
Let's talk with றாம்
60 subscribers
About Let's talk with றாம்
This channel is a space to share my writings and connect with you more personally 😌
Similar Channels
Swipe to see more
Posts

வாசிப்புப் பழக்கம் அதிகம் இல்லாத என் ஆத்ம நண்பரிடமிருந்து வந்த செய்தி இது; அப்படியானவர்களையும் இந்த உரை கவர்ந்ததில் மகிழ்ச்சி. கூடவே இதில் ஓர் உயர் விளிப்பும் உள்ளது; அதை கடைசியாய் இரண்டாம் பருவம் வாசித்துவிட்டு ஒரு வாசகர் சொன்னார்... 🥹 மகிழ்ச்சி ❤️


ஓர் எழுத்தாளனின் நாள் இப்படித் தொடங்குவதை பெரிதும் விரும்புகிறவன் நான் 🤩 எழுத்தாளர் கவிப்பித்தன் கதைகள் குறித்த எனது சமீபத்திய உரை குறித்து கவிஞர் இமாம் அத்னான் இந்நாளின் வைகறை பொழுதில் எழுதிய வார்த்தைகள் இவை; மிக்க அன்பும் நன்றியும் Imam Adhnan இதுபோன்ற மனமார்ந்த வார்த்தைகளே என்னை தொடர்ந்து இயங்க வைக்கின்றன... ❤️🫂 தமிழ்நாடு கடந்து இலங்கை வரை இந்த உரை சென்றிருப்பதற்குக் காரணம் Shruti Ilakkiyam அவர்களுக்கு எனது இப்போதைக்குமான அன்பு ❤️ அவருடைய கடிதம்: //உரையினைப் பார்த்தன். முழுவதுமாகக் கேட்பதற்கான கொக்கி போட்டு நகர்த்தியிருக்கீங்க. எங்கும் தொய்வும் சலிப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும். (இந்த நடுச்சாமத்திலும் முழுவதுமாக பார்த்துவிடத் தூண்டிய உரை) கதையில் அக்கறைக்கொள்ள வேண்டிய புள்ளிகளை ஒப்பீட்டு அணுகுமுறையில் விபரித்துச் செல்வது உரையின் ஈர்ப்புக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அத்துடன் இடையிடையே சேர்த்துவிடும் அந்த நடிப்பும் பாவனைகளும் லவ் யூ சொல்ல வைக்கிறது. வாழ்த்துக்கள். மேடைப் பேசிசுக்கும் கச்சிதமாய் தயாராகிட்டீங்க தோழர். There are lots to share. Hope to talk to u over the phone call.// https://www.facebook.com/share/p/1FR8RsFid2/?mibextid=oFDknk

கடல் தாண்டி வந்த மற்றுமொரு ஒரு செய்தி; நான் மதிக்கும் ஓர் ஆளுமையிடமிருந்து கிடைத்த முதல் பாராட்டு இது ❤️


எனது உரை குறித்த மற்றுமொரு கடிதம் 💚 என்னை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது; அதிலும் இந்தக் கடிதத்திற்கு அடுத்த உரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட வார்த்தைகள் 🥹 --- கடிதம்:: Hey Rram 😍... உரை இப்போ தான் கேட்டு முடிச்சேன்.. கவிப்பித்தனை நான் வாசிச்சதே இல்ல. ஆனா இப்போ வாசிக்கனும் னு ஆச வந்துருக்கு. ஜிகிட்டி புத்தகம் வாங்கிருக்கேன். ஆனா வாசிக்கல. விடுதிக்கு வரவும் முதல் வேலை அத வாசிக்குறது தான். 53 நிமிஷம் பேசியிருக்கீங்க. நா கூட என்னடா 53 நிமிஷமா னு முதல்ல பயந்துட்டேன். ஆனா கேக்க கேக்க நேரம் போனதே தெரியல. அவ்வளோ நல்ல அவதானிப்புகள் றாம். நீங்க உங்க பேருக்கு பின்னால வடார்க்காடு னு ஏன் சேர்த்தீங்கனு சொல்ல ஆரம்பிச்சதுல இருந்து உரை முழுக்க உங்க ஊரு பத்தி எழுதியிருக்கிற கதைகள் பத்தி பேசுறோம்ங்குற சிலாகிப்பு ரொம்ப நல்லா தெரிஞ்சது. உரை கேட்டு முடிச்சுட்டு பாத்தா பக்கம் உங்க ஊர் பக்கம் டூர் போன மாதிரி இருக்கு. ஒரு ஒரு கதையையும் உங்க பாணியில விளக்கி சொன்னது, அதனுடைய முடிவுகள ரொம்ப நுணுக்கமா அணுகுனது, கதைகளின் கூறுகளை பிரித்து விரித்து சொன்னது இப்படி எல்லாமே ரொம்ப நல்லாருந்தது. நீலம் ல நீங்க பண்ண நேர்காணல் இன்னும் பாக்கல. இப்போ அதையும் பாக்கனும் னு தோண வச்சுருச்சு இந்த உரை. கவிதைகள் னு இல்லாம, கதைகளுக்குள்ள நீங்க கண்டடையுற விஷயங்கள ரொம்ப அழகா எங்கள வந்து சேந்துருக்கு றாம். உங்கள் வாசிப்பு இன்னும் மென்மேலும் வளரட்டும். மனமார்ந்த வாழ்த்துகள். (இந்தாங்க ரெண்டு பச்சை இதயம் உங்களுக்காக றாம்💚💚 வச்சிக்கோங்க) எழுத்தாளர் கவிப்பித்தனுக்கு என் சார்பான வாழ்த்துகள். -- 😍💚.... நெறையா வாசிச்சு, நெறையா இந்த மாதிரி பேசி, கவிதைகளையும் கதைகளையும் உயிர்க்க வச்சிட்டே இருங்க ப்ரோ..🥳💃🏼... -- Kavi Pithan Needhi Mani https://www.facebook.com/share/p/16aSCCtGRA/?mibextid=oFDknk

