
Jothimani MP
May 29, 2025 at 03:30 PM
இன்று 29.05.2025 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA),
எனது தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தோம். கல்வி, மருத்துவம்,சுகாதாரம், வங்கிக் கடன், விவசாயம், நீர் மேலாண்மை,சுய உதவிக் குழுக்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தடுக்க உயர்மட்டப் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினேன்.
கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இஆப திட்ட இயக்குநர் திருமிகு. ஸ்ரீலேகா தமிழ்ச் செல்வன், வருவாய் கோட்டாட்சியர் திருமிகு. சுவாதி ஸ்ரீ, மாநகராட்சி ஆணையர் திருமிகு. சுதா, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செ. ஜோதிமணி எம்.பி
❤️
2