
Shree Investments
19 subscribers
About Shree Investments
7010450878/9442388779 With 39 years of Banking. Investment ideas Predominantly Mutual Funds,along with Insurance, Stocks, PPF, NPS, AIF
Similar Channels
Swipe to see more
Posts

*Seeking investment opportunities in the US market?* Sridhar Rajasekar S of Shree Investments can help you navigate current market conditions and identify promising global funds. *Contact us today for a free consultation*

*கவனித்தீர்களா* ? மற்ற உலக நாடுகள் மீது வரிவிதிப்பு முயற்சி மேற்கொள்ளும் அமெரிக்கா , இன்னும் இந்தியா மீதான கூடுதல் வரிவிதிப்பு பற்றி எந்த அறிக்கையும் விடவில்லை. *கவனித்தீர்களா* ? அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்திய வம்சாவளியினரின் மேலாதிக்க பங்கேற்பு அதிகரித்துள்ளது என்பதை! 1. துள்சி கப்பார்ட். 2. உஷா வேன்ஸ் 3. காஷ் படேல் 4. விவேக் ராமசாமி மற்றும் முன்னனித் துறைகளில் சுந்தர் பிச்சை , நாதெள்ளா போன்ற தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள். *கவனித்தீர்களா* ? சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்றும் இந்த அரசு , சட்ட பூர்வமாக குடியேறி அமெரிக்காவின் பொருளாதார, மருத்துவ, டெக்னாலஜியில் முக்கிய பங்களிக்கும் இந்திய மக்களுக்கு ட்ரம்ப் அரசு அணைத்து நிற்கும் என அளிக்கப் பட்ட தேர்தவ் வாக்குறுதிகள். *கவனித்தீர்களா* ? அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கு மிகச் சவாலான *பிரிக்ஸ் நாணயச் செலாவணியை* பிரிக்ஸ் உருவாக்க நாடான இந்தியா மறுத்துள்ளதை... *கவனித்தீர்களா* ? அமெரிக்க பொருட்களின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக இந்தியா அறிவித்துள்ளதை ...... இந்தியாவின் ஏற்றுமதியில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவுடனான வணிகத்தை இது அதிகரிக்கும் என்பதை ...... *கவனித்தீர்களா* ? இந்த பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை ..... *கவனித்தீர்களா* ? ஐரோப்பாவின்பாதுகாப்பை ஐரோப்பா தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்ற ட்ரம்பின் அறிவிப்பு , இந்திய ராணுவ தளவாடங்கள் மற்றும் ஐரோப்பாவே தயாரிக்கும் தளவாட உதிரி பாகங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கக் கூடும் என்பதை...... *கவனித்தீர்களா* ? அமெரிக்காவின் மருந்து உற்பத்தித் துறையின் முக்கிய பெரும் ஏற்றுமதியாளர்கள் 1. சீனா ( ட்ரம்ப்பின் முக்கிய எதிரி நாடு 2. ஐரோப்பா - உக்ரேன் விவகாரத்திலும்,நேட்டோ நிதி பங்களிப்பிலும் அமெரிக்க நிதியை சுரண்டியதாக ட்ரம்ப் நினைப்பது ,மற்றும் டாலர் வணிகத்தின் பெரும் சவால் ஈரோ நாணய வர்த்தகத்தை தூண்டுவது 3. இந்தியா - நட்பு நாடு , மோடியின் தனிப்பட்ட நட்பு , சீனாவை முறியடிக்க ட்ரம்புக்கு உள்ள ஒரே வாய்ப்புள்ள நாடு ஆகவே முன்பே அதிகரித்துள்ள இந்திய மருத்துவ தயாரிப்புகளின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதையும் , டாலர் மதிப்பு கூடுவது ,ஏற்றுமதி லாபத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதையும் ..... *கவனித்தீர்களா* ? ட்ரம்ப் அதிபரானவுடன் ,அதிகார பூர்வமாக , முதன் முதலாக சந்திக்கும் வெளிநாட்டு தலைவர் மோடி என்பதை........ *கவனித்தீர்களா* ? அதி நவீன இராணுவத் தளவாட இறக்குமதிக்கு இந்தியா இசைந்துள்ளதையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா எதிரி நாடாக கருதும் சீனாவின் வல்லாதிக்கத்தை தடுக்கவும் , அதற்கு இந்திய ராணுவ தொழில் நுட்பத்தை அதிகரிப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவின் நன்மைக்காகவும் என்பதையும் , இந்தியாவின் பட்ஜெட் செலவினத்தில் இராணுவச் செலவினம் முதலிடத்தில் இருப்பதும் ..... அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதையும் ....... *கவனித்தீர்களா* ? இத்தனை வாய்ப்புள்ள இந்தியாவின் பங்குச் சந்தை மாற்றங்களை லாப நோக்குடன் செயல்படும் வணிக செய்தி ஊடகங்கள் செய்தித் தலைப்புகள் தனி நபர் முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதும் , அதனால் அவர்கள் செய்துள்ள முதலீட்டை குறைந்த விலையில் விற்று விட்டு முதலீட்டில் நஷ்டம் அடைவதையும் ..... *இது அத்தனையும் கவனித்து இருந்தீர்கள்* *எனில் உங்கள் ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பற்றி கவலைப் படவேண்டாம்* ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் ஒவ்வொரு தனி நபரின் ரிஸ்க் எடுக்கும் நிலையை முதலில் அனுமானித்து பிறகு நீண்ட கால முதலீட்டு ஆலோசனைகளை மட்டுமே வழங்குவதால் நம்பிக்கையுடன் உங்கள் இலக்குக் காலம் முடியும் வரை காத்திருந்து எதிர்பார்த்த லாபத்தை உறுதி செய்துகொள்ள ஆலோசனை வழங்குகிறோம். ஸ்ரீதர் ராஜசேகரின் 40 ஆண்டுக்கால நிதித் துறை அனுபவத்தோடு, முதலீட்டு வாடிக்கையாளர்கள் நலன் கருதி இயங்குவதால் ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் பாதுகாப்பான திட்டங்களை ஆலோசனை வழங்கும் ஓரு நிறுவனம் ஆகும். -ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் ©பல்வேறு கட்டுரைகளின் அடிப்படையில் கருத்துருவாக்கப்பட்ட படைப்பு .

*சேமிப்பா?* *வருமானமே கம்மி!* *செலவு அதுக்கும் மேல* *இதில எப்படிங்க முடியும்?* ₹ ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹ வரும் வருமானத்தில் எதையும் விருப்பப் பட்ட படி வாங்கி அனுபவிக்க முடியவில்லை.😮💨 அவசியத் தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழலில் உள்ளேன் . நான் ஆசைப்படும் பொருட்கள் எட்டாக் கனவாகவே போய்விடுகிறது என்று சொல்பவர்கள் இந்த சிறு கட்டுரையைஒரு முறை படியுங்கள். 😔 மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம் செலவுகள் - செலவுகள்- செலவுகள் . ஆனால் அந்த செலவுகளை மூன்று அடிப்படையான வகைகளாக பிரித்து அறியத் தொடங்கிவிட்டால் வானமும் வசப்படும். *தேவைகள் -- விருப்பங்கள் -- ஆசைகள்* பணத்தை நிர்வகிப்பதற்கான அடிப்படைப் புரிதல் பணத்தை நிர்வகிப்பது என்பது வருமானத்திற்குள் செலவுகளைச் செய்வது மட்டுமல்ல, நமது தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிடுதலுடன் செலவுகளை மேற்கொள்வதும்தான். செலவுகள் பல வகைப்படும். வழக்கமான மாதாந்திர செலவுகள், சேமிப்பு, முதலீடுகள், வரிகள், காப்பீட்டு பிரீமியம் போன்ற பல்வேறு பிரிவுகளில் செலவுகள் இருக்கும். சில செலவுகள் அடிப்படைத் தேவைகளுக்காகவும், சில விருப்பங்கள் அல்லது ஆசைகளுக்காகவும் செய்யப்படுகின்றன தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகள் ஆகிய மூன்று சொற்களும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றுக்கிடையே பெரிதும் வேறுபாடு உள்ளது. அவற்றுக்கான திட்டமிடலும் வெவ்வேறு வகைப்பட்டது . இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது, நமது