
தமிழீழ வேங்கை
February 19, 2025 at 07:06 AM
20.02.2011 நினைவு நாள்
2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் 16ஆம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள்.
மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக் களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான் தான் அவர் அன்னை’ என்று மெல் லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த இராணுவம், அவர்கள் இரு வரையும் பனாகொடைக்கே கொண்டு போய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித் தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.
https://www.eelavenkai.com/2011/02/blog-post_27.html?m=1
🙏
❤️
6