
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 5, 2025 at 01:21 AM
சாளக்ராம வழிபாடு
சாளக்ராமம் என்பது முதுகில் கருங்கல் போன்ற பொருளுடன் பிறந்து, வளர்ந்து பெரிதாக உருவாகி தெய்வத்தன்மையுடன் கூடிய உயிரினம்.
இது நத்தை, சங்கு, பவழம், ஆகியன தன் உடலில் ஒரு கூட்டை உருவாக்குவது போல, தன் உடலில் உறுதியான கருங்கல்லை முதுகில் கொண்டு பெரிதாக வளர்ந்து உருவாவதாகும்.
தெய்வத்தன்மை கொண்ட உயிரினமான சாளக்ராமங்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாக போற்றப்படுகின்றன.
சைவ சமயத்தினரால் நர்மதை நதியில், பாணலிங்கம் தெய்வத்தன்மையுடன் உருவாதல் போல, கண்டகி நதியில் உற்பத்தியாகும் சாளக்கிராமங்கள் வைணவ சமயத்தினரால் தெய்வத்தன்மை கொண்டதாக வழிபாட்டுக்கு உகந்தவையாக போற்றப்படுகின்றன.
இவை இமயமலையில் கண்டகி நதியில், சாளக்ராமம் எனும் பகுதியில் தோன்றி உருவாவதால், இவைகளுக்கு "சாளக்ராமம்" என்றே பெயர் பெற்று விளங்குகிறது.
சாளக்ராமம் என்பது நெல்லிக்கனி அளவு முதல் ஆறடிக்கு மேல் உயரம் கொண்டுள்ளதாக வளர்வதாகும்.
இந்தக் கல்லின் மேற்புறம் முதல் நடுப்பகுதி வரை ஒரு மெல்லிய துளை (ஈர்க்கு நுழையும் அளவு) இருக்கும்.
உட்புறம் சங்கு, சக்கரம், தாமரை, ஆகிய விஷ்ணுவின் சின்னங்களைக் கொண்டதாக இருக்கும்.
இதன் துவாரத்தின் மேற்புறம், விஷ்ணுவுக்கு வனமாலை இருப்பது போல, பந்தளவு உடைய சாளக்ரமாத்தின் மேல் தானாகவே மாலையைச் சார்த்தியது போல இருப்பது "லக்ஷ்மி நாராயண சாளக்ராமம்" எனப் பெயருடையதாகும்.
மேலே மாலையில்லாமல், வழவழப்புடன், உட்புறம் விஷ்ணுவின் சின்னங்களைக் கொண்டிருப்பது "லக்ஷ்மி ஜனார்த்தனம்" என்பதாகும்.
சாளக்ராமத்தை, தமது ஜாதகப் பலன்படி, தக்க வகையில் வீட்டில் பூஜிப்பவர்கள் விரும்பும் பலன்கள் அனைத்தையும் பெற்று வருவது அனுபவ பூர்வமான உண்மை ஆகும்.
சாளக்ராம சிலைகள் மூலவராக அமையப்பெற்ற ஆலயங்கள், தரிசிக்கும் பக்தர்களுக்கு விரைவில் பலன் தரும் ஆலயங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
உதாரணமாக, ப்ருந்தாவனத்தில் ஸ்ரீ க்ருஷ்ணரின் மூலவர் சிலை சாளக்ராமத்தால் ஆனது.
தஞ்சை மாரியம்மன் கோயில் எனும் ஊரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் ஆலய மூலவர் சிலை (ஆறடி உயரம் உள்ளது) சாளக்ராமத்தினால் ஆனது.
முன்பு குறிப்பிட்டது போல், இந்த சிலையின் உச்சியில் ஒரு துளை உள்ளது. அந்தத் துளை சுமார் 3 1/2 அடி ஆழத்திற்கு, ஒரு ஈர்க்குச்சி மட்டுமே நுழையக் கூடியதாக உள்ளது.
இது அனைவரும் தரிசிக்க வேண்டிய சாளக்ராம மூலவர் ஆலயம் ஆகும்.
இந்த சாளக்ராமத்தில் குறை உள்ளது அனேகம். தோஷங்கள் உள்ள சாளக்ராமங்களை - நல்ல குருவின் ஆலோசனை கொண்டு - நீக்கி, நல்லதைப் பெற்று, பூஜித்து பலனடைய வேண்டும்
எவ்விடத்தில் சாளக்ராமம் பூஜிக்கப்படுகிறதோ அங்கு எல்லா தெய்வங்களும் தமது அருள் அனைத்தையும் அளிப்பார்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
நன்றி
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1155812495?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