பணத்தை சரியாக நிர்வகிப்பதற்கு அவசியம். *தேவைகள்* தேவைகள் என்பவை நமது உயிர் வாழ்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் அத்தியாவசியமானவை. உணவு, உடை, இருப்பிடம், தண்ணீர், சுகாதாரம் போன்றவை தேவைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள். *விருப்பங்கள்* தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் விஷயங்களை நாம் விரும்புவோம். பொழுதுபோக்கு, பயணம், நல்ல உணவு, ஆடம்பரப் பொருட்கள் போன்றவை விருப்பங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள். *ஆசைகள்* ஆசைகள் என்பவை நாம் மிகவும் விரும்புபவை, ஆனால் அவை நமது உயிர்வாழ்வுக்கோ அல்லது வாழ்க்கைத் தரத்திற்கோ அவசியம் இல்லை. விலை உயர்ந்த கார், பெரிய வீடு, ஆடம்பரப் பொருட்கள் போன்றவை ஆசைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள். வேறுபாட்டைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் வீட்டு பட்ஜெட் போடும்போது, தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நமது தேவைகளுக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது ஆசைகள் அல்லது விருப்பங்களுக்கு அதிகமாகப் பணம் செலவழித்தால், நமது தேவைகளைப் பின்னாளில் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். இதன் விளைவாக, வாழ்க்கை கடினமாகிவிடும். பலசமயம் கடன் வாங்க நேரிடும் . இது பொதுவாக கீழ் நடுத்தரக் குடும்பங்களில் பரவலாக காணப்படும் பிரச்னை . உதாரணமாக, ஒரு குடும்பம் வாடகை வீட்டில் வசிக்கிறது. அவர்கள் ஒரு புதிய வீடு வாங்க விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆசை. ஆனால், அவர்கள் தற்போதைய வருமானத்தில் வீடு வாங்கினால், அவர்களின் தேவைகளான உணவு, உடை, கல்வி போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். எனவே, அவர்கள் முதலில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து, பின்னர் சேமித்து, அதன் பிறகு வீடு வாங்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு மேலும் விளக்க வேண்டுமெனில் கீழ்க்காணும் சில உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். * *தேவை* : பசிக்கு உணவு * *விருப்பம்* : பிடித்த உணவகத்தில் உணவு * *ஆசை* : விலை உயர்ந்த உணவகத்தில் உணவு * *தேவை* : குளிர் இருந்து பாதுகாக்க உடை * *விருப்பம்* : பிடித்த வண்ணத்தில் உடை * *ஆசை* : பெரிய கம்பெனிகளின் பிராண்டட் ஷோரூம் மற்றும் பிராண்டட் உடைகள் * *தேவை* : தங்கி வாழ ஒரு வீடு. அது வருமானத்தைப் பொறுத்து வாடகை வீடாகக் கூட இருக்கலாம் * *விருப்பம்* : வசதியான வீடு * *ஆசை* :பெரிய பங்களா போன்ற வசதிகள் கொண்ட வீடு. • *தேவை* : போக்குவரத்திற்கு வாகனம் . அது டூ வீலராகக் கூட இருக்கலாம். *விருப்பம்* : கார் வாங்க விருப்பம் . சேமிப்பின் மூலம் வாங்கலாம். அல்லது சேமிப்பின் பங்கு அதிகரித்து கடன் பங்கு குறைத்து வாங்கலாம். *ஆசை* : மாத வருமானத்தில் கடன் வாங்கி பிம் டபிள்யூ போன்ற ஆடம்பர கார்கள் வாங்குதல் முடிவுரை: எந்த ஒரு செலவு செய்யுமுன், அது எந்த வகையிலான செலவு என்பதை உணர்ந்து , தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டு வெவ்வேறு வகையிலான சேமிப்பு மூலம் நம் செலவுகளை மேற்கொள்வதன் மூலம், நாம் நமது பணத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பது மட்டுமல்ல , நம் மூன்று வகையான தேவை, விருப்பம் , ஆசை செலவுகளையும் மகிழ்ச்சியோடு நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதற்கான திட்டமிடலில் உங்கள் நம்பிக்கைக்குரிய மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு ஆலோசகரிடம் , உங்கள் வருவாய், குடும்ப செலவுகளின் தேவை, விருப்பம், ஆசை அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பகிர்ந்து உங்களுக்கேற்ற தனிப்பட்ட முறையில் குறுகிய கால , நீண்ட கால பிரித்து சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் அதே வேளையில் செல்வ வளத்தையும் உருவாக்க முடியும். மேலும் இலவச ஆலோசனைக்கும், வழிகாட்டவும் அணுகவும் - ஸ்ரீதர் ராஜசேகர் ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ்

*செல்வ வளம் பெருக்க நீண்ட கால திட்டமிடல் கடினமானதா?* இனி அது கடினமில்லை என்பதே என் பதில். நீங்கள் அனுதினமும் செய்யும் ஒரு செயல். சாதாரணமாக வாங்கும் காய்கறிகள் இந்த வாரம் விலையேறும் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வீர்கள்? வழக்கமாக வாங்கும் அளவைவிட கூடுதலாக வாங்கி சேமித்து பயன் படுத்துவீர்கள். குடும்பத்திற்கு துணி எடுப்பதும் அதே போல , கூடுமான வரையில் ஆடித் தள்ளுபடியிலும் , தீபாவளி சமயங்களிலும் குறைந்த விலையில், வாங்குவதையே விரும்புவீர்கள். நகை வாங்கும் போது என்ன செய்வீர்கள்? எங்கு செய்கூலி சேதாரம் குறைவாகவும் ,நம்பிக்கையாகவும் தரமானதாகவும் கிடைக்கிறதோ அங்குதான் வாங்குவீர்கள். ஒரு நிலம் வாங்கும் போதும் நாளை கண்டிப்பாக அந்தப் பகுதி வளர்ச்சியடையும் , அதே சமயத்தில் விலை குறைவாகவும் ,என உத்தேசமாக தெரிந்தால் நிலம் பிரித்து பிளாட் போடும் சமயத்திலேயே வாங்கிவிடுகிறோம். இதையேதான் உங்கள் நீண்ட கால வளர்ச்சிக்கான முதலீடு செய்வதிலும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதாவது உங்கள் எதிர்காலத் திட்டமிடலுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் குறைந்த விலையில் , அதுவும் தரமான நாளை லாபம் ஈட்டக்கூடிய ஃபண்ட் , NFO காலத்தில் யூனிட் ரூ 10 க்கே கிடைத்தால் முதலீடு செய்ய தயக்கமே தேவையில்லை. ஆகவேதான் பரிந்துரை செய்கிறோம் *மகேந்திரா மனுலைஃப் வேல்யூ ஃபண்ட்.* மற்ற ஃபண்டுகளிலிருந்து இதன் மாறுபட்ட அணுகுமுறை , எதிர்கால வருமானம் ஈட்டும் திறன் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் , முதலீடு செய்யவும் அணுகவும் ஸ்ரீதர் ராஜசேகர் ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ் 9442388779 7010450878

*சேமிப்பா?* *வருமானமே கம்மி!* *செலவு அதுக்கும் மேல* *இதில எப்படிங்க முடியும்?* ₹ ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹ வரும் வருமானத்தில் எதையும் விருப்பப் பட்ட படி வாங்கி அனுபவிக்க முடியவில்லை.😮💨 அவசியத் தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழலில் உள்ளேன் . நான் ஆசைப்படும் பொருட்கள் எட்டாக் கனவாகவே போய்விடுகிறது என்று சொல்பவர்கள் இந்த சிறு கட்டுரையைஒரு முறை படியுங்கள். 