
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
February 28, 2025 at 03:39 PM
. . . . . . . . . . . . . .
குங்கிலியம் சாம்பிராணி இரண்டும் வேறு வேறு
குங்கிலியம் சாம்பிராணி
இவை இரண்டுமே நறுமணங்கொண்டவை.
.
வடஇந்தியாவின் இமயமலை அடிவாரத்திலுள்ள காடுகளிலும், தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்திலுள்ள காடுகளிலும் விளையக் கூடிய கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம் என அழைக்கப்படுகிறது.
நாட்டு மருந்துக்கடைகளில் காய்ந்த நிலையில் குங்கிலியம் கிடைக்கிறது. குக்கில், குக்கிலியம் என்ற மாற்றுப் பெயர்களும் குங்கிலியத்திற்கு உண்டு.
குங்கிலியம் தெய்வத்திற்கு மிகவும் பிடித்த வசனைப் பொருளாகும். ஆவாகண சாதனையில் உபயோகிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த, ஒரு சிறப்பான வாசனை தரும் பொருளாகும்.
பறங்கி மரம் - இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் சாம்பிராணி எனப்படும்.
சாம்பிராணி என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் ஆகும்
குங்கிலியம் சாம்பிராணி இவை இரண்டையும் சம அளவாக எடுத்து சுத்தி செய்து, மாத்திரையாக 750mg இரண்டு தடவை நாள் ஒன்றிக்கு உள்ளுக்குள் சாப்பிட்டால் தோல், மூட்டுக்கு சிறந்தது. அழற்சியை குணப்படுத்தும், வீக்கத்தை நீக்கும், வலியை குறைக்கும்.
இதே அளவுப்படி குங்கிலியத்தை மட்டும் மாத்திரையாக உட்கொண்டால் மேற் சொன்ன நன்மைகளுடன் தேகத்தில் நல்ல வாசம் வீசும்.
சங்கத்தமிழ் சிவசக்தி குழு
https://kutumbapp.page.link/aPKz1fA4nv3TtYSJ8?ref=DG4CJ