
Kalaignarist - கலைஞரிஸ்ட்
May 17, 2025 at 03:35 AM
தி.மு.கழகம்..
நிறைய பேருக்கு கழகத்தின் கொள்கை ,இயக்கம் நடந்துவந்த பாதை எதற்காக தொடங்கபட்டது ஏன் தொடரவேண்டும் என்றெல்லாம் தெரியாது.. கலைஞரை பிடித்திருக்கிறது ஸ்டாலின் செயல்பாடுகள் பிடிக்கும் என் அப்பன் காலத்திலிருந்து திமுக அதனால் தொடர்கிறேன் என்போரே அதிகம் ..
..
தி.மு.கழகம் எல்லோரையும் அரவணைக்கும் அது கடமையும் கூட ஆனால் தொடர்ந்து இந்திய ஒன்றியத்தில் மக்கள் தொண்டாற்ற இவ்வியக்கம் நிலைக்க வேண்டுமெனில் மக்களிடம் செல்லவேண்டியது அவசியம்.. ஆனால் பதவி கிடைத்தால் போதும் என குறுகிய வட்டத்திற்குள் செயலாற்றுகிற கூட்டம் பெருக்கெடுத்துநிற்கிறது .. உதயநிதி படத்தை பெருசா போடு.. அவர்களின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என சிலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் .. சின்னவரின் வழியில் செயல்படுவோமென பாட தொடங்கியிருக்கிறார்கள் இந்த காரியகாரர்கள் .. ஆபத்தான போக்கு இது ..
நான் யார் வரவேண்டுமென சொல்வதற்கு வரவில்லை இயக்கம் தனக்கான தலைவனை தயார் செய்யும் .. ஆனால் அதற்காக இப்போதே துதிபாடுவது தலைமைக்கே சங்கடத்தை தரும்..
இன்னொன்று உண்டு இதில்.. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ..
..
நூற்றாண்டு கண்ட இயக்கம் மக்களிடம் செல்வதை குறைத்துக்கொண்டதோ என அஞ்சவேண்டியிருக்கிறது .. தகுதியற்றவர்களின் தரமற்ற பேச்சுகள் மக்களிடம் சலிப்பை தரும்.. இயக்கத்தின் அடித்தளத்தையே அசைத்து பார்க்க பாசிசம் நம் கைகளையே தயார் செய்கிறது .. ஆர்எஸ்எஸ் விரும்பிகள் மெல்ல ஊடுறுவலாம்..
நம் மெத்தனபோக்கு பெரும் விரிசலை தரலாம்.. கொள்கை தெளிவற்ற கோமாளிகள் கட்சியின் முகத்தை சிதைக்கலாம் இந்த இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்கள் எல்லாவற்றிக்கும் தலையசைத்து ஜனநாயகத்தை நீர்த்துபோக செய்வதும் ஜால்ராக்களின் ஓசை செவிப்பறையை கிழிப்பதும் காணும் போது அறிவுடைச் சமூகத்தை வளர்க்க வேண்டியதன் அவசியம் புரிகிறது ..
..
இந்த இயக்கம் மேலாதிக்கத்தை ஒழிப்பதற்கும், அனைவரையும் சுயமரியாதையோடும் சமமாக நடத்தவும் அவர்களின் எல்லா உரிமைகளையும் (கல்வி,வேலைவாய்ப்பு) பெற்றுதரவும் சமுதாயத்தில் ஏற்றதாழ்வற்ற சமநிலையை கொண்டுவரவும் அறிவுடைச் சமூகமாக தமிழினத்தை உயரத்தில் நிறுத்திடவும், தமிழர் வாழ்வு பண்பாடு கலாச்சாரத்தை உலகறிய செய்யவும், தொடங்கபட்டது .. நோக்கம் அறிவோம் இலக்கும் அறிவோம் பகைவர் யாரென அறிவோம் .. ஆனால் தொடர்ந்து நம்மை அழுத்திவரும் பாசிசத்தை இணக்கமாக செல்ல தமிழகத்து இளைஞர்கள் தயாரானது எப்படி .. எங்கே நாம் சறுக்கினோம் .. எதற்காக நம்மோடு இருந்தவர்கள் பகைவர் முன் பல்லிளிக்கிறார்கள் நாம் செய்ய மறந்தது எது என ஆய்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது ..நம் கைகளை கொண்டே நம் கண்களை பறிக்க முயல்கிறார்களே எங்கே தவறு என இயக்கம் உணரவேண்டியது அவசியம் .. எழுத்தும் பேச்சும்,கலந்துரையாடலும், ஆய்வரங்க கூட்டங்களும் தெருமுனை விளக்கங்களும்,திண்ணை பிரசாரமும் கிராமங்களை தேடி நம் தலைவர்கள் இயக்கத்தின் இளைஞர்படையினர் கருத்து பிரசாங்களை செய்ய வேண்டியது அவசியம் .. சின்னவர் வழியில் என செம்படிக்காமல் ஊர்தோறும் மக்களோடு கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் .. மக்களோடு செல் மக்களோடு பழகு மக்கள் சொல் கேள் இதுதானே அண்ணனின் அருள்வாக்கு.. அதை செய்ததால் தானே இன்றைக்கும் உயிர்ப்போடு
தி.மு.கழகம் இருக்கிறது .. கருத்துரிமைக்கு மதிப்பு தந்த இயக்கம் வா இந்த பக்கம் போவோம் என்றால் ஏன் இந்த பக்கம் போக வேண்டுமென கேள்வி எழுப்புவார்கள் என் தம்பிகள் என்றார் அண்ணா .. தனக்கு வரும் எதிர்கருத்துகளையும் அது கட்சியினரிடமே இருந்து வந்தாலும் அதை இன்முகத்தோடு கேட்டு மறுத்தோ ஏற்றோ செயல்பட்டவர் கலைஞர் .. ஆம் கலைஞரைப்போல சிறந்த ஜனநாயகவாதியை இந்திய ஒன்றியத்தில் காண முடியாது
..
தலைவனை இயக்கம் கண்டெத்தும் அதற்கான வரையறைகளை வகுத்து தரும் நாம் மக்களிடையே செல்வோம் இன்னமும் இந்த
இயக்கத்தின் அவசியத்தை மக்களிடையே எடுத்து வைப்போம் .. பாசிசம் நம்மிடையே பிரிவினையே செம்மையாக செய்ய தொடங்கியிருப்பதறிந்து முளையிலேயே கிள்ளியெறிவோம்
..
தி.மு.கழகம் பகுத்தறிவு இயக்கம்
மக்கள் இயக்கம் .. நம்பிக்கையாளர் மறுப்போர் அனைவருக்குமான இயக்கம் .. "தமிழ்நாடு,தமிழர் நலன்,தமிழர் வாழ்வு உயர்வு" மட்டுமே இலக்கு ..
தொடர்ந்து பணிசெய்வோம்
தலைவரின் கரம் பிடித்து..
..
ஆலஞ்சியார்
#நீங்கா_நினைவுகளுடன்
- கலைஞரிஸ்ட்
#எங்கெங்கும்_கலைஞர் 🛡️🔥💥
#kalaignareverywhere 🖤❤️
#கலைஞரிஸ்ட் - #kalaignarist
❤️
🙏
4