😔 மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம் செலவுகள் - செலவுகள்- செலவுகள் . ஆனால் அந்த செலவுகளை மூன்று அடிப்படையான வகைகளாக பிரித்து அறியத் தொடங்கிவிட்டால் வானமும் வசப்படும். *தேவைகள் -- விருப்பங்கள் -- ஆசைகள்* பணத்தை நிர்வகிப்பதற்கான அடிப்படைப் புரிதல் பணத்தை நிர்வகிப்பது என்பது வருமானத்திற்குள் செலவுகளைச் செய்வது மட்டுமல்ல, நமது தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிடுதலுடன் செலவுகளை மேற்கொள்வதும்தான். செலவுகள் பல வகைப்படும். வழக்கமான மாதாந்திர செலவுகள், சேமிப்பு, முதலீடுகள், வரிகள், காப்பீட்டு பிரீமியம் போன்ற பல்வேறு பிரிவுகளில் செலவுகள் இருக்கும். சில செலவுகள் அடிப்படைத் தேவைகளுக்காகவும், சில விருப்பங்கள் அல்லது ஆசைகளுக்காகவும் செய்யப்படுகின்றன தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகள் ஆகிய மூன்று சொற்களும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றுக்கிடையே பெரிதும் வேறுபாடு உள்ளது. அவற்றுக்கான திட்டமிடலும் வெவ்வேறு வகைப்பட்டது . இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது, நமது பணத்தை சரியாக நிர்வகிப்பதற்கு அவசியம். *தேவைகள்* தேவைகள் என்பவை நமது உயிர் வாழ்வதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் அத்தியாவசியமானவை. உணவு, உடை, இருப்பிடம், தண்ணீர், சுகாதாரம் போன்றவை தேவைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள். *விருப்பங்கள்* தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் விஷயங்களை நாம் விரும்புவோம். பொழுதுபோக்கு, பயணம், நல்ல உணவு, ஆடம்பரப் பொருட்கள் போன்றவை விருப்பங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள். *ஆசைகள்* ஆசைகள் என்பவை நாம் மிகவும் விரும்புபவை, ஆனால் அவை நமது உயிர்வாழ்வுக்கோ அல்லது வாழ்க்கைத் தரத்திற்கோ அவசியம் இல்லை. விலை உயர்ந்த கார், பெரிய வீடு, ஆடம்பரப் பொருட்கள் போன்றவை ஆசைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள். வேறுபாட்டைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் வீட்டு பட்ஜெட் போடும்போது, தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நமது தேவைகளுக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது ஆசைகள் அல்லது விருப்பங்களுக்கு அதிகமாகப் பணம் செலவழித்தால், நமது தேவைகளைப் பின்னாளில் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். இதன் விளைவாக, வாழ்க்கை கடினமாகிவிடும். பலசமயம் கடன் வாங்க நேரிடும் . இது பொதுவாக கீழ் நடுத்தரக் குடும்பங்களில் பரவலாக காணப்படும் பிரச்னை . உதாரணமாக, ஒரு குடும்பம் வாடகை வீட்டில் வசிக்கிறது. அவர்கள் ஒரு புதிய வீடு வாங்க விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆசை. ஆனால், அவர்கள் தற்போதைய வருமானத்தில் வீடு வாங்கினால், அவர்களின் தேவைகளான உணவு, உடை, கல்வி போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். எனவே, அவர்கள் முதலில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து, பின்னர் சேமித்து, அதன் பிறகு வீடு வாங்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு மேலும் விளக்க வேண்டுமெனில் கீழ்க்காணும் சில உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். * *தேவை* : பசிக்கு உணவு * *விருப்பம்* : பிடித்த உணவகத்தில் உணவு * *ஆசை* : விலை உயர்ந்த உணவகத்தில் உணவு * *தேவை* : குளிர் இருந்து பாதுகாக்க உடை * *விருப்பம்* : பிடித்த வண்ணத்தில் உடை * *ஆசை* : பெரிய கம்பெனிகளின் பிராண்டட் ஷோரூம் மற்றும் பிராண்டட் உடைகள் * *தேவை* : தங்கி வாழ ஒரு வீடு. அது வருமானத்தைப் பொறுத்து வாடகை வீடாகக் கூட இருக்கலாம் * *விருப்பம்* : வசதியான வீடு * *ஆசை* :பெரிய பங்களா போன்ற வசதிகள் கொண்ட வீடு. • *தேவை* : போக்குவரத்திற்கு வாகனம் . அது டூ வீலராகக் கூட