
Let's talk with றாம்
May 15, 2025 at 07:17 AM
ஓர் எழுத்தாளனின் நாள் இப்படித் தொடங்குவதை பெரிதும் விரும்புகிறவன் நான் 🤩 எழுத்தாளர் கவிப்பித்தன் கதைகள் குறித்த எனது சமீபத்திய உரை குறித்து கவிஞர் இமாம் அத்னான் இந்நாளின் வைகறை பொழுதில் எழுதிய வார்த்தைகள் இவை; மிக்க அன்பும் நன்றியும் Imam Adhnan இதுபோன்ற மனமார்ந்த வார்த்தைகளே என்னை தொடர்ந்து இயங்க வைக்கின்றன... ❤️🫂
தமிழ்நாடு கடந்து இலங்கை வரை இந்த உரை சென்றிருப்பதற்குக் காரணம் Shruti Ilakkiyam அவர்களுக்கு எனது இப்போதைக்குமான அன்பு ❤️
அவருடைய கடிதம்:
//உரையினைப் பார்த்தன். முழுவதுமாகக் கேட்பதற்கான கொக்கி போட்டு நகர்த்தியிருக்கீங்க. எங்கும் தொய்வும் சலிப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும். (இந்த நடுச்சாமத்திலும் முழுவதுமாக பார்த்துவிடத் தூண்டிய உரை)
கதையில் அக்கறைக்கொள்ள வேண்டிய புள்ளிகளை ஒப்பீட்டு அணுகுமுறையில் விபரித்துச் செல்வது உரையின் ஈர்ப்புக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அத்துடன் இடையிடையே சேர்த்துவிடும் அந்த நடிப்பும் பாவனைகளும் லவ் யூ சொல்ல வைக்கிறது. வாழ்த்துக்கள். மேடைப் பேசிசுக்கும் கச்சிதமாய் தயாராகிட்டீங்க தோழர். There are lots to share. Hope to talk to u over the phone call.//
https://www.facebook.com/share/p/1FR8RsFid2/?mibextid=oFDknk
❤️
1