Let's talk with றாம்
Let's talk with றாம்
May 13, 2025 at 12:47 PM
எனது உரை குறித்த மற்றுமொரு கடிதம் 💚 என்னை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது; அதிலும் இந்தக் கடிதத்திற்கு அடுத்த உரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட வார்த்தைகள் 🥹 --- கடிதம்:: Hey Rram 😍... உரை இப்போ தான் கேட்டு முடிச்சேன்.. கவிப்பித்தனை நான் வாசிச்சதே இல்ல. ஆனா இப்போ வாசிக்கனும் னு ஆச வந்துருக்கு. ஜிகிட்டி புத்தகம் வாங்கிருக்கேன். ஆனா வாசிக்கல. விடுதிக்கு வரவும் முதல் வேலை அத வாசிக்குறது தான்‌. 53 நிமிஷம் பேசியிருக்கீங்க‌. நா கூட என்னடா 53 நிமிஷமா னு முதல்ல பயந்துட்டேன். ஆனா கேக்க கேக்க நேரம் போனதே தெரியல. அவ்வளோ நல்ல அவதானிப்புகள் றாம். நீங்க உங்க பேருக்கு பின்னால வடார்க்காடு னு ஏன் சேர்த்தீங்கனு சொல்ல ஆரம்பிச்சதுல இருந்து உரை முழுக்க உங்க ஊரு பத்தி எழுதியிருக்கிற கதைகள் பத்தி பேசுறோம்ங்குற சிலாகிப்பு ரொம்ப நல்லா தெரிஞ்சது. உரை கேட்டு முடிச்சுட்டு பாத்தா பக்கம் உங்க ஊர் பக்கம் டூர் போன மாதிரி இருக்கு. ஒரு ஒரு கதையையும் உங்க பாணியில விளக்கி சொன்னது, அதனுடைய முடிவுகள ரொம்ப நுணுக்கமா அணுகுனது, கதைகளின் கூறுகளை பிரித்து விரித்து சொன்னது இப்படி எல்லாமே ரொம்ப நல்லாருந்தது. நீலம் ல நீங்க பண்ண நேர்காணல் இன்னும் பாக்கல. இப்போ அதையும் பாக்கனும் னு தோண வச்சுருச்சு இந்த உரை. கவிதைகள் னு இல்லாம, கதைகளுக்குள்ள நீங்க கண்டடையுற விஷயங்கள ரொம்ப அழகா எங்கள வந்து சேந்துருக்கு றாம். உங்கள் வாசிப்பு இன்னும் மென்மேலும் வளரட்டும். மனமார்ந்த வாழ்த்துகள். (இந்தாங்க ரெண்டு பச்சை இதயம் உங்களுக்காக றாம்💚💚 வச்சிக்கோங்க) எழுத்தாளர் கவிப்பித்தனுக்கு என் சார்பான வாழ்த்துகள். -- 😍💚.... நெறையா வாசிச்சு, நெறையா இந்த மாதிரி பேசி, கவிதைகளையும் கதைகளையும் உயிர்க்க வச்சிட்டே இருங்க ப்ரோ..🥳💃🏼... -- Kavi Pithan Needhi Mani https://www.facebook.com/share/p/16aSCCtGRA/?mibextid=oFDknk
❤️ 2

Comments