
Visaranai Thadayam🎥📡📡🎥📡📡
February 26, 2025 at 05:49 PM
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வெள்ளாளவிடுதி வருவாய் கிராமத்திலுள்ள அரசு விதைப் பண்ணையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வெள்ளாளவிடுதி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு விதைப் பண்ணையில், சங்கம்விடுதி வருவாய் கிராமம், குருவாண்டான் தெருவைச் சேர்ந்த திருமதி.ஜெயலலிதா (வயது 40) க/பெ.விஜயகுமார் என்பவர் கடந்த 21.2.2025 அன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக உளுந்து அடிக்கும் இயந்திரத்தில் சேலை சுற்றி தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (26.2.2025) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த திருமதி.ஜெயலலிதா அவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.