இருக்கலாம். *விருப்பம்* : கார் வாங்க விருப்பம் . சேமிப்பின் மூலம் வாங்கலாம். அல்லது சேமிப்பின் பங்கு அதிகரித்து கடன் பங்கு குறைத்து வாங்கலாம். *ஆசை* : மாத வருமானத்தில் கடன் வாங்கி பிம் டபிள்யூ போன்ற ஆடம்பர கார்கள் வாங்குதல் முடிவுரை: எந்த ஒரு செலவு செய்யுமுன், அது எந்த வகையிலான செலவு என்பதை உணர்ந்து , தேவைகள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டு வெவ்வேறு வகையிலான சேமிப்பு மூலம் நம் செலவுகளை மேற்கொள்வதன் மூலம், நாம் நமது பணத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பது மட்டுமல்ல , நம் மூன்று வகையான தேவை, விருப்பம் , ஆசை செலவுகளையும் மகிழ்ச்சியோடு நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதற்கான திட்டமிடலில் உங்கள் நம்பிக்கைக்குரிய மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு ஆலோசகரிடம் , உங்கள் வருவாய், குடும்ப செலவுகளின் தேவை, விருப்பம், ஆசை அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பகிர்ந்து உங்களுக்கேற்ற தனிப்பட்ட முறையில் குறுகிய கால , நீண்ட கால பிரித்து சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் அதே வேளையில் செல்வ வளத்தையும் உருவாக்க முடியும். மேலும் இலவச ஆலோசனைக்கும், வழிகாட்டவும் அணுகவும் - ஸ்ரீதர் ராஜசேகர் ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ்

Big change to income tax rules coming in 2025! 🇮🇳 The government wants more power to see your digital stuff. Think emails, bank accounts, online investments, even your social media! Right now, they can look at some of this, but the new rules make it official and include even more, like data on app servers. Basically, if they're searching you, you'll have to give them access to all this digital info. 🤔 It's mandatory for the Taxpayers to provide the data. Authorities need not request the taxpayers to permit them to access their digital data . It's the duty of the Taxpayers to provide the data.

வங்கி டெப்பாசிட் எந்த ரிஸ்க் கும் இல்லாததா? ஏப்ரல் 2016 காஸ் சிலிண்டர் விலை சென்னை ரூ 521 .00 அதே கேஸ் சிலிண்டர் விலை மே 2022 ல் ரூ 1015 க்கு உயர்ந்து விட்டது. ஏப்ரல் 2016 ல் வங்கி எஃப்டியில் சிலிண்டர் விலைத் தொகையை ( ரூ.521) டெபாசிட் செய்திருந்தால் மே 2022ல் கிடைக்கக்கூடிய முதிர்வுத் தொகை ரூ 838 6 வருட காத்திருப்புக்குப் பிறகு , கேஸ் சிலிண்டரை, 6 வருடங்களுக்கு முன் விற்ற விற்ற விலையில் போடப்பட்ட டெப்பாசிட் செய்த தொகைக்கு தற்போதைய விலையில் வாங்க முடியாது. 2016 ல் 521 ரூ மதிப்புள்ள கேஸ் சிலிண்டர் 2022 ல் ரூ 1015. ஆனால் 2016ல் 521 மதிப்புள்ள டெப்பாசிட் 2022 ல் உங்களுக்கு தருவது வெறும் 838 மட்டுமே. அதாவது விலைவாசி உயர்வு காரணமாக நீங்கள் போட்ட வங்கி டெப்பாசிட் உங்களுக்கு லாபம் தருவதில்லை . *மாறாக உங்கள் நிகர இழப்பு ரூ 177.00* அதுவும் டெப்பாசிட் க்கு 30% வரி கட்டுபவரெனில் இன்னும் கூடுதலாக நிகர இழப்பு 267/= என்று இருக்கும். இந்த ரிஸ்க் மறைந்திருந்து நம் முதலீட்டு மதிப்பின் வாங்கும் சக்தி குறைவை ஏற்படுத்தும். இதுதான் *INFLATIONARY RISK* மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் தெரிவிப்பது போல வங்கிகள் இந்த ரிஸ்க் பற்றி எப்போதும் தெரிவிப்பதில்லை.

