Jothimani MP

Jothimani MP

328 subscribers

Verified Channel
Jothimani MP
Jothimani MP
May 28, 2025 at 07:33 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்புக்குரியது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், குற்றங்களும், கடுமையாகவும்,விரைவாகவும் கையாளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வழக்கில் காவல்துறையும் நீதிமன்றமும் விரைவாகச் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. நீதிமன்றம் குற்றவாளி ஞானசேகரனுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் என்று நம்புகிறேன். இந்த நேரத்தில் கொடுமையான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், நெஞ்சுரத்தோடு நீதி கேட்டு நின்ற சகோதரியையும், அவர் குடும்பத்தினரையும் அன்போடும்,நன்றியோடும் நினைவு கூர்கிறேன். செ. ஜோதிமணி எம்.பி
❤️ 👍 3

Comments