இந்தச் செய்தியை அனுப்பியவர் கூடவே எனது உரையில் குறிப்பிட்ட கட்டுரையையும் வாங்கி படித்தார். அதையும் அனுப்பினேன். அதை வாசித்துவிட்டு நீலம் அமர்வில் முதல் கதையாய் எடுத்துக்காட்டிய கதை உங்களிடம் உள்ளதா என்றார். மொழிபெயர்த்தவனிடத்தில் இல்லாமல் போகுமா என்ன? அனுப்புகிறேன் என்றேன். அதையும் அனுப்ப வேண்டும். இப்படி மேற்கோள் காட்டப்படுவற்றையும் தேடி படிப்பவர்கள் வாய்ப்பது சிறப்பு இல்லையா!? ❤️


மழை மீதம் ❤️ உள்ளிடுக்குகள் எங்கும் இருட்டு, நினைவொளி பீய்ச்சி நிரம்பும் நீர்மை கரிப்புச் சுவையாயிருக்கிறது . அறையில் சில வாக்கியங்கள் முதலும் முடிவும் மறந்த சிகைச்சுருள்களாக நகர்கின்றன வாய்த்திருக்கும் வாழ்வு நதியின் போக்கில் நகரும் தனிப்பரிசல் . விரல்களை பிணைத்துக்கொண்டு எப்போதோ கேட்ட பாடல் பட்டாம் பூச்சியென தோளில் அமர்கிறது நிலமிறங்கவியலாத இறகைப் போல நான் எழும்பவும் தாழவும் . உறைந்த தளத்தின்கீழ் செரிந்த உயிர்வாயுவோடு இன்னும் இலகுவாய் நீந்தும் துருவ நில மீன்கள் என் மூச்சுப் பாதையை கொஞ்சம் சீரமைக்க வேண்டும் உன் இன்மையின் உண்மை என்னிருத்தலின் இடும்பை இன்னும் கூடுகிறது முள்நுனி தாங்கியிருந்த மழை மீதம் தொடுவதற்குள் உதிர்ந்துவிட்டது. - கனிமொழி. ஜி Kani Mozhi G தொகுப்பு: ஒளிர்விதை

நண்பர் Mohammed Ibrahim-ன் பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; நன்றாகப் பேசினீர்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் உரையை ஆழமாக உள்வாங்கி அதையே பதிவாகவும் எழுதி உள்ளார்; மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா ❤️ அவருடைய பதிவு: கவிப்பித்தன் அவர்களின் சிறுகதைகளில் உள்ள சில பொதுப்படையான விடயங்களை வைத்துக்கொண்டு, அதில் ஒவ்வொன்றாக எடுத்து விவரித்த விதமும், அவை ஒவ்வொன்றுக்கும் உதாரணங்களாக அவரின் கதையை முன்வைத்து அதிலிருக்கும் நுட்பத்தை சுட்டிக்காண்பித்த இடங்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. அதே போல அவரின் கதைகளில் இருக்கும் மற்றமைகள் பற்றி இருக்கும் தனித்தன்மையும், மற்ற மனிதர்களின் வாழ்வியலை அவர் காண்பிக்கும் விதமும் வியப்புகளின் உச்சம். அதே போல அவரின் கதைகளில் இருக்கும் அந்த நிலத்தின் தெய்வங்கள், திருவிழாக்கள் என அந்த நிலம் சார்ந்து இருக்கும் பல வாழ்வியல்களை அவர் கதையாக்கியதில் அது ஆவணமாக இருந்தாலும் அந்தக் கதைகளுக்குள் இருக்கும் மனிதர்களின் வாழ்வும் வெளிபடுகிறது என தங்களுடைய வாழ்வியலோடு பொருந்தும் இடமும் அருமையாக வெளிபடுத்தி இருந்தீர்கள், றியாஸ் குரானாவும் தங்களுடைய உரையை சுட்டிக் காண்பித்து பேசியதும் மகிழ்ச்சி. வாழ்த்துகள் Rram Santhosh Vadarkkadu 😍 https://youtu.be/b-AqhUukcEc?si=xE8k0ojHu9yD9b0K