
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
May 29, 2025 at 02:04 PM
நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து
இந்த மந்திரத்தையும் எண்ணையும் ஒரே ஒருமுறை எழுதி வைத்தால் போதும். மகாலட்சுமியின் அருண் கடாட்சம் ஏற்பட்டு செல்வம் பெருக்கெடுக்கும்.
https://chat.whatsapp.com/KMDNStn1PenBi7ENYRF7OK
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை பயன்படுத்தி அந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். அதன் அடிப்படையில் ஒரு மந்திரத்தையும் அதிர்ஷ்ட எண் என்று கூறக்கூடிய எண்ணையும் சேர்த்து எழுதும்பொழுது அதற்குரிய பலன் நமக்கு அபரிவிதமாக கிடைக்கும். அந்த வகையில் செல்வ வளத்தை அதிகரிப்பதற்கு உதவக்கூடிய மந்திரத்தையும் எண்ணையும் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் அந்த தெய்வ வழிபாட்டுடன் அந்த தெய்வத்திற்குரிய மந்திர வழிபாட்டையும் நாம் செய்ய வேண்டும். மந்திரங்கள் தெரியவில்லை என்றாலும் அந்த தெய்வத்தின் பெயரை மந்திரமாக உச்சரித்து அர்ச்சனை செய்வது பல மடங்கு பலனைத் தரும். ஜாதகத்தையே எண் கணிதம் என்றுதான் கூறுகிறோம். நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்கள் சூட்சுமமான எண்கள் என்று கூறப்படுகிறது. அந்த எண்களை நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொழுது அந்த கிரகத்தின் அருளை நம்மால் பெற முடியும். இதன் அடிப்படையில் தெய்வத்திற்குரிய மந்திரத்தையும் கிரகங்களுக்குரிய எண்ணையும் பயன்படுத்தி செல்வ வளத்தை அதிகரிப்பதற்குரிய ஒரு வழிமுறையை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த மந்திரத்தையும் எண்ணையும் ஒரே ஒருமுறை எழுதினால் போதும். என்று எழுத வேண்டும்? சந்திரனின் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய நாட்களில் எழுத வேண்டும். சந்திரனின் சக்தி முழு நிலவாக இருக்கக்கூடிய பௌர்ணமி தினத்திலும், அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளிலும் அதிகமாகவே இருக்கும். இந்த இரண்டு நாட்களை தவிர்த்து மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றும் இதை நாம் எழுதலாம்.
இதற்கு நமக்கு ஒரு இலை வேண்டும். அதுதான் பிரியாணி இலை. பிரியாணி இலையில் நாம் எதை எழுதினாலும் அது நமக்கு பல மடங்காக கிடைக்கும் என்பதால் நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுத வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். அதனால் பிரியாணி இலையில் இந்த மந்திரத்தையும் எண்ணையும் நாம் எழுதும் பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். கிழியாத, மடங்காத, நல்ல பிரியாணி இலையாக இருக்க வேண்டும். இந்த பிரியாணி இலையில் பச்சை நிற மை கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தையும் எண்ணையும் எழுத வேண்டும்.
இதை எழுதக்கூடிய நேரம் ஆனது ராகு கால, எமகண்ட நேரத்தை தவிர்த்து நல்ல நேரத்தில் எழுத வேண்டும். பௌர்ணமி, மூன்றாம் பிறை, வளர்பிறை வெள்ளிக்கிழமை இந்த மூன்று நாட்களில் எந்த நாளை நாம் தேர்வு செய்கிறோமோ அந்த நாளில் வரக்கூடிய நல்ல நேரத்தில் பிரியாணி இலையில் பச்சை நிற பேனாவை பயன்படுத்தி பின்வரும் இந்த மந்திரத்தையும் எண்ணையும் எழுத வேண்டும். எழுதி முடித்த பிறகு அதை அப்படியே மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து முழு மனதோடு பணவரவு அதிகரிக்க வேண்டும், செல்வ வளம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அதை நீங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பணம் வைத்து எடுக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும்.
இதை பீரோவில் வைப்பதாக இருக்கும் பட்சத்தில் தினமும் பீரோவை திறந்து இந்த இலையில் இருக்கக்கூடிய மந்திரத்தையும் எண்ணையும் பார்க்க வேண்டும். ஒருவேளை பிரியாணி இலை கிடைக்கவில்லை என்பவர்கள் நல்ல கோடு போடாத வெள்ளை நிற பேப்பரில் கூட எழுதி வைக்கலாம். எப்பொழுது இந்த இலை கிழியும் சூழ்நிலைக்கி வருகிறதோ? அப்பொழுது அதை எடுத்து எரித்துவிட்டு மறுபடியும் புதிதாக பௌர்ணமி, மூன்றாம் பிறை, வளர்பிறை வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் எழுதி திரும்பவும் வைக்க வேண்டும்.
**மந்திரமும் எண்ணும்**
“ஸ்ரீம் 2918”
சுத்தமாக இருக்கும் நாட்களில் மேல் சொன்ன அந்த மந்திரத்தை முழுமனதோடு கூறுவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1155212536?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