⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
May 31, 2025 at 03:42 AM
நவநாரிகுஞ்சரம் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்! நவநாரிகுஞ்சரம் என்பதில் நவ என்றால் ஒன்பது, நாரி என்றால் பெண், குஞ்சரம் என்றால் யானை. இந்த சிற்பத்தில் ஒன்பது பெண்கள் வெவ்வேறு முகபாவனையை கொண்டு யானை போன்ற வடிவத்திற்குள் காட்சியளிப்பார்கள். சிற்பக்கலையில் இது ஒரு வகை. குறிப்பிட்ட சில கோவில்களில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். இந்த அரிய வகை சிற்பத்தை தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் உள்ள ஸ்ரீ கனககிரீஸ்வரர் ஆலயத்தில் காணலாம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாத சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் உள்ளது. இந்த சிற்பத்தில் முதலில் நம் கண்களுக்குத் தெரிவது யானை உருவமே! கொஞ்சம் சற்று உற்றுப் பார்த்தால் ஒன்பது பெண்களின் உருவம் இதில் தெரியும். ஒவ்வொரு பெண்களின் முகத்திலும் ஒவ்வொரு முகபாவனை தெரியும். நவரசத்தையும் தங்களது முகத்தில் வைத்து காட்சி தருகிறார்கள். நவரசம் என்பது நகை, அழுகை, இளிவரை, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவவை, அமைதி ஆகியவையாகும். இதை முகபாவனை மூலம் வெளிப்படுத்தலாம். அத்தகைய முகபாவனைகள் கொண்ட பெண்களே நவநாரிகுஞ்சர சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளனர் என்பதே இந்த சிற்பத்தின் சிறப்பாகும். இப்படி நவரச உணர்வையும், தங்கள் முகத்தில் காட்டும் இந்தப் பெண்கள், யானை போல தங்களை வடிவமைத்துக் கொள்ளும் சிற்பக்கலையே, நவநாரி குஞ்சரம். ஆலயங்களில் அமைந்திருக்கும் இந்த நவநாரிகுஞ்சரம் சிற்பம் என்ன தத்துவத்தை சொல்ல வருகிறது? வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இந்த குணங்கள் வந்து போகும். எந்த உணர்வு வந்தாலும், யானை போல் வலிமையுடன் இருந்து, அதற்கு காரணமான நிகழ்வை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, இத்தகைய சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இதை கோவில்களில் வைக்க காரணம், நாம் தான் சமாளித்தாலும், இறை சித்தப்படி தான் எல்லாம் நடக்கும். எனவே, இறைவனைச் சரணடைந்து, இந்த குணங்கள் வர காரணமாக எந்த நிகழ்வு வந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றலைத் தர வேண்டும் என, வேண்டிக் கொள்ள வேண்டும். வேண்டும். இந்த சிற்பங்கள் இருக்கும் கோவில்களுக்கு சென்று வாருங்கள்; இறைவனை வணங்கி, தெளிவான மனநிலையைப் பெறுங்கள். சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1155375820?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
Image from ⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡: நவநாரிகுஞ்சரம் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்!  நவநாரிகுஞ்சரம் என்பதில் ...

Comments