Kanimozhi Karunanidhi
June 6, 2025 at 08:45 AM
தனித்துவமும், சமூக நலனும் ஒன்றிணையும் போது தான் உண்மையான மாற்றம் உருவாகிறது. அந்த மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில், 'புத்தொழில் களம்' போட்டியில் வெற்றிபெற்ற விளாத்திகுளத்தைச் சேர்ந்த தனேஷ் கனகராஜ் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் அணுகக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில், அனைத்து தரப்பினரும் சமமாக பயன்படுத்தக்கூடிய இடங்களாக மாற்றுவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
தனேஷ் அவர்களின் இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இத்தகைய மக்கள்நல செயல்பாடுகள், மேலும் பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
#puththozhilkalam
👍
❤️
🙏
😮
50