
Trichy Info (TRICHY IT)
February 2, 2025 at 12:45 AM
தமிழ்நாடு முழுவதும் நாளை 02.02.25 - ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு.
மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் அலுவலகங்கள் இயங்கும்.
ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிக்கை.
நாளை காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவண பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், நாளை பணியாற்றும் பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
03.02.25 திங்கள் அன்று முகூர்த்த நாள் என்பதால், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 க்குப்பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.ராஜா முஹம்மது, D.M.E., D.D.W.,
பத்திர எழுத்தர்
காரைக்கால்
98424 19106 - 94894 19444