Shree Investments
Shree Investments
February 18, 2025 at 10:11 PM
*ஓட்டை வாளியில் தண்ணீரை வைப்பதால் யாருக்கு என்ன பயன்?* அனறொரு நாள் மதிய உணவின் போது ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், நான் எப்போதும் என் பணத்தை என் வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பேன்... அங்குதான் பாதுகாப்பாக இருக்கிறதாக நான் எண்ணுகிறேன் என்றார். ஒரு ஃபைனான்சியல் ஆலோசகர் என்ற முறையில் சற்று அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்டேன்: ஆபத்தைத் தவிர்ப்பதுதான் உண்மையில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று எண்ணுகிறீர்களா ? என்றேன் . அவர் என் கேள்வியில் இருந்த உள்ளார்ந்த பொருளைப் புரியாதவர்போல குழப்பமாகப் பார்த்தார். நான் அவரிடம் மேலும் விளக்கினேன். உங்கள் சேமிப்பைப் பணவீக்கம் என்ற மிகப் பெரிய ரிஸ்க் சேமிப்பின் மதிப்பை உண்மையில் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்றேன். இது போல் பணத்தைச் குறைந்த அளவே வட்டி தரக்கூடிய வங்கிக் கணக்கில் வைத்திருப்பது ஒரு வாளியில் உள்ள நீர், கண்ணுக்குத் தெரியாத ஓட்டையில் சிறிது சிறிதாக கசிந்து கடைசியில் வாளியில் ஒன்றுமே இல்லாமல் போவது போன்றது என்று அவருக்குப் புரியும் படியாக விளக்கினேன். உங்கள் சேமித்த நிதியின் மதிப்பு குறைவது உங்களுக்குப் புலப்படாமலே மதிப்பிழந்து போவது தெரியாது. ஆனால் அதே சமயம், இன்ன இன்ன வகையான ரிஸ்க் உள்ளது என முன்பே வரையறுத்துக் கூறப்பட்ட திட்டமிடப்பட்ட ரிஸ்க் உள்ள முதலீடுகள் உங்கள் பணம் பணவீக்கத்தை விஞ்சி மதிப்பைக் கூட்டி வளர்வதுதான் நிதர்சனம் என்பதையும் எடுத்துரைத்தேன். உங்களுக்கும் இது போன்ற முதலீட்டு இழப்பு பற்றிய பயம் (RISK OF LOSS AVERSION) உங்களை புத்திசாலித்தனமான நிதி முதலீடுகள் செய்வதிலிருந்து தடுக்கக் கூடாது . *உண்மையில் , எல்லா ஆபத்துகளையும் தவிர்ப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய ஆபத்து*. நீங்களும் உங்கள் பணத்தை நீங்கள் மிகவும் பாதுகாப்பு என்ற ஒரே நிலைப்பாட்டுக்காக சேமிக்கிறீர்களா ? அல்லது முதலீட்டின் வளர்ச்சியை நோக்கி புத்திசாலித்தனமான, முன்கூட்டியே ரிஸ்க் பற்றி எடுத்துரைக்குக்கப்பட்ட முதலீடுகளைச் செய்கிறீர்களா? சற்றே சிந்தித்து இனி முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். நன்றி கட்டுரை உதவி- நரேஷ் வெண்ணெம் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர். மொழி மாற்றம் ஸ்ரீதர் ராஜசேகர்
👍 1

Comments