*வெற்றியுடன் வளர்கிறர்களா?* அல்லது *சவால்களால் சாய்ந்து விடுகிறீர்களா?* முன் ஒரு காலத்தில், ஒரு வளமான மண் கொண்ட ஒரு இடத்தில் ஒரு பறவையின் மூலம் இரண்டு விதைகள் விழுந்தன. இரண்டு விதைகளும் உயிர்ப்புடன் முளைத்து , துடிப்பான தாவரங்களாக வளரும் ஆற்றலைக் கொண்டிருந்தன. முதல் விதை நம்பிக்கையாலும் லட்சியத்தாலும் நிறைந்திருந்தது. அது நிறைவேற்ற ஒரு நோக்கம் இருப்பதாகவும், வாழ்க்கை வளர வாய்ப்புகள் நிறைந்தது என்றும் அது நம்பியது. அதனால்தான் இந்த வளமான மண்ணில் விழுந்துள்ளோம் என்ற நம்பிக்கையால் நிறைந்திருந்தது. அதே நேரம், இரண்டாவது விதை இந்தப் புதிய மண்ணில் நம்மால் வளர முடியுமா , இந்த மண் சரியானதாக இருக்குமா என மனதில் பயத்தோடு இருந்தது. அது எதிர்கொள்ளக்கூடிய சவால்களைப் பற்றி நிச்சயமற்றதாகவும் கவலையாகவும் உணர்ந்தது. "மண் மிகவும் கடினமாக இருந்தால் என்ன செய்வது? நான் சரியாக வளர முடியாவிட்டால் என்ன செய்வது? ஒரு புயல் அல்லது விலங்கின் தாக்குதல் வந்தால் என்ன செய்வது? என்று அஞ்சி வேர்கள் சிறிதளவு மட்டும் மண்ணில் செலுத்தி அஞ்சி அஞ்சி வளர்ந்தது. விதை கீழே விழுந்து சில நாட்கள் கடந்தன. முதல் விதை மெதுவாக ஆனால் நிச்சயமாக, அவ்வப்போது புயல் அல்லது வறட்சி இருந்தபோதிலும், உயரமாகவும் வலுவாகவும் வளரத் தொடங்கியது. அது சிரமங்களை எதிர்கொண்டது, ஆனால் அதன் உறுதிப்பாடு அதை செழிக்க அனுமதித்தது. இரண்டாவது விதை, மண்ணில் அதன் இடத்தை இன்னும் பற்றிக் கொண்டது. இந்த மண்ணில் வளம் இருந்தாலும் அது சிறிதும் வளர முயலவில்லை. வேர்களை மண்ணில் பதிவிட ஆழமாகச் செலுத்த பயத்தோடு சிறிது வேர் நீளம் வளர்ந்ததே போதும் என நினைத்தது. காலம் கடந்தது, வறட்சிக் காலம் வந்தது. மண்ணின் மேல்புற ஈரம் காயுமளவு மண் காய்ந்து விட்டது. முதல் விதை ஆழமாக , பயமின்றி வேர்களை செலுத்தியிருந்ததால், ஆழமான மண்ணில் இருந்த ஈரத்தைக் கொண்டு தடையின்றி வளர்ந்து வந்தது. இரண்டாவது விதை, ஆழமாக மண்ணில் வேர்விட அஞ்சி வேர்கள் வளராமல் இருந்ததால் வாடத் தொடங்கியது. இப்போது வேர்களை ஆழமாகச் செலுத்த முயன்றது. தற்போது வறட்சியினால் மண் இருகியிருந்ததால் வேர்களை இப்போது ஆழமாகச் செலுத்த முடியவில்லை. நாட்கள் நகர நகர வறட்சியால் வாடி மடிந்தே போனது. நாமும் அந்த விதைகளைப் போலத்தான். நாம் முதலீடுகளை பெருக்க நமக்கு பல வாய்ப்புகள் உள்ளன. அந்த