
Shree Investments
February 6, 2025 at 03:12 AM
*வெற்றியுடன் வளர்கிறர்களா?*
அல்லது
*சவால்களால் சாய்ந்து விடுகிறீர்களா?*
முன் ஒரு காலத்தில், ஒரு வளமான மண் கொண்ட ஒரு இடத்தில் ஒரு பறவையின் மூலம் இரண்டு விதைகள் விழுந்தன.
இரண்டு விதைகளும் உயிர்ப்புடன் முளைத்து , துடிப்பான தாவரங்களாக வளரும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
முதல் விதை நம்பிக்கையாலும் லட்சியத்தாலும் நிறைந்திருந்தது. அது நிறைவேற்ற ஒரு நோக்கம் இருப்பதாகவும், வாழ்க்கை வளர வாய்ப்புகள் நிறைந்தது என்றும் அது நம்பியது. அதனால்தான் இந்த வளமான மண்ணில் விழுந்துள்ளோம் என்ற நம்பிக்கையால் நிறைந்திருந்தது.
அதே நேரம், இரண்டாவது விதை இந்தப் புதிய மண்ணில் நம்மால் வளர முடியுமா , இந்த மண் சரியானதாக இருக்குமா என மனதில் பயத்தோடு இருந்தது.
அது எதிர்கொள்ளக்கூடிய சவால்களைப் பற்றி நிச்சயமற்றதாகவும் கவலையாகவும் உணர்ந்தது.
"மண் மிகவும் கடினமாக இருந்தால் என்ன செய்வது?
நான் சரியாக வளர முடியாவிட்டால் என்ன செய்வது?
ஒரு புயல் அல்லது விலங்கின் தாக்குதல் வந்தால் என்ன செய்வது?
என்று அஞ்சி வேர்கள் சிறிதளவு மட்டும் மண்ணில் செலுத்தி அஞ்சி அஞ்சி வளர்ந்தது.
விதை கீழே விழுந்து சில நாட்கள் கடந்தன.
முதல் விதை மெதுவாக ஆனால் நிச்சயமாக, அவ்வப்போது புயல் அல்லது வறட்சி இருந்தபோதிலும், உயரமாகவும் வலுவாகவும் வளரத் தொடங்கியது.
அது சிரமங்களை எதிர்கொண்டது, ஆனால் அதன் உறுதிப்பாடு அதை செழிக்க அனுமதித்தது.
இரண்டாவது விதை, மண்ணில் அதன் இடத்தை இன்னும் பற்றிக் கொண்டது. இந்த மண்ணில் வளம் இருந்தாலும் அது சிறிதும் வளர முயலவில்லை. வேர்களை மண்ணில் பதிவிட ஆழமாகச் செலுத்த பயத்தோடு சிறிது வேர் நீளம் வளர்ந்ததே போதும் என நினைத்தது.
காலம் கடந்தது, வறட்சிக் காலம் வந்தது. மண்ணின் மேல்புற ஈரம் காயுமளவு மண் காய்ந்து விட்டது.
முதல் விதை ஆழமாக , பயமின்றி வேர்களை செலுத்தியிருந்ததால், ஆழமான மண்ணில் இருந்த ஈரத்தைக் கொண்டு தடையின்றி வளர்ந்து வந்தது.
இரண்டாவது விதை, ஆழமாக மண்ணில் வேர்விட அஞ்சி வேர்கள் வளராமல் இருந்ததால் வாடத் தொடங்கியது. இப்போது வேர்களை ஆழமாகச் செலுத்த முயன்றது.
தற்போது வறட்சியினால் மண் இருகியிருந்ததால் வேர்களை இப்போது ஆழமாகச் செலுத்த முடியவில்லை.
நாட்கள் நகர நகர வறட்சியால் வாடி மடிந்தே போனது.
நாமும் அந்த விதைகளைப் போலத்தான்.
நாம் முதலீடுகளை பெருக்க நமக்கு பல வாய்ப்புகள் உள்ளன.
அந்த விதைகளைப் போல நம்மில் சிலர் வாழ்வை நம்பிக்கையுடனும் , சவால்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சரியான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து , நம்பிக்கைக்குரிய ஆலோசகர்கள் மூலம் இளம் வயதிலேயே முதலீடுகள் செய்து, சிறப்பான முறையில் செல்வ வளத்தோடு முதுமைக்காலத்தில் வாழ்கிறார்கள்.
சிலர் இந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சிறந்ததா?
இது பங்கு மார்க்கெட் முதலீடுகள் போல மதிப்பு சரியுமா? இது பற்றி நமக்கு அதிகம் தெரியாதே ? என்று பல சிந்தனைகளால் நம்பிக்கைக்குரிய ஆலோசகரையும் நாடாமல் இதைவிட நிலையான, குறைந்த அளவே வட்டி விகிதம் கொண்ட, வங்கி வைப்புகளில் , அல்லது அதிக வட்டி என்று ஆசையைத் தூண்டும் நம்பிக்கையற்ற திட்டங்களில் முதலீடு செய்து வாழ்கிறார்கள்.
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் அந்த வங்கி வைப்புத் தொகை தரும் பயன்கள் குறையும்போது வேறு ஏதாவது அதிக வருமானம் தரக்கூடிய முதலீடு உள்ளதா என முயற்சி செய்கிறார்கள்.
முறையற்ற அதிக வட்டி திட்டங்களில் வட்டி வருமானம் மட்டுமின்றி முதலீடு செய்த தொகையையும் இழந்து விடுகிறார்கள்.
முதலீட்டுக் காலம் குறைவாக இருப்பதால் , இள வயது முதலீடு போல அதிக லாபம் இல்லாமல் குறைவாகப் பயன் பெறுகிறார்கள்.
உங்கள் முதலீட்டை சவால்கள் இருந்தாலும் , அதிக வருமானம் தர வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய, சிறந்த ஆலோசனை வழங்க உங்கள் நம்பிக்கைக்குரிய முதலீட்டு ஆலோசகர் திரு ஸ்ரீதர் ராஜசேகர் அவர்கள் தயாராக உள்ளார்கள். அவரை உடனே கீழ்க் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.
நீதி: வாழ்க்கை நிச்சயமற்றதாகவும் தடைகள் நிறைந்ததாகவும் இருந்தாலும், தைரியத்துடனும் உறுதியுடனும் முன்னேறுபவர்கள்தான் செழித்து தங்கள் திறனை நிறைவேற்றுபவர்கள். நீங்களும் வெற்றி பெற்றவராக மாறுங்கள்.