பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
March 1, 2025 at 10:43 AM
கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் மாண்புமிகு ஐயா *எடப்பாடியார்* அவர்களின் ஆணைகினங்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக அத்தியூரில் நேற்று (27/02/2025) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் B. ஜாகிர் உசேன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை‌.இரா. தமிழ்ச்செல்வன் MA Ex MLA. மற்றும் கழக அமைப்பு செயலாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி நலத்திட்டங்களை வழங்கினர். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகாசி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாகராஜன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் வேப்பூர் (தெ) ஒன்றிய செயலாளர் செல்வமணி தலைமை தாங்கினார். வேப்பூர் (வ) ஒன்றிய செயலாளர் A.K. ராஜேந்திரன் வரவேற்றார். இறுதியில் வேப்பூர் (வ) ஒன்றிய அவைத்தலைவர் A. பாலசுந்தரம் நன்றி உரையாற்றினார்.
❤️ 1

Comments