
கதம்பம்
June 9, 2025 at 02:13 AM
*வரலாற்றில் இன்று*
*09 ஜூன் 2025-திங்கள்*
*==========================*
68 : ரோமப் பேரரசர் நீரோ தற்கொலை செய்துகொண்டார்.
1534 : ஜாக் கார்டியர் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் வரைபடத்தை வரைந்தார்.
1667 : இரண்டாவது ஆங்கிலேய - டச்சுப் போர் :- மெட்வே மீதான டச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது.
அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.
1762 : பிரிட்டன் படைகள் ஹவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
7 ஆண்டு போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.
1772 : பிரிட்டன் பாய்மரக் கப்பல் காஸ்பி ரோட் தீவில் தீக்கிரையானது.
1815 : வியன்னா மாநாடு முடிவடைந்தது.
புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது.
லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1873 : இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்ஸாண்ட்ரா அரண்மனை தீயினால் அழிந்தது.
1885 : சீன - பிரெஞ்சுப் போரை முடிவுக்கு கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு ஏற்பட்டது.
1900 : இந்திய தேசியவாதி பிர்சா முண்டா பிரிட்டன் சிறையில் காலராவினால் உயிரிழந்தார்.
1903 : அநுராதபுரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
40 பேர் கைது செய்யப்பட்டனர்.
1923 : பல்கேரியாவில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 : ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் முதல் முறையாக சார்லஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் விமானத்தில் கடந்தார்.
1936 : இலங்கையில் யாழ்ப்பாண நகர சபைக் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர் :- பிரான்ஸில் துல்லே என்ற இடத்தில் 99 பொதுமக்கள் ஜெர்மனிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போர் :- பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.
1946 : பூமிபால் அதுல்யாதெச் தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1953 : அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் சூறாவளித் தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.
1959 : முதலாவது அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஜார்ஜ் வாஷிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1964 : லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராக பதவி ஏற்றார்.
1965 : டங்கனிக்கா குடியரசாகியது.
1967 : ஆறு நாள் போர் :- இஸ்ரேல் சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகளை கைப்பற்றியது.
1972 : அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பெருமழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.
1980 : எம்.ஜி. ராமச்சந்திரன் இரண்டாவது முறையாக தமிழக முதல்வரானார்.
1989 : சிட்னியில் லூனா பூங்காவில் கோஸ்ட் ரயில் தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
1999 : கொசோவோ போர் :- மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
2009 : பாகிஸ்தான், பெஷாவரில் உணவு விடுதியில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
2010 : ஆப்கானிஸ்தான், காந்தஹாரில் திருமண வீட்டில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர்.
70 பேர் காயமடைந்தனர்.
👍
1