தமிழீழ வேங்கை WhatsApp Channel

தமிழீழ வேங்கை

373 subscribers

About தமிழீழ வேங்கை

www.Eelavenkai.com என்பது “தமிழீழவேங்கை” என்ற பெயரில் அறியப்படும் ஒரு வலைப்பதிவு ஆகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், மற்றும் நினைவுகளைப் பகிர்கிறது. வலைப்பதிவில் தலைவர் பிரபாகரன், மாவீரர்கள், தியாகிகள், மற்றும் தமிழீழ படைத்துறைகள் பற்றிய பல்வேறு பதிவுகள் உள்ளன. இந்த வலைப்பதிவு தமிழீழம் மற்றும் அதன் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Similar Channels

Swipe to see more

Posts

தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
3/1/2025, 8:28:38 AM

லெப்.கேணல் அகிலாவின் வீர வரலாற்று நினைவுகள் எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான். எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான போராளி. https://www.eelavenkai.com/2025/03/blog-post_01.html?m=1

🙏 ❤️ 👍 6
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/14/2025, 8:23:54 AM

14.02.1987 வீரவணக்க நாள் இவருடன் சேர்த்து மேஜர் ஜேம்ஸ் மற்றும் கப்டன் சுந்தரி உட்பட இவரது குடும்பத்தில் மூன்று மாவீரர்கள். வாசு அண்ணா பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீட மாணவர். கல்வியறிவு குறைந்தவர்கள்தான் ஆரம்ப காலங்களில் புலிகள் அமைப்பில் இணைந்ததாக புலிகள் இயக்கம் குறித்து தவறான ஒரு அபிப்பிராயம் பலரால் அவ்வப்போது பேசப்படுவதுண்டு. அது தவறான புரிதல். https://www.eelavenkai.com/2025/02/blog-post_2.html?m=1

🙏 ❤️ 👍 6
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/13/2025, 10:37:58 PM

14.02.1987 வீரவணக்க நாள் 1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். https://www.eelavenkai.com/2012/02/blog-post_13.html?m=1

🙏 ❤️ 5
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/13/2025, 9:23:34 AM

13.02.2008 வீரவணக்க நாள் எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன் கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். https://www.eelavenkai.com/2024/12/blog-post_24.html?m=1

🙏 ❤️ 7
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/14/2025, 5:24:16 AM

14.02.1987 வீரவணக்க நாள் எமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான். தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா.... என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும். https://www.eelavenkai.com/2012/02/blog-post_12.html?m=1

🙏 ❤️ 4
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/14/2025, 6:53:12 AM

21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன. https://www.eelavenkai.com/2025/02/blog-post_14.html?m=1

🙏 ❤️ 6
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/12/2025, 9:21:58 PM
❤️ 🙏 9
Image
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/14/2025, 8:15:59 PM

15.02 வீரவணக்க நாள்… ஆயுதப் பயிற்சிக்காக தமிழிழத்திற்கு சென்றார். அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி சிங்களப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பல்வேறு வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கேற்றார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பினார். https://www.eelavenkai.com/2011/03/blog-post_5869.html?m=1

❤️ 🙏 8
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/14/2025, 3:13:37 PM

"இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்" என்பார்கள். கண்முன்னே பழகியிருந்துவிட்டு போனவர்கள் சிலரை மீளக் காணக் கிடைப்பதில்லை. "லீவில" வாற அண்ணையாக்கள்/அக்காக்களைக் கண்டால் தனிமரியாதை தானாக உருவாகும். உடையணிதலிலும் தலைவாருதலிலும் ஓர் நேர்த்தியிருக்கும். மணிக்கூட்டை உள்வளமாகத் திருப்பிக் கட்டியிருக்கிறார் என்பதே உலக அதிசயமாகப் பார்க்கப்படும். பெரிதாகப் பேசமாட்டார்கள், அமெரிக்கா, கனடாவிலிருந்து பத்துவருசத்துக்கு ஒருமுறை வருபவர்களைவிடவும், இயக்கத்தில இருந்து லீவில வீட்ட வாறவருக்கு மரியாதை பத்துமடங்கு அதிகம். எப்போது திரும்பிச் செல்லுவோம் என்றும் சொல்வதில்லை. "அடுத்தமுறை நான் வருவனோ, Body வருதோ தெரியா .." என இலகுவாகச் சொல்லிச் சென்றுவிடுவார்கள். அருகில் எங்காவது சண்டைச் சத்தம் என்றாலோ, கனபேர் வீரச்சாவாம் என்றாலோ "ஆர் பெத்த பிள்ளையளோ" என முழு ஊருமே ஏங்கும் அன்புக்குரியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அதிலும் கூந்தலை நறுக்கிய இளம் பெண்கள், இடுப்பில் இராணுவப்பட்டியும் கழுத்தில் குப்பியும் அணிந்த "போற்றுதற்குரிய நவநாகரிகம்" இந்த மண்ணில் மட்டுமே உருவானது💥 ஊர்திகளைச் செலுத்திவருவது ஆணா/பெண்ணா என அடையாளம் காணமுடியாத் தேசமாக அது இருந்தது. தோள்களில் ஏந்தப்பட்ட ஆயுதங்களும் இருபாலாருக்கும் ஒன்றுதான், ஆனால் ஆண் உளச்சீர்மை கொண்ட ஆணாகவும், பெண் கலாசாரமும், கற்பும், கீர்த்தியும் தவறாத பெண்ணாகவும் இருந்தார்கள். அங்கேயும் காதலித்தவர்கள் உண்டு, ஆனால் திருமணத்தின் பின்பும் மண்ணைக் காதலித்த காதலர்களாக இருந்தார்கள். மதுவும், புகையும், சீட்டாட்டமும் அற்ற உலகின் ஒரேயொரு இராணுவத்தின் அங்கத்துவர்களாக அவர்கள் மகிழ்ந்திருந்தார்கள். நண்பரின் புதைகுழிகளில் மண்போட்டபின்பு, அழுதுகலங்காத நட்பாக இருந்தார்கள். அந்த நட்பின் கனவையும் சேர்த்துத் தோளில் தாங்கும் தோழர்களாக வாழ்ந்தார்கள். காவியங்களிலும், கற்பனைகளிலும் கதைகளிலும் மட்டுமே கேட்ட சம்பவங்களை அவர்கள் "வரலாறுகளாக" எழுதித்தீர்த்தார்கள்🖤 அவர்களாயிருக்க எல்லோராலும் இயலாது. அது தனித்தன்மைகளின் பிறப்பிடம்; தாகங்களின் தோற்றுவாய்❣ Copie

❤️ 🙏 11
Image
தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
2/13/2025, 8:52:38 AM

காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை…….நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல. https://www.eelavenkai.com/2025/02/blog-post_13.html?m=1

❤️ 🙏 5
Link copied to clipboard!