விதைகளைப் போல நம்மில் சிலர் வாழ்வை நம்பிக்கையுடனும் , சவால்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சரியான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து , நம்பிக்கைக்குரிய ஆலோசகர்கள் மூலம் இளம் வயதிலேயே முதலீடுகள் செய்து, சிறப்பான முறையில் செல்வ வளத்தோடு முதுமைக்காலத்தில் வாழ்கிறார்கள். சிலர் இந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சிறந்ததா? இது பங்கு மார்க்கெட் முதலீடுகள் போல மதிப்பு சரியுமா? இது பற்றி நமக்கு அதிகம் தெரியாதே ? என்று பல சிந்தனைகளால் நம்பிக்கைக்குரிய ஆலோசகரையும் நாடாமல் இதைவிட நிலையான, குறைந்த அளவே வட்டி விகிதம் கொண்ட, வங்கி வைப்புகளில் , அல்லது அதிக வட்டி என்று ஆசையைத் தூண்டும் நம்பிக்கையற்ற திட்டங்களில் முதலீடு செய்து வாழ்கிறார்கள். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் அந்த வங்கி வைப்புத் தொகை தரும் பயன்கள் குறையும்போது வேறு ஏதாவது அதிக வருமானம் தரக்கூடிய முதலீடு உள்ளதா என முயற்சி செய்கிறார்கள். முறையற்ற அதிக வட்டி திட்டங்களில் வட்டி வருமானம் மட்டுமின்றி முதலீடு செய்த தொகையையும் இழந்து விடுகிறார்கள். முதலீட்டுக் காலம் குறைவாக இருப்பதால் , இள வயது முதலீடு போல அதிக லாபம் இல்லாமல் குறைவாகப் பயன் பெறுகிறார்கள். உங்கள் முதலீட்டை சவால்கள் இருந்தாலும் , அதிக வருமானம் தர வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய, சிறந்த ஆலோசனை வழங்க உங்கள் நம்பிக்கைக்குரிய முதலீட்டு ஆலோசகர் திரு ஸ்ரீதர் ராஜசேகர் அவர்கள் தயாராக உள்ளார்கள். அவரை உடனே கீழ்க் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும். நீதி: வாழ்க்கை நிச்சயமற்றதாகவும் தடைகள் நிறைந்ததாகவும் இருந்தாலும், தைரியத்துடனும் உறுதியுடனும் முன்னேறுபவர்கள்தான் செழித்து தங்கள் திறனை நிறைவேற்றுபவர்கள். நீங்களும் வெற்றி பெற்றவராக மாறுங்கள்.

*ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு திட்டமிடல் காலத்தின் கட்டாயம்* 1. முதிர்ந்த வயதில் மருத்துவம் உள்பட செலவுகள் அதிகரிப்பு 2. உயரிய மருத்துவ வசதிகளால் ஆயுள் அதிகரிப்பு 3. சிறு குடும்ப அமைப்பு வயதானவர்கள் தனிமைப்படல். 4. உயர்ந்து வரும் விலைவாசி *ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு* *இனியும் விருப்பமல்ல* - *காலத்தின் கட்டாயம்*