Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 9, 2025 at 01:54 AM
🦉இதே ஜூன் 9.,1981 "பண்ணாராய்ச்சி வித்தகர்" எனவும் "ஏழிசைத் தலைமகன்" எனவும் "திருமுறைச் செல்வர்" எனவும் போற்றப்பட்ட குடந்தை ப.சுந்தரேசனார் காலமான தினமின்று!🥲 சங்க இலக்கியப் பாடல்களில் புதைந்துகிடந்த தமிழ் இசை பற்றிய உண்மைகளை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆராய்ந்து வெளிப்படுத்தியவர் தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவார். இவர் ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டு, தமிழர்களிடையே இசையார்வம் தழைக்க உழைத்தவர். கடந்த நூற்றாண்டில் தமிழ்இசைக்குத் தொண்டாற்றிய அறிஞர்களை நினைவு கூர்கையில் சுந்தரேசனாரின் பங்கு மகத்தானது; போற்றுதற்குரியது. ஆனால் அனாரின் தமிழிசைப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் போதிய அளவில் இடம்பெறாமை ஒரு குறையே ஆகும். பரிபாடல், சிலப்பதிகாரம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரப் பனுவல், சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைநுட்பங்களைப் பாடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் விளங்கினார்கள். தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்த தமிழன்பர்கள் இப்பெருமகனாரின் இசையார்வம் அறிந்து இயன்ற வகையில் துணைநின்றுள்ளனர். ஆயினும் இப்பெருமகனாரின் முழுத்திறனையும் எதிர்காலத் தமிழ்க் குமுகம் முற்றாக அறியும் வண்ணம் இவர் நூல்கள் பாதுகாக்கப்படாமல் போனமையும் தமிழிசை உரைகள் காற்றில் கரைந்தமையும் நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.
Image from Aanthai Reporter News Channel: 🦉இதே ஜூன் 9.,1981  "பண்ணாராய்ச்சி வித்தகர்" எனவும் "ஏழிசைத் தலைமகன்" ...

Comments