த.வெ.கஆத்திவிளை 🔵
த.வெ.கஆத்திவிளை 🔵
February 11, 2025 at 02:55 PM
வன்மையாக கண்டிக்கிறோம் மாத்தூர் தொட்டி பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான மற்றும் நீளமான பள்ளத்தாக்கு பாலம் ஆகும் . இந்தப் பாலம் ஆனது திருவட்டார் பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ள அருவிக்கரை வருவாய் கிராமத்தின் குக்கிராமத்தில் மாத்தூரில் அமைந்துள்ளது. இந்த பாலம் ஆனது காமராஜர் காலத்தில் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த பாலத்தில் உள்ள பள்ளக்கால்வாய் மலையின் ஒரு பக்கத்திலிருந்து மலையின் மறுபக்கத்திற்கு பாசனத்திற்காக தண்ணீரை கொண்டு செல்கிறது. இந்த பாலம் ஆனது காமராஜரின் அயராத முயற்சியால் வறட்சி நிவாரண நடவடிக்கையாகவும் இந்த பாலம் கட்டப்பட்டது. அதன் நினைவாக பாலத்தின் அளவுகளும் காமராஜரின் பொன்மொழிகளும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பாலத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டது. இதன் மூலம் காமராஜருக்கு விவசாயத் துறையில் உள்ள நாட்டத்தை காண்பிக்கிறது. இதனால்தான் தமிழக வெற்றி கழகம் காமராஜரை கொள்கை தலைவராக கொண்டுள்ளது. இன்று மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் பெயர் குறித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது இச்செயலை தமிழக வெற்றிக் கழகம் வன்மையாக கண்டிப்பதோடு காவல்துறை மற்றும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். என்றும் தளபதி வழியில் *A.மோனிஷ்.BE* தக்கலை ஒன்றிய தலைவர் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் தமிழக வெற்றி கழகம்♥️💛❤️ கன்னியாகுமரி மத்திய மாவட்டம் @tvkrajeshrajan

Comments