தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
February 18, 2025 at 01:27 PM
*தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.* இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் (PHH, AAY) அன்னயோஜனா அந்தியோதயா திட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகைகளை நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட தெரிவிக்கப்படுகிறது. வெளியூரில் / வெளிமாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் நபர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவுசெய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். https://chat.whatsapp.com/Dm5DbTOQM011hHE93imNH5 தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள். https://whatsapp.com/channel/0029Va9dRUh9Bb6310sLiZ1O

Comments