
Vethathiriya Gnanakkudil
1.1K subscribers
About Vethathiriya Gnanakkudil
Our mission is to implement the Vethathiri Maharishi founded World Community Service Center's, principles, policies and plans. Also to function as a Yoga & Spiritual Education Center. Vaazhga Vaiyagam Vaazhga Vaiyagam Vaazhga Valamudan Valarga Vethathiriyam
Similar Channels
Swipe to see more
Posts

*வாழ்க்கை மலர்கள்: மார்ச் 1* *உலக சமுதாய சேவா சங்கம்* நல்வாழ்வுக்கு வழிகாண வேண்டுமெனில், வாழ்வின் நலக் கேட்டுக்குக் காரணங்களை முதலில் அறிய வேண்டும். பழக்கத்தால் செயலும், கருத்தும் உருவாகி அவற்றுக்கு அடிமையாகி வாழும் மக்களுக்கு விழிப்பூட்டி நல்வழிக்குத் திருப்புவது ஒரு சில நாளில், ஒரு சில மனிதரால் முடியக்கூடிய செயலன்று. ஒரு மனிதன் மக்கள் வாழ்வின் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம். அது சரியானதுதானா என்று நேர்மையில் சிந்தித்து முடிவெடுக்க, விளக்க அறிவு பெற்றவர்கள் உலகில் பெருக வேண்டும். பல துறைகளிலும் பல நாட்டிலும் வாழும் மக்களுடைய அறிவு மயக்க நிலையிலிருந்து விடுபட்டு விளக்க நிலை பெறத்தக்க சூழ்நிலையும், வாய்ப்பும் பெருக வேண்டும். செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் பலரிடம் இன்று உலக நல நோக்கம் மிகுந்து வருகின்றது. அவர்களுடைய ஒத்துழைப்பால் ஓருலகப் பண்பாட்டு அரங்கு நிறுவி அதன்மூலம் திட்டமிட்ட முறையில் மக்கள் பண்பாட்டை உயர்த்த வேண்டும். விஞ்ஞான அறிவு பெருகியுள்ள இக்காலத்தில் இளைஞர்களுடைய உள்ளத்தைத் தொட்டு, ஊக்கி நலம் பெருக்கும் நிறுவனம் செயல் புரிய வேண்டும். ஆம், இதனை யார் தொடங்குவது? எப்படி மக்களை மயக்க நிலையிலிருந்து விளக்க நிலை வாழ்வுக்கு மாற்றுவது? மக்கள் நலம் பேசிப் பேசி மாண்டவர்கள் எண்ணிக்கை கொஞ்சமன்று. சீரிய திட்டங்களும் அவற்றால் விளைந்த பயன்களும் எடுத்துக்காட்ட முடியவில்லையே! மீண்டும் இச்சோர்வு மனப்பான்மையில் வினாக்கள் எழுகின்றன. “உலக சமுதாய சேவ சங்கம்” என்னும் நிறுவனமே தக்க பதிலாக இயங்குகின்றது. *- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி* ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

01-03-2025 *அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்* ❓ *கேள்வி: சுவாமிஜி, நாம் வாழும் பூமிக்கருகில் உள்ள சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களுக்கும் சூரியன் மையமாக உள்ளது. மற்ற கோள்களெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருப்பதற்குக் காரணம் கோள்களின் பருமனா? கோள்களின் சுழல் வேகமா?* ✅ *பதில்:* சூரியனுடைய தற்சுழல் வேகம் அதில் அடங்கிய அணுக்களின் கூட்டுத் தொகையைப் பொறுத்தது. அது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வருவது, சூரியனுடைய சுழல் வேகத்தில் தோன்றும் அலை எவ்வளவு தூரம் சுழன்று கொண்டிருக்கிறதோ அந்த அலையில் மிதக்கிற கோள்கள் எல்லாம் அதே வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். ஆனாலும் கோள்களின் பருமனுக்குத் தக்கவாறு களத்தில் பின் தங்கிச் செல்லும். சூரியன் 25 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அந்த சுழல் வேகத்தில் வரக்கூடிய அலையானது ஆயிரம் கோடி மைலில் வரை விரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அலையில் எந்தெந்தக் கோள்கள் இருந்தாலும் அது அப்படியே ரெங்கராட்டினத்தில் ஆள் வைத்து சுற்றிக் கொண்டு போவது போல சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் அந்தந்த கிரகத்தின் எடைக்கும், தூரத்திற்கும் தகுந்தவாறுதான் சுற்றுவேகம் வித்தியாசம் ஏற்படும். வாழ்க வளமுடன்!! *அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி* (நாளையும் தொடரும்) ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

