⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 4, 2025 at 04:41 PM
**வெள்ளிக்கிழமை விநாயகருக்கு இந்த 5 தீபங்களை ஏற்றினால், 5 கோடி ரூபாய் கடன் கூட, 5 நாளில் அடைத்து விடலாம்.** https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு சொந்தமான நாள். இந்த நாளில் விநாயகரை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்தால், உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும். அது மட்டும் இல்லாமல் மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட மாட்டீர்கள். கிரக சூழ்நிலை காரணமாக நீங்கள் கடன் வாங்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும், எவ்வளவு பெரிய கெட்ட நேரம் வந்தாலும் சரி, அதை சரி செய்ய இந்த வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். **வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு** 5 மண் அகல் விளக்குகள் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்து விளக்குகளிலும் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வடக்கு திசை நோக்கி இந்த தீபத்தை வைக்க வேண்டும். விநாயகர் எந்த திசையில் அமர்ந்திருந்தாலும் சரி, உங்கள் தீபச்சுடர் வடக்கு திசை நோக்கி எரியும் படி வைத்துவிட்டு, அந்த கோவிலிலேயே சிறிது நேரம் அமர்ந்து, விநாயகரை மனதார பிரார்த்தனை செய்து உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டத்தை விநாயகரிடம் சொல்லி அந்த பண பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் போதும். வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த தீபத்தை நீங்கள் ஏற்றலாம். அடுத்தபடியாக கிழக்கு திசை நோக்கி நின்று கொள்ளுங்கள். உங்களுடைய முன்னோர்களை மனதார நினைத்து அவர்களிடம் ஒரு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். எப்படியாவது வருமானம் பெருக வேண்டும். ஏதாவது ஒரு வழியில் பணம் கைக்கு வந்தால் போதும். என்னுடைய கடனை சுலபமாக அடைத்து விடுவேன் அதற்கான வழியை காட்டுங்கள் என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு வழக்கம் போல விநாயகருக்கு அருகம்புல் கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து விநாயகர் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாடு, பரிகாரம் இவ்வளவுதான். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுக்க வேண்டும் என்றாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுக்கு யாராவது பணம் தர வேண்டும், கொடுத்த பணம் வரவில்லை என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து பலன் அடையலாம். மிக மிக எளிமையான பரிகாரம். ஒரே ஒரு வெள்ளிக்கிழமை செய்துவிட்டு பலனை முழுமையாக எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள். 11 வெள்ளிக்கிழமைகள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். இந்த வார கணக்கு முடிவதற்குள்ளாகவே உங்கள் பண பிரச்சனை தீர்ந்துவிடும். அப்படி இடையில் ஒரு வாரம் உங்களுக்கு பண பிரச்சனை தீர்ந்தாலும், அந்த 11 வாரம் வெள்ளிக்கிழமையும் தவறாமல் விநாயகருக்கு சென்று இதே போல ஐந்து தேங்காய் எண்ணெய் தீபங்கள் போட்டு விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. https://chat.whatsapp.com/KMDNStn1PenBi7ENYRF7OK நீங்கள் விளக்கு ஏற்றும் விநாயகர் கோவிலில் ஸ்தலவிருட்சம் இருந்தால், ரொம்ப ரொம்ப நல்லது. இந்த வழிபாட்டை எல்லாம் முடித்துவிட்டு, பிரார்த்தனை எல்லாம் முடித்துவிட்டு, அந்த மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து பாருங்கள். குழப்ப நிலையில் இருந்து சுலபமாக வெளி வருவீர்கள். குழப்பம் தீரும் போது பிரச்சனைக்கான தீர்வும் சுலபமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1155789515?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ

Comments