்பானதொரு உணர்த்துதல். அவர்களையறியாமல் மெல்ல மெல்ல அந்த நிலைக்கு தயார்படுத்திய பின் வெளிப்படுத்திய கண்டிப்புதான் அது. அதனை சரியான இடத்தில், சரியான சொற்களில் அவர்களிடம் சேர்ப்பித்தது குறித்து நானும் அதை ரசித்தேன். நான்காவது பத்தியில் இருக்கும், 'வகுப்பில் அமைதியாக இருப்பவர்கள் அனைவரும் பயிரலங்கில் உரையாடினார்கள்' என்பதுதான் அந்த தயார்படுத்தல். ஐந்தாவது பத்தியில் இருக்கும் adviceகள் குறித்து, மாணவரே சொல்லிவிட்ட நிலையில் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. 😉😉 பொதுவாக, இவ்வளவு மதிப்பெண்கள் நான் வாங்கப் போகிறேன் என்பதை மட்டும் சொல்வதை விடவும், கடைசி பத்தியில் சொல்லியிருக்கும் ‘அட்ராசிட்டிகளை குறைக்கத் தொடங்கிவிட்டோம்!’ எனும் ஒப்புதல் வாக்குமூலமே இம்மாதிரியான பள்ளி நிகழ்வுகளின் வெற்றியாக நான் கருதுகிறேன். 🩵 இந்த மாணவரை அடுத்தடுத்த ஆண்டுகளில் சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன்.
👍 ❤️ 🤟 👏 💜 🙏 🤍 🩷 23

Comments