TownNews360°
TownNews360°
March 1, 2025 at 09:24 AM
*மக்கள் தொகை அடிப்படையில் எம்பி தொகுதி மறுவரையறை:* *தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு* நடப்பாண்டில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் மக்களவை (எம்பி) தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு மக்கள் தொகை கணிசமாக குறைத்திருக்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்து இருக்கிறது. இந்த சூழலில் புதிய தொகுதி வரையறையில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் எம்பி தொகுதிகள் கணிசமாக குறையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 8 முதல் 9 தொகுதிகள், கேரளாவில் 6 , கர்நாடகாவில் 2, ஆந்திராவில் 2 தொகுதிகள் குறைய உள்ளன. அதேநேரம் உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள் அதிகரிக்கப்பட உளளன. பிஹாரில் 11, ராஜஸ்தானில் 7, மத்திய பிரதேசத்தில் 5, மகாராஷ்டிரா, ஹரியாணாவில் தலா 2 தொகுதிகள் அதிகரிக்கப்பட உள்ளன. வரும் 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை (எம்பி) தேர்தல் புதிய தொகுதி வரையறையின்படி நடைபெற உள்ளது. இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநில எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். வடமாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகம் உட்பட தென்னிந்திய மக்கள் அனைவரும் இப்போதே ஓங்கி குரல் எழுப்ப வேண்டும் என்று நடுநிலையாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

Comments