Indhu Novels
Indhu Novels
May 17, 2025 at 12:52 PM
*"வேலனின் வஞ்சியவள்.. 𝟰𝟵",* - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.page.link/AgveC1j5AWxckdDU7 (50+ கமெண்ட் சரசரன்னு வந்தா, இரவு எபிலாக் வந்திடும் 🙈) "அச்சாரமே போடல, அதுக்குள்ள பாப்பா ஆசையா.. அது வரும் போது வரட்டும் நீ மாமாவ மொத சரியா கவனி டி.. அதுக்கு முன்னாடி இந்த வளவி எப்டி இருக்குனு சொல்லேன்" குழந்தை பேச்சை மாற்றி, அவன் நெஞ்சில் நண்டு விளையாடிய கரத்தை பற்றி இதழில் ஒற்றிக்கொண்ட வேலன், வழவழக்கும் மனைவி கையில் வழுவிய தங்க வளையலை முன்னும் பின்னும் தள்ளி அதன் ஓசையை கேட்டு ஆவலாக பைரவி முகம் பார்த்தான். "ப்ச்.. சொல்ல மாட்டேன் போ.." "ஏன் டி.." "உனக்காக புது புடவையெல்லாம் கட்டி ரெடியாகி இருந்தேன்.." என்றாள் கன்னங்கள் புசுபுசுக்க. மனைவி சொன்னதை கேட்டு கள்ளப் புன்னகை சிந்திய வேலன், "நேத்திக்கு கட்டி இருந்தியே சிவப்பு சீல, ந்நா பாக்க இடுப்பு மறைப்ப எறக்கிவுட்டு இதுக்கும் அதுக்கும் அசையும் போது ரோஜா கூட்டமே அசையிற மாறி அம்புட்டு அழகா இருந்த புள்ள.. அதுக்கும் முந்தனநாளு, ஊதா நெறத்து தேவததேன்..
❤️ 2

Comments