
Erode Kathir
February 14, 2025 at 04:08 PM
நம்மில் பலரின் பெயர் இரண்டாகப் பிரிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும். அப்படியான பெயர்கள் நெருக்கமானவர்களால் முழுப் பெயராக அழைக்கப்படாது.
பலருக்கு முதல் பாதி, சிலருக்கு இரண்டாவது பாதிதான் அழைக்கப்படும் பெயராக இருக்கும். அதுவே பழகிப்போய் முழுப் பெயர் சொல்லி அழைக்கப்படும் பொழுது அல்லது மற்ற பாதி அழைக்கப்படும் பொழுது சற்று அந்நியமாக உணர்வதுண்டு.
என்னுடைய முழுப் பெயர் கதிர் வேலு. 99.9% கதிர் என்றுதான் அழைக்கப்படுகிறேன். அதென்ன 0.1% என்றால் நான் சிறுவனாக இருந்தபொழுது சில தருணங்களில் வேலு என்று அப்பாவால் அழைக்கப்பட்டதுண்டு. மற்றபடி அவருக்கும் 30-35 ஆண்டுகளாக கதிர்தான்.
எழுத வந்த பிறகு கதிர் என்பதாக மட்டுமே நிலைத்து நின்று விட்டது. வேலு என்பது ஒருவகையில் அந்நியப்பட்டுவிட்டது. அது இயல்பாக நிகழ்ந்ததுதான்.
உங்களுக்கு இப்படியான அனுபவம் உண்டா?முழுப்பெயர் என்ன?
எப்படி அழைக்கப்பட்டது?
எப்படி அழைக்கப்படுகின்றது?
காலவோட்டத்தில் எப்படி நிலை பெற்று உள்ளது? என்பதையெல்லாம் யோசித்தது உண்டா...!?
~ ஈரோடு கதிர்
👍
❤️
💜
😂
😊
🙂
🤍
🤝
🤟
🩷
26