தமிழர் மருத்துவம்🍎 WhatsApp Channel

தமிழர் மருத்துவம்🍎

395 subscribers

About தமிழர் மருத்துவம்🍎

தமிழர் மருத்துவம் ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை இங்கு காணலாம்

Similar Channels

Swipe to see more

Posts

தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/17/2025, 11:08:34 AM

மூவிலைத் தைலம் தேவையானவை மருதாணி இலைச்சாறு – 25 கிராம் பொன்னாங்கண்ணி இலைச்சாறு – 25 கிராம் கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 5 கிராம் நல்லெண்ணை – 50 கிராம் செய்முறை மேற்சொன்னவற்றை பெரிய பாத்திரத்தில் இட்டு, காய்ச்சவும். தைல பதத்தில் இறக்கி வடிகட்டி பயன்படுத்தவும் பயன்கள் முடிக்கு பளபளப்பை தரும். முடி உதிர்தல், இளநரையை