
Kalaignarist - கலைஞரிஸ்ட்
271 subscribers
About Kalaignarist - கலைஞரிஸ்ட்
THE FATHER OF MODERN TAMILNADU | நவீன தமிழ்நாட்டின் தந்தை 🔥❤🔥🫡👏 ----------------------------------------------------------------- முத்தமிழறிஞர் | தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பாடும் சமூக வலைத்தள பக்கங்கள் 🔥 Our Fb page : https://www.facebook.com/kalaignarist/ Our X Account : https://twitter.com/kalaignarist?s=09 Our YouTube Channel : https://www.youtube.com/channel/UC2R4MxxCUOdhSNOpFLiHnUQ Our Insta : https://instagram.com/kalaignarist1924?utm Our Blog : https://kalaignarist1924.blogspot.com/?m=1 🖤❤
Similar Channels
Swipe to see more
Posts

கேள்வி: "ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம் என்று கலைஞர் சொன்னாரா?" பதில்: திராவிட இயக்கத் தோழர்களே அடிக்கடி பதற்றத்தோடு கேட்கும் கேள்விகளுள் ஒன்று இது. 05.02.2000 அன்று அரசு அலுவலர்கள் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸில் இணைந்து இயங்குவதை குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதிப்பதை நேரடியாக ஆதரித்து பிரதமர் வாஜ்பாய், "ஆர்.எஸ்.எஸ் ஒரு அரசியல் இயக்கமல்ல. பண்பாட்டு இயக்கம்" என்று பேசிய சூழலில் அதை எதிர்த்து தலைவர் கலைஞர் தந்த பதிலடி இது. நமக்கு எப்படி திராவிடர் கழகமோ, பா.ஜ.கவுக்கு ஆர்.எஸ்.எஸ் அப்படி என்ற பொருளில் பேசிவிட்டு, அதற்கு அடுத்த வரியில் தெளிவாக ஒன்றைச் சொன்னார். "ஒரு வாதத்திற்கு #வாஜ்பாய் சொன்னபடி ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம்தான் என்று வைத்துக்கொண்டாலும், அது நேரடியாக அரசியலில் ஈடுபடும் சமூக இயக்கம். அதனால் அரசு பணியாளர்கள் அந்த இயக்கத்தில் சேருவதை என்னால் ஏற்கமுடியாது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்தக் கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்" என்றார் முதல்வர் கலைஞர். ("....even if it is accepted that the RSS is not a political organisation, just as some social organisations are taking part in politics the RSS is also taking part in politics. I have made it clear that I cannot accept the view that government employees can join the RSS. I still hold this view") பெரியார், அண்ணா காலத்திற்கு பிறகு திராவிட இயக்கத்தின் authority என்றால் அது தலைவர் கலைஞர்தான். அவரை மிஞ்சிய கொள்கைவாதி இங்கே எவனும் இல்லை. இதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டால், எதிரிகள் அவரைப் பற்றி அள்ளி வீசும் எத்தகைய திரிபுவாத அவதூறுகளையும் இப்படி பதற்றமின்றி எதிர்கொள்ளலாம். 🖤❤️ - Ganesh Babu #திராவிட_பேரரசன் 👑 #கலைஞர் 🖋 #கருணாநிதி 🕶💺 #கலைஞரிஸ்ட் - #KALAIGNARIST

தி.மு.கழகம்.. நிறைய பேருக்கு கழகத்தின் கொள்கை ,இயக்கம் நடந்துவந்த பாதை எதற்காக தொடங்கபட்டது ஏன் தொடரவேண்டும் என்றெல்லாம் தெரியாது.. கலைஞரை பிடித்திருக்கிறது ஸ்டாலின் செயல்பாடுகள் பிடிக்கும் என் அப்பன் காலத்திலிருந்து திமுக அதனால் தொடர்கிறேன் என்போரே அதிகம் .. .. தி.மு.கழகம் எல்லோரையும் அரவணைக்கும் அது கடமையும் கூட ஆனால் தொடர்ந்து இந்திய ஒன்றியத்தில் மக்கள் தொண்டாற்ற இவ்வியக்கம் நிலைக்க வேண்டுமெனில் மக்களிடம் செல்லவேண்டியது அவசியம்.. ஆனால் பதவி கிடைத்தால் போதும் என குறுகிய வட்டத்திற்குள் செயலாற்றுகிற கூட்டம் பெருக்கெடுத்துநிற்கிறது .. உதயநிதி படத்தை பெருசா போடு.. அவர்களின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என சிலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் .. சின்னவரின் வழியில் செயல்படுவோமென பாட தொடங்கியிருக்கிறார்கள் இந்த காரியகாரர்கள் .. ஆபத்தான போக்கு இது .. நான் யார் வரவேண்டுமென சொல்வதற்கு வரவில்லை இயக்கம் தனக்கான தலைவனை தயார் செய்யும் .. ஆனால் அதற்காக இப்போதே துதிபாடுவது தலைமைக்கே சங்கடத்தை தரும்.. இன்னொன்று உண்டு இதில்.. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .. .. நூற்றாண்டு கண்ட இயக்கம் மக்களிடம் செல்வதை குறைத்துக்கொண்டதோ என அஞ்சவேண்டியிருக்கிறது .. தகுதியற்றவர்களின் தரமற்ற பேச்சுகள் மக்களிடம் சலிப்பை தரும்.. இயக்கத்தின் அடித்தளத்தையே அசைத்து பார்க்க பாசிசம் நம் கைகளையே தயார் செய்கிறது .. ஆர்எஸ்எஸ் விரும்பிகள் மெல்ல ஊடுறுவலாம்.. நம் மெத்தனபோக்கு பெரும் விரிசலை தரலாம்.. கொள்கை தெளிவற்ற கோமாளிகள் கட்சியின் முகத்தை சிதைக்கலாம் இந்த இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்கள் எல்லாவற்றிக்கும் தலையசைத்து ஜனநாயகத்தை நீர்த்துபோக செய்வதும் ஜால்ராக்களின் ஓசை செவிப்பறையை கிழிப்பதும் காணும் போது அறிவுடைச் சமூகத்தை வளர்க்க வேண்டியதன் அவசியம் புரிகிறது .. .. இந்த இயக்கம் மேலாதிக்கத்தை ஒழிப்பதற்கும், அனைவரையும் சுயமரியாதையோடும் சமமாக நடத்தவும் அவர்களின் எல்லா உரிமைகளையும் (கல்வி,வேலைவாய்ப்பு) பெற்றுதரவும் சமுதாயத்தில் ஏற்றதாழ்வற்ற சமநிலையை கொண்டுவரவும் அறிவுடைச் சமூகமாக தமிழினத்தை உயரத்தில் நிறுத்திடவும், தமிழர் வாழ்வு பண்பாடு கலாச்சாரத்தை உலகறிய செய்யவும், தொடங்கபட்டது .. நோக்கம் அறிவோம் இலக்கும் அறிவோம் பகைவர் யாரென அறிவோம் .. ஆனால் தொடர்ந்து நம்மை அழுத்திவரும் பாசிசத்தை இணக்கமாக செல்ல தமிழகத்து இளைஞர்கள் தயாரானது எப்படி .. எங்கே நாம் சறுக்கினோம் .. எதற்காக நம்மோடு இருந்தவர்கள் பகைவர் முன் பல்லிளிக்கிறார்கள் நாம் செய்ய மறந்தது எது என ஆய்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது ..நம் கைகளை கொண்டே நம் கண்களை பறிக்க முயல்கிறார்களே எங்கே தவறு என இயக்கம் உணரவேண்டியது அவசியம் .. எழுத்தும் பேச்சும்,கலந்துரையாடலும், ஆய்வரங்க கூட்டங்களும் தெருமுனை விளக்கங்களும்,திண்ணை பிரசாரமும் கிராமங்களை தேடி நம் தலைவர்கள் இயக்கத்தின் இளைஞர்படையினர் கருத்து பிரசாங்களை செய்ய வேண்டியது அவசியம் .. சின்னவர் வழியில் என செம்படிக்காமல் ஊர்தோறும் மக்களோடு கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் .. மக்களோடு செல் மக்களோடு பழகு மக்கள் சொல் கேள் இதுதானே அண்ணனின் அருள்வாக்கு.. அதை செய்ததால் தானே இன்றைக்கும் உயிர்ப்போடு தி.மு.கழகம் இருக்கிறது .. கருத்துரிமைக்கு மதிப்பு தந்த இயக்கம் வா இந்த பக்கம் போவோம் என்றால் ஏன் இந்த பக்கம் போக வேண்டுமென கேள்வி எழுப்புவார்கள் என் தம்பிகள் என்றார் அண்ணா .. தனக்கு வரும் எதிர்கருத்துகளையும் அது கட்சியினரிடமே இருந்து வந்தாலும் அதை இன்முகத்தோடு கேட்டு மறுத்தோ ஏற்றோ செயல்பட்டவர் கலைஞர் .. ஆம் கலைஞரைப்போல சிறந்த ஜனநாயகவாதியை இந்திய ஒன்றியத்தில் காண முடியாது .. தலைவனை இயக்கம் கண்டெத்தும் அதற்கான வரையறைகளை வகுத்து தரும் நாம் மக்களிடையே செல்வோம் இன்னமும் இந்த இயக்கத்தின் அவசியத்தை மக்களிடையே எடுத்து வைப்போம் .. பாசிசம் நம்மிடையே பிரிவினையே செம்மையாக செய்ய தொடங்கியிருப்பதறிந்து முளையிலேயே கிள்ளியெறிவோம் .. தி.மு.கழகம் பகுத்தறிவு இயக்கம் மக்கள் இயக்கம் .. நம்பிக்கையாளர் மறுப்போர் அனைவருக்குமான இயக்கம் .. "தமிழ்நாடு,தமிழர் நலன்,தமிழர் வாழ்வு உயர்வு" மட்டுமே இலக்கு .. தொடர்ந்து பணிசெய்வோம் தலைவரின் கரம் பிடித்து.. .. ஆலஞ்சியார் #நீங்கா_நினைவுகளுடன் - கலைஞரிஸ்ட் #எங்கெங்கும்_கலைஞர் 🛡️🔥💥 #KalaignarEveryWhere 🖤❤️ #கலைஞரிஸ்ட் - #KALAIGNARIST

கலைஞர் குறள் வணக்கம் 📒 கலைஞரின் பகுத்தறிவுச் சிந்தனையுடன் கூடிய திருக்குறள் விளக்கவுரை ❤ #கலைஞரிஸ்ட் - #KALAIGNARIST


கலைஞர் குறள் வணக்கம் 📒 கலைஞரின் பகுத்தறிவுச் சிந்தனையுடன் கூடிய திருக்குறள் விளக்கவுரை ❤ #கலைஞரிஸ்ட் - #KALAIGNARIST


கலைஞர் குறள் வணக்கம்📒 கலைஞரின் பகுத்தறிவுச் சிந்தனையுடன் கூடிய திருக்குறள் விளக்கவுரை ❤ #நீங்கா_நினைவுகளுடன் - கலைஞரிஸ்ட் #எங்கெங்கும்_கலைஞர் 🛡️🔥💥 #KalaignarEveryWhere 🖤❤️ #கலைஞரிஸ்ட் - #KALAIGNARIST


கலைஞர் குறள் வணக்கம் 📒 கலைஞரின் பகுத்தறிவுச் சிந்தனையுடன் கூடிய திருக்குறள் விளக்கவுரை ❤ #கலைஞரிஸ்ட் - #KALAIGNARIST


ஜெயித்துக்கொண்டே இரு ; நீ வளரும்வரை அல்ல., உன்னை வெறுத்தவர்கள் உன்னை வாழ்த்தும் வரை 🔥 #KALAIGNARIST 🫶🖤❤️
