
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
February 17, 2025 at 10:23 AM
*திருச்செந்தூர் சாலையில் கிடந்த ஹேண்ட்பேக்கை ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறையினர் பாராட்டு!*
வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் வசித்து வரும் தங்கவேல் என்பவரது மகன் லிங்கம் (40) இவர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வளைகாப்பு நிகழ்சிக்கு வந்துள்ளார். வரும் வழியில் அவரது கைப்பையை தொலைத்துவிட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்காததால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சென்றார்.
அதன் பின்னர் முத்தையாபுரம் எம். தங்கம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி சமுத்திரகனி (40). கூலி வேலை செய்துவரும் இவர் சாலையில் கிடந்த ஹேன் பேக்கை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில், ரூ.4000 பணமும், 1 ஜோடி வெள்ளி வளையலும் இருந்தது. மேலும் கைப்பை தொலைத்த நபர்களுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையம் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமுத்திரகனியின் நேர்மையை பாராட்டி அவருக்கு காவல்துறையினர் சால்வை அணிவித்து கெளரவித்தனர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
https://whatsapp.com/channel/0029Va9dRUh9Bb6310sLiZ1O
👍
1