கதம்பம்
கதம்பம்
June 11, 2025 at 01:34 AM
*கேள்விக்கு பதில்* ✅✅✅✅✅✅✅ https://whatsapp.com/channel/0029Va8vNof6xCSX54K2ad0W/10845 உதடு ஒட்டாத குறள்கள் மொத்தம் எத்தனை ❓ சரியான விடை *24* உதடு ஒட்டாத குறட்பாக்கள் பெரும்பாலானோர் ஒரு குறளை மட்டுமே கூறுவார்கள் குறிப்பாக யாதனின் யாதனின் நீங்கியான் என்று குறளைக் கூறுவார்கள் ஆனால் உதடு ஒட்டாத திருக்குறள் மொத்தம் 24 உள்ளன. 208, 240, 286, 310, 341, 419, 427, 472, 489, 516, 523, 678, 679, 894, 1080, 1082, 1177, 1179, 1211, 1213, 1214, 1236, 1286, 1296. குறள் எண் : 208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று. குறள் எண் : 240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். குறள் எண் : 286. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர். குறள் 310: இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். குறள் எண் : 419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது. குறள் 427: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். குறள் 472: ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். குறள் 489: எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். குறள் 516: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். குறள் எண் : 523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. குறள் எண் : 678. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. குறள் எண் : 679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். குறள் 894: கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். குறள் எண் : 1080. எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. குறள் எண் : 1177. உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். குறள் 1179: வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். குறள் எண் : 1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. குறள் 1213: நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். குறள் 1214: கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. குறள் எண் : 1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. குறள் 1286: காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. குறள் எண் : 1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.
👍 🙏 👌 👏 😁 7

Comments