
Let's talk with றாம்
May 13, 2025 at 04:43 AM
நண்பர் Mohammed Ibrahim-ன் பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; நன்றாகப் பேசினீர்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் உரையை ஆழமாக உள்வாங்கி அதையே பதிவாகவும் எழுதி உள்ளார்; மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா ❤️
அவருடைய பதிவு:
கவிப்பித்தன் அவர்களின் சிறுகதைகளில் உள்ள சில பொதுப்படையான விடயங்களை வைத்துக்கொண்டு, அதில் ஒவ்வொன்றாக எடுத்து விவரித்த விதமும், அவை ஒவ்வொன்றுக்கும் உதாரணங்களாக அவரின் கதையை முன்வைத்து அதிலிருக்கும் நுட்பத்தை சுட்டிக்காண்பித்த இடங்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. அதே போல அவரின் கதைகளில் இருக்கும் மற்றமைகள் பற்றி இருக்கும் தனித்தன்மையும், மற்ற மனிதர்களின் வாழ்வியலை அவர் காண்பிக்கும் விதமும் வியப்புகளின் உச்சம். அதே போல அவரின் கதைகளில் இருக்கும் அந்த நிலத்தின் தெய்வங்கள், திருவிழாக்கள் என அந்த நிலம் சார்ந்து இருக்கும் பல வாழ்வியல்களை அவர் கதையாக்கியதில் அது ஆவணமாக இருந்தாலும் அந்தக் கதைகளுக்குள் இருக்கும் மனிதர்களின் வாழ்வும் வெளிபடுகிறது என தங்களுடைய வாழ்வியலோடு பொருந்தும் இடமும் அருமையாக வெளிபடுத்தி இருந்தீர்கள், றியாஸ் குரானாவும் தங்களுடைய உரையை சுட்டிக் காண்பித்து பேசியதும் மகிழ்ச்சி.
வாழ்த்துகள் Rram Santhosh Vadarkkadu 😍
https://youtu.be/b-AqhUukcEc?si=xE8k0ojHu9yD9b0K
❤️
2