*Daily A Noble Thought - March 01* *World Community Service Center* To have a good life, at first we should know the reasons causing harmful life. For people who are slave to habits and have thoughts and actions based on it, it is not possible to create awareness and divert to good path, in some specific timeframe by some specific set of people. Someone can find medicines for diseases of life. But, to assess and decide whether it is just and proper, many conscious and knowledgable people, need to grow in society. The opportunity and environment should grow for people at various countries, at various departments, on the need to get out of illusion, get clarity. This high aim of world welfare, is growing amongst many wealthy, political leaders, businessmen, authors & scientists. With their cooperation, a ‘one world cultural centre’ to be formed, through that, the people’s culture should be enhanced in a planned way. At this advanced scientific age, the centre should function by touching the mind, invoking for welfare. Yes, who would start this? How to change people from illusionary state to awakened state? It is not small in count who spoke about welfare of people and got killed. Could not show the examples of proper schemes and their benefits. The questions are raised again in this tiring mindset. ‘World Community Service Center’ is the entity functioning as the right answer. *- Vethathiri Maharishi* Delhi NCR Simplified Kundalini Yoga Trust - www.fb.com/sky4peace ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

*அன்பர்கள் ஒரு வேண்டுகோள்* வாழ்க வளமுடன் உங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்களை ஸ்கை யோகா அடிப்படைப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற செய்ய கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு அலைபேசி எண்கள்: 9486950099, 8668081296, 9487145599 வாழ்க வளமுடன்

*⚛️ காந்த தத்துவம் ⚛️* *10. முற்றறிவு _(நேற்றையத் தொடர்ச்சி)_* மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள் கூறும் சிவம், சக்தி என்ற இணைப்பாற்றல் விளக்கத்திற்கும் கவர்ச்சி எழுச்சி (Attractive Force and Repulsive Force) என்ற கூட்டாற்றல் விளக்கத்திற்கும் பொருத்தமானதாக காந்த ஆற்றல் அமைந்து விட்டது. காந்த ஆற்றலை உணர்ந்து கொண்டால் தத்துவ ஞானிகள் கூறிய பேரியக்க மண்டல இயக்க உண்மைகளையும் விஞ்ஞானிகள் கூறிவரும் பேரியக்க மண்டல இயக்க உண்மைகளையும் உணர்ந்து கொள்ளலாம். எனவே காந்த தத்துவ ஞானம் மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒன்றாக இணைக்கும் ஒரு அறிவுப் பாலமாக விளங்குகிறது. காந்த தத்துவத்தையும், அதன் மூலம் பேரியக்க மண்டல பரிணாம தத்துவத்தையும் எளிதாக விளங்கிக் கொள்ள சுருக்கமான வழியைக் கூறுகிறேன். ஒரு மனிதனை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். பரு உடல், உயிர், சீவகாந்தம், வெளியாகவும் அறிவாகவும் விளங்கும் இருப்புநிலை என்ற நான்கு நிலைகளை ஒரு மனித உருவில் உணர்ந்து கொண்டால் போதும். பரு உடலோ பலகோடி நுண்ணியக்க மூலக்கூறான “விண்” துகளின் கூட்டுதான். விண் என்பது மிக நுண்ணிய சுழலலை. நுண்ணிய சுழலலையானது இருப்பு நிலையான பரவெளியின் நுண் பகுதியேயாம். இங்கு மேலும் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. சுழலலையிலிருந்து எழும் விரிவலை இருப்பு நிலையோடு கூடி காந்தம் எனும் பேராற்றலாக மலர்ந்திருக்கிறது. இந்தப் பேராற்றலை மறந்துவிட்டால் பேரியக்க மண்டல பரிணாமத் தொடரில் எந்த உண்மையும் கிட்டாது. இறைநிலையிலிருந்து உயிர்களின் பரிணாமம் வரையில் ஊடுருவிய ஆற்றலாக விளங்குவது காந்த ஆற்றல். விண் துகளின் மையத்தில் அமைந்துள்ள இருப்பு நிலை அதைச் சுற்றி அமைந்துள்ள வெளியையும், பேரியக்க மண்டலம் முழுதும் இயங்கும் விண் துகளின் மையப்புள்ளிகளையும் பேரியக்க மண்டலத்திற்கு அப்பால் நிலவும் சுத்தவெளியையும் இணைத்துக் கொண்டு ஒரே பொருளாக நிற்கின்றது. இதே போன்று விண்ணின் சுழலலை அதன் விரிவலை, இதே போன்ற எல்லா விண் துகள்களின் அலைகள் அனைத்தையும் இணைத்துக் கொண்டு ஒரு ஓய்வில்லாத நெடும் இயக்கமாக இருக்கின்றது. எனவே அலையும் ஒன்றுதான். நிலையும் ஒன்றுதான். இந்த அலை, நிலை எங்கு எவ்வளவு விகிதத்தில் கூடுகின்றதோ அதற்கு ஏற்ப அதன் தன்மாத்திரைகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் இவை மலர்ச்சி சென்று ஒன்றில் ஒன்றாக, ஒன்றொடொன்று இயக்க விரைவில் பலவாக, புலன்களுக்கெட்டும் தோற்றங்களில் பலவாக விளங்குகின்றன என்ற தெளிவை இந்த காந்த தத்துவப் பத்தாவது கவி விளக்குகிறது. இங்கு மற்றுமொரு உதாரணம் கூறுகிறேன். நாம் வசிக்கும் பூமியான நில உருண்டையைப் பார்க்கிறோம். எத்தனைக் கண்டங்கள், எத்தனை ஆயிரம் தீவுகள் உள்ளன. அதேபோல எத்தனை ஆயிரம் கடல்களும் நீர் நிலைகளும் உள்ளன. உண்மையில் ஒரே நிலம். ஒரே கடல். ஆங்காங்கே நிலமும் நீரும் ஒன்றை ஒன்று மீறி முனைந்து நிற்கும் காட்சியே, நிலங்கள் பலவாகவும், நீர் நிலைகள் பலவாகவும் விளங்குகிறது. ஒரே ஒரு நிலம், ஒரே ஒரு கடல் எவ்வாறு பல விரிவுகளாகத் தோன்றுகிறதோ, அதே போல்தான் ஒரே ஒரு இருப்பு நிலை, அதன் ஒரே ஒரு ஆற்றலான அலைநிலை, இரண்டின் கூட்டு இயக்கத்தில், அலையின் முனைப்பிலுள்ள வேறுபாடுகளே பலகோடி தோற்றங்களாகப் பிரிந்து காணப்படுகின்றன. (காந்த தத்துவம் – “11. பிறவிப் பயனை எய்த காந்த ஞானம் வழி செய்யும்” நாளை தொடரும்) *அன்புமிக்க அருள் விளக்கத் தொண்டன்* *- வேதாத்திரி* ✖️ K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana 🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907 📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/ 🔔 ▶️ https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil 🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01 📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

