
Visaranai Thadayam🎥📡📡🎥📡📡
15 subscribers
About Visaranai Thadayam🎥📡📡🎥📡📡
விசாரணை தடயம் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். #kovai Chief Minister of Tamil Nadu Coimbatore City Police Collector Coimbatore Coimbatore city Coimbatore District Police Tamil Nadu Police Sylendra Babu IPS Shankar IAS Academy, Coimbatore M. K. Stalin
Similar Channels
Swipe to see more
Posts

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வெள்ளாளவிடுதி வருவாய் கிராமத்திலுள்ள அரசு விதைப் பண்ணையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வெள்ளாளவிடுதி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள அரசு விதைப் பண்ணையில், சங்கம்விடுதி வருவாய் கிராமம், குருவாண்டான் தெருவைச் சேர்ந்த திருமதி.ஜெயலலிதா (வயது 40) க/பெ.விஜயகுமார் என்பவர் கடந்த 21.2.2025 அன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக உளுந்து அடிக்கும் இயந்திரத்தில் சேலை சுற்றி தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (26.2.2025) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த திருமதி.ஜெயலலிதா அவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

In an investment of ₹5,000 crore, creating employment opportunities for 50,000 people, a Memorandum of Understanding (MoU) was signed in the presence of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin, for the establishment of non-leather footwear manufacturing projects by Evervan Kothari Footwear Limited in Karur and Perambalur districts. In the presence of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. M.K. Stalin, today (26.02.2025), at the Secretariat, during an event organized by the Department of Industries, Investment Promotion, and Commerce, a Memorandum of Understanding (MoU) was signed between the Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau, the investment promotion agency of the Government of Tamil Nadu, and Evervan Kothari Footwear Limited, a subsidiary of the Phoenix Kothari Group. This agreement facilitates the establishment of a non-leather footwear manufacturing project in Karur and Perambalur districts, with an investment of ₹5,000 crore, generating employment opportunities for 50,000 people. The Department of Industries, Investment Promotion, and Commerce of the Government of Tamil Nadu continues to actively implement various initiatives to attract large-scale investments, create numerous job opportunities for Tamil Nadu’s youth, especially women, enhance their quality of life, and ensure widespread development across the state. Accordingly, Evervan Kothari Footwear Limited, a subsidiary of the Phoenix Kothari Group, has signed a Memorandum of Understanding (MoU) to establish a non-leather footwear manufacturing project with an investment of ₹5,000 crore, creating employment opportunities for 50,000 people. As these industries are being set up in the industrially backward districts of Karur and Perambalur, a significant number of job opportunities will be created for the youth, especially women, in these districts and the surrounding regions. This initiative will not only increase individual income levels but also contribute to the overall economic development of the area. The event was graced by the presence of Hon’ble Minister for Industries, Investment Promotion, and Commerce, Dr. T.R.B. Rajaa, Chief Secretary, Thiru N. Muruganandam, IAS., Secretary of the Department of Industries, Investment Promotion, and Commerce, Thiru V. Arun Roy, IAS., Managing Director and Chief Executive Officer of Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau, Dr. Tarez Ahmed, IAS., Chairman of Evervan Shoetown Group, Thiru Ran., Chairman and Managing Director of Kothari Industrial Corporation Limited, Thiru Rafiq Ahmed, Executive Vice Chairman, Thiru P. Karthikeyan, along with other senior government officials.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.02.2025) சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் விழாவில் ஆற்றிய உரை. மருத்துவ அலுவலர்களுக்காக பணி நியமன ஆணைகள் வழங்கக்கூடிய இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள நம் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களே, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. அசன் மவுலானா அவர்களே, முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில் குமார், இ.ஆ.ப., அவர்களே, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் திருமதி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்களே, NHM இயக்குநர் திரு. அருண் தம்புராஜ் அவர்களே, மருத்துவத் துறை இயக்குநர்களே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே, அரசு உயர் அலுவலர்களே, பணி ஆணை பெறக்கூடிய பேரன்புக்குரிய, மரியாதைக்குரிய என்னுடைய அன்பிற்குரிய மருத்துவர்களே, மருத்துவர்களின் பணியாணை பெறக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்திருக்கக்கூடிய பேரன்புக்குரிய மருத்துவர்களின் பெற்றோர்களே, உறவினர்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். மக்களின் உயிர் காக்கக்கூடிய உன்னத சேவை செய்வதற்கான பணி ஆணைகளை மருத்துவர்களான உங்களுக்கு வழங்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்; பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், இந்தத் துறையின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், குறிப்பாக, இங்கு வருகை தந்திருக்கக்கூடிய நம்முடைய மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திராவிட மாடல் அரசு என்பது, மக்களைக் காக்கக்கூடிய அரசு. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் உயர்ந்த இலட்சியம். எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி, அதையெல்லாம் எதிர்கொண்டு தன் பணியை மேற்கொண்டு வருகின்றது நம்முடைய திராவிட மாடல் அரசு. இங்கே 2500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளும், சட்ட நெருக்கடிகளைக் கடந்துதான் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். உயிர்காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கிறார்கள். தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவின் மருத்துவத் தலைநகராக இருக்கிறது என்றால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பு தான் அதற்கு காரணம் என்பது நமக்கு நன்றாக தெரியும். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என்று தலைவர் கலைஞர் உருவாக்கிய கட்டமைப்புதான் மருத்துவ சேவையில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. இந்தக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படவேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றது போல நம்முடைய டாக்டர்கள் தேவை. அதுவும் அரசாங்க மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிப் பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ளக் கூடிய டாக்டர்கள் தேவை. கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன நகரங்களிலிருந்தும் டாக்டர்கள் உருவானால்தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும். அதைப் புரிந்துகொண்டுதான், முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்கிற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்களிலிருந்தும் கூட, இத்தனை டாக்டர்கள் உருவாகி இருக்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் வித்திட்டவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரது வழியில், திராவிட மாடல் அரசு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம். மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து இருக்கிறது. “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” பல உயிர்களைக் காப்பாற்றி, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அவசியமான தேவைப்படும் மருந்துகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கத்தான் முதல்வர் மருந்தகங்கள் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவேண்டும், அவர்கள் நோய் குணமாகி, நல்லபடியாக வாழ வேண்டும் என்று திராவிட மாடல் அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், அதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்றால், உங்களைப் போன்ற டாக்டர்களின் பங்களிப்புதான் அதில் மிக மிக முக்கியம். டாக்டர்களான நீங்கள் இல்லாமல் நிச்சயமாக சொல்கிறேன், இந்தத் திட்டங்கள் எல்லாம் இல்லை. மருத்துவத் துறையின் மற்ற பணியாளர்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் நிறைவேறப் போவதில்லை, வெற்றியும் கிடைக்கப் போவதில்லை. உங்களுக்கு இன்றைக்கு முதலமைச்சர் என்ற முறையில், நான் பணி ஆணைகளை வழங்க இருக்கிறேன். ஆனால், நீங்கள் செய்யப்போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல. மக்களின் உயிர் காக்கும் சேவை. சமுதாயத்திற்கான மிகப் பெரிய தொண்டு. இந்த இடத்தை அடைய நீங்கள் எத்தனையோ இரவுகள் கண் விழித்திருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து இருப்பீர்கள். எல்லாவற்றையும் கடந்துதான் இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! இனி, மக்கள் உங்களை நம்பி தங்கள் உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்கு, உங்களுடைய சேவை அமையவேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள்; மறுபடியும் சொல்கிறேன், மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க, இந்த அரசு இருக்கிறது. மீண்டும், மீண்டும் சொல்கிறேன்; மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள்; உங்களுடைய நலனை கவனிக்க இந்த திராவிட மாடல் அரசு இருக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இருக்கிறார். முதலமைச்சரான நானும் இருக்கிறேன். உயிர்களைக் காக்கும் தொண்டாற்றப் போகும் உங்களுக்குத் தேவையான, எது எது அவசியம் தேவைப்படுகிறதோ அதையெல்லாம் நிச்சயம் செய்வேன் என்று உறுதி சொல்லி, உங்கள் பணி சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு அரசால் 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழகப் பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்குதல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் திரு. எஸ். சின்னதம்பி, ஆக்காட்டி திரு. ஆறுமுகம், நெல்லை திரு. சுந்தரராஜன், மதுரை திரு. ஜி.எஸ். மணி, திரு.ஏ.என். பாக்கியலட்சுமி, திருமதி சீதாலட்சுமி (எ) ஜி.எம். சித்திரைசெல்வி, திரு. வி. நாகு, திருமதி பி. சீதாலட்சுமி, திருமதி ஆர்.எஸ். ஜெயலதா, திரு. எஸ். ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குதல் தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் ப. ரங்கராஜ், திரு. வளப்பக்குடி வீரசங்கர், முனைவர் இரா. சீனிவாசன், திரு. செ. நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய நிதியுதவி வழங்குதல் தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திட 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல் மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 மரபுரிமையினருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் மொத்தம் 40 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் திருமதி கவிதா ராமு, இ.ஆ.ப., தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் திரு. வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் திருமதி விஜயா தாயன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.