Kanimozhi Karunanidhi
20.2K subscribers
Verified ChannelSimilar Channels
Swipe to see more
Posts
Yesterday, I attended the High Tea hosted by Hon’ble Prime Minister Narendra Modi for members of parliamentary delegations on Operation Sindoor and shared our experiences from the visits to foreign nations.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திராவிட மாடல் முதலமைச்சர் அண்ணன் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் குறித்தும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தும் உரையாற்றினேன். இந்நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜா ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ராணி ஸ்ரீகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்கவேலு மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள மதிப்பிற்குரிய முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜா ஈஸ்வரன், தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஜெயபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று உரையாற்றினேன். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் திருமிகு. கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்கண்டேயன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.