கதம்பம்
கதம்பம்
June 9, 2025 at 02:13 AM
*வரலாற்றில் இன்று* *09 ஜூன் 2025-திங்கள்* *==========================* 68 : ரோமப் பேரரசர் நீரோ தற்கொலை செய்துகொண்டார். 1534 : ஜாக் கார்டியர் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் வரைபடத்தை வரைந்தார். 1667 : இரண்டாவது ஆங்கிலேய - டச்சுப் போர் :- மெட்வே மீதான டச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது. 1762 : பிரிட்டன் படைகள் ஹவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தன. 7 ஆண்டு போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது. 1772 :  பிரிட்டன் பாய்மரக் கப்பல் காஸ்பி ரோட் தீவில் தீக்கிரையானது. 1815 : வியன்னா மாநாடு முடிவடைந்தது. புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது. லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1873 : இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்ஸாண்ட்ரா அரண்மனை தீயினால் அழிந்தது. 1885 : சீன - பிரெஞ்சுப் போரை முடிவுக்கு கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு ஏற்பட்டது. 1900 : இந்திய தேசியவாதி பிர்சா முண்டா பிரிட்டன் சிறையில் காலராவினால் உயிரிழந்தார். 1903 : அநுராதபுரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர். 1923 : பல்கேரியாவில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 1928 : ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் முதல் முறையாக சார்லஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் விமானத்தில் கடந்தார். 1936 : இலங்கையில் யாழ்ப்பாண நகர சபைக் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. 1944 : இரண்டாம் உலகப் போர் :- பிரான்ஸில் துல்லே என்ற இடத்தில் 99 பொதுமக்கள் ஜெர்மனிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் :- பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது. 1946 : பூமிபால் அதுல்யாதெச் தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார். 1953 : அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் சூறாவளித் தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர். 1959 : முதலாவது அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஜார்ஜ் வாஷிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1964 : லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராக பதவி ஏற்றார். 1965 : டங்கனிக்கா குடியரசாகியது. 1967 : ஆறு நாள் போர் :- இஸ்ரேல் சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகளை கைப்பற்றியது. 1972 : அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பெருமழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர். 1980 : எம்.ஜி. ராமச்சந்திரன் இரண்டாவது முறையாக தமிழக முதல்வரானார். 1989 : சிட்னியில் லூனா பூங்காவில் கோஸ்ட் ரயில் தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். 1999 :  கொசோவோ போர் :- மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில்  கையெழுத்திட்டது. 2009 : பாகிஸ்தான், பெஷாவரில் உணவு விடுதியில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். 2010 : ஆப்கானிஸ்தான், காந்தஹாரில் திருமண வீட்டில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.
👍 1

Comments