
Vethathiriya Gnanakkudil
March 1, 2025 at 01:43 AM
01-03-2025
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
❓ *கேள்வி: சுவாமிஜி, நாம் வாழும் பூமிக்கருகில் உள்ள சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களுக்கும் சூரியன் மையமாக உள்ளது. மற்ற கோள்களெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருப்பதற்குக் காரணம் கோள்களின் பருமனா? கோள்களின் சுழல் வேகமா?*
✅ *பதில்:* சூரியனுடைய தற்சுழல் வேகம் அதில் அடங்கிய அணுக்களின் கூட்டுத் தொகையைப் பொறுத்தது. அது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வருவது, சூரியனுடைய சுழல் வேகத்தில் தோன்றும் அலை எவ்வளவு தூரம் சுழன்று கொண்டிருக்கிறதோ அந்த அலையில் மிதக்கிற கோள்கள் எல்லாம் அதே வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். ஆனாலும் கோள்களின் பருமனுக்குத் தக்கவாறு களத்தில் பின் தங்கிச் செல்லும்.
சூரியன் 25 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அந்த சுழல் வேகத்தில் வரக்கூடிய அலையானது ஆயிரம் கோடி மைலில் வரை விரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அலையில் எந்தெந்தக் கோள்கள் இருந்தாலும் அது அப்படியே ரெங்கராட்டினத்தில் ஆள் வைத்து சுற்றிக் கொண்டு போவது போல சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் அந்தந்த கிரகத்தின் எடைக்கும், தூரத்திற்கும் தகுந்தவாறுதான் சுற்றுவேகம் வித்தியாசம் ஏற்படும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
2