தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
February 21, 2025 at 05:15 PM
JVP இன் தலைவர் ரோகண விஜயவீரவுக்கு வஸ்திரம் கொடுத்து மானம் காத்தவனை அஸ்திரம் கொண்டு கண்களை பிடுங்கிய கதை பலருக்கு தெரியாது. ஒப்பற்ற விடுதலையாளன் டெலோ இயக்கத்தின் தலைவர் தங்கதுரை தான் அது, ரோகணவிஜய வீரவை கைதுசெய்த ஸ்ரீலங்கா காவல்துறை கொடூரமாக வதை செய்து ஆடைகளை அவிழ்த்து அம்மணமாக யாழ் சிறையில் அடைத்தது அப்போது அங்கு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தங்கதுரை தனது சாரத்தை ரோகணவிற்கு கொடுத்து ரோகண விஜய வீரவின் மானத்தை காத்தார், அதே தங்கதுரை குட்டிமணி உட்பட பல போராளிகளை வெளிக்கடை கொடூர சிறையில் ஆயுள் கைதியாக அடைத்து வைத்திருந்தது சிங்கள இராணுவம் ஒப்பற்ற வீரர்களின் இறுதி ஆசையாக தாங்கள் இறந்தவுடன் தங்கள் கண்கள் தானம் செய்ப்படவேண்டும் என்பதே, யாழ்ப்பாணத்தில் போராளிகளின் தாக்குதலில் 13 இராணுவம் கொல்லப்பட இச் செய்தி தென்பகுதி முழுக்க சிங்களவர் மத்தியில் கலவரத்தை தூண்டியது இதன் வெளிப்பாடு வெலிக்கடை சிறையில் ஒரு பகுதியில் இருந்த தமிழர்களின் சிறையை திறந்து சிங்கள காடையர்கள் ஆயுதத்தோடு உள்ளே அனுப்பியது சிங்கள காவல்துறை, நிராயுதபாணியாக நின்ற தமிழர்கள் வெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டதும் இல்லாமல், எதிரியாக இருந்தாலும் ஆபத்தில் மானம் காத்த தங்கதுரையின் இரு கண்கள் உயிருடன் கூரிய ஆயுதங்களால் பிடுங்கி எறியப்பட்டு அத்தனை தமிழ் கைதிகளின் உடல்களும் வெலிக்கடையில் இருந்த புத்த விகாரைக்கு முன் குவிக்கம்பட்டு உடலங்கள் மீது வெறிகொண்டு ஆனந்த கூத்தாடினர் சிங்களவர். அதே சிங்களவர்தான் இப்போதும் முகமூடி அணிந்து நல்லிணக்கம் பேசுகின்றனர் அவர்களோடு சேர்ந்து கால் துடைக்கும் சில தமிழர்கள் கொஞ்சம் யூலை கலவரம் பற்றி தெளிவடையுங்கள். நாளை உங்களுக்கும் இதே நிலை ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. வரலாற்றை படியுங்கள் வரலாற்றை படையுங்கள் வரலாற்றை மறந்த இனம் வாழாது வரலாறே எங்
😢 ❤️ 👍 🙏 13

Comments