*அனைவருக்கும் யோகா - 8 முதல் 80 வயது உள்ளவர்கள் வரை கற்றுக்கொள்ளக்கூடிய ஸ்கை யோகா (SKY YOGA) பயிற்சிகள்* 1️⃣ *பயிற்சி துவங்கும் நாள்: 01-03-2025* *இதில் நீங்கள் கற்றுக்கொள்ளும் பயிற்சிகள்* *வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய* 🔸 உடல் ஆரோக்கியம் மேம்பாட்டுக்கான - எளியமுறை உடற்பயிற்சி 🔸 ஆயுள் நீடிக்க செய்யும் - சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி 🔸 அமைதியான மனம் பெற உதவும் - எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள். 🔸 குருவின் மேன்மை, வாழ்த்தும் பயனும், உணவில் ஒழுங்கு, மன அழுத்த மேலாண்மை ஆகிய பாடங்களும் நடத்தப்படும். 🔸 ஒவ்வொரு வகுப்பும் பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும். 🔸 பயிற்சி நிறைவின்போது சான்றிதழ்கள் வழங்கப்படும். 2️⃣ *கீழ்க்கண்ட வியாதிகள் கட்டுக்குள் வருவதற்கும் குணமாவதற்கும் இப்பயிற்சி உதவும்:* 1. மனஅழுத்தம் 2. சர்க்கரை நோய் 3. மாரடைப்பு 4. உடல் பருமன் 5. ரத்த அழுத்தம் 6. குழந்தைப்பேறின்மை 7. ஆஸ்துமா 8. மூட்டுவலி 9. ஒவ்வாமை 10. மகளிர் நோய்கள் 11. போதைப் பழக்கங்கள் 12. ஞாபகமறதி 13. உயர்வுதாழ்வு மனப்பான்மை மேலும் நம் வாழ்வியல் முறையால் ஏற்படும் உடல், உயிர், மனம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 3️⃣ *தகுதி:* 🔺 பதிநான்கு வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 🔺 கர்ப்பிணி பெண்கள் தேவைப்பட்டால் காயகல்பப் பயிற்சியினை மட்டும் கற்றுக் கொள்ளலாம். 4️⃣ *பயிற்சி துவங்கும் நாள்:* *01-03-2025* 5️⃣ *பயிற்சி நேரங்கள்:* காலை 6.00 - 7.30, 10.30 - 12.00, மாலை 5.30 - 7.00 6️⃣ *உடை:* * ஆண்கள்: பேண்ட்,சட்டை/டீசர்ட் * பெண்கள்: சுடிதார்,சேலை 7️⃣ *இடம்:* *கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை* 11,ஞானக்குடில், இ.எம்.ஜி. நகர், கோ.புதூர், மதுரை - 625007 (ஐயப்பன் கோவில் அருகில்) 8️⃣ *அலைபேசி: 9486950099, 8668081296, 9487145599* _🟣 ஏற்கனவே பயிற்சி எடுத்தவர்கள் தேவைப்பட்டால் மறுபயிற்சியில் கலந்துகொள்ளலாம்._