
தமிழர் மருத்துவம்🍎
May 14, 2025 at 03:43 PM
https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW
காயசித்தி
நீலத்தாமரைப் பூவின் இதழ்கள், நாக பூவின் இதழ்கள், பொற்சீந்தில் இவை மூன்றையும் நெய், தேனில் கலந்து 48 நாட்கள் தின்று வர, காயசித்தி உண்டாகி, நரை திரை மாறும்.
விழுதியிலையையும் அதன் கிழங்கையும் ஒரு மண்டலம் பசும் பாலில் அரைத்து அந்தி சந்தியில் தின்று வந்தால் காயசித்தி உண்டாகி சரீரத்திலுள்ள நோய்களெல்லாம் விலகும்., சித்தர்களெல்லாம் கேட்டதை எல்லாம் கொடுப்பார்கள்
கொத்தான் என்ற செடிக்கு வேரில்லாமல் இருந்தாலும் அது எவ்விடத்தில் படர்ந்திருக்கின்றதோ அதன் கீழ் எங்கு அக் கொடி நின்றுவிடுகிறதோ அதற்கு நேராக அக் கிழங்குயிருக்கும்.
அதைக் கண்டுபிடித்து அவ்விடத்தில் வரகு வைக்கோலைப் பொட்டு கொளுத்திவிட்டு அதன் பிறகு தோண்டினால் கிழங்கு அகப்படும்.
அதைக் கொண்டு பசும் பாலில் அரைத்து ஒரு மண்டலம் தின்று வந்தால் காயசித்தி உண்டாகும்
வெள்ளெருக்கு சமூலத்தை கொண்டு வந்து பசும் பாலில் அரைத்து அந்தி சந்தியில் 48 நாட்கள் சாப்பிட்டுவர மூன்றுலோகமும் வசியமாகும்.
