Sammil Majeed
Sammil Majeed
February 5, 2025 at 06:09 PM
https://www.facebook.com/share/p/1QS6Q8NNQL/ "ஆரம்பக் காலங்களில் இறைவனின் வழிகாட்டுதலை உணராத அஞ்ஞானம், அன்றைய மக்களின் பழங்கால நாடோடி வாழ்க்கையோடு தொடர்புடையதாகக் கருதப்பட்டது. நிச்சயமாக அந்த வாழ்க்கையின் பாதிப்பு அம்மக்களின் மீது இருந்தது. நாடோடி வாழ்க்கையின் மரபுகளும் சம்பிரதாயங்களும் பெருமளவில் அந்த மக்களின் நடைமுறையை உருவாக்கும் காரணங்களாக அமைந்தன. இஸ்லாமிய நெறியை நோக்கி அழைப்பவர்களுக்கும், இறை வழிகாட்டுதலை உணராத அறிவிலிகளுக்கும் மத்தியில் கடுமையான ஒரு போராட்டத்தை இவை உண்டாக்கின. என்றாலும், அது மிகத் தெளிவான ஒன்றாக அமைந்துவிட்டது. மனித நல்லியல்பானது அறியாமை, அகம்பாவம் என்னும் மேகங்களின் திரையைக் கிழித்துக்கொண்டு இஸ்லாமிய அழைப்புக்குச் செவிசாய்த்தது; இறை நம்பிக்கை, இறை மறுப்பு ஆகிய இரண்டுமே மிகத் தெளிவான முறையில் பிரித்தறிவிக்கப்பட்டது. இன்றைய மனித குலம் எந்த விதமான நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகளின் பக்கமும் கவனம் செலுத்தாத அசிரத்தையான போக்கையும், உதறித்தள்ளும் பொறுப்பற்ற தன்மையையும் கொண்டிருக்கிறது. அத்தோடு வெளிவேஷம், வெற்று பாவனை, நயவஞ்சகம், ஏமாற்று, இழிநிலை ஆகிய பிணிகளாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. இறைவனின் பக்கம் மக்களை அழைக்கும் உயரிய பாதையில் இவைதான் தடைகளாக உருவெடுத்து நிற்கின்றன. இறை நெறியை நேரிய முறையில் செயல்படுத்தும் வழியில் இவைதான் பெரும் முட்டுக்கட்டைகளாகத் திகழ்கின்றன. இவற்றையும், இவற்றை ஒத்த வேறு விசயங்களையும் நாம் புறக்கணிக்கவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது. ஏனெனில், இஸ்லாமிய வழியில் முயல்வோர் சாதகமான போக்குகளை மட்டுமே நினைத்துப் பிரமித்துப்போய், பாதகமான போக்குகளைக் கண்டுகொள்ளாமல் தம்மைத் தகுந்த முறையில் தயார்படுத்திக்கொள்ளத் தவறிவிடக் கூடாது. இறைவழியில் முயல்வோர் தம்மிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய அம்சம் ஒன்றே ஒன்றுதான்: இறையச்சம். இறைவனின் உள்ளமை பற்றிய முழுமையான உணர்வு, இறைவனுடன் நேராக ஒத்துழைத்தல் (அவனுடைய சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் பூரணமாக நிறைவேற்றுதல்), "நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி அளிப்பதை நாம் நம்மீது கடமையாக்கிக்கொண்டோம்" (30:47) என்ற தெளிவான இறை வாக்குறுதியில் முழுமையான நம்பிக்கை வைத்தல் போன்றவையே இறைவழியில் முயல்வோர் பெற வேண்டிய அடிப்படை அம்சங்களாகும்." -- சையித் குதுப் "இஸ்லாமிய வாழ்க்கை நெறி" நூலிலிருந்து ... வெளியீடு: சீர்மை Follow us 👇 https://linktr.ee/seermainoolveli வாட்சப்வழி நூல் ஆர்டர்களுக்கு: +91-97904 11844 Join my WhatsApp channel 👇 https://whatsapp.com/channel/0029Va6AXT2K5cDLlMrwML3t
❤️ 👍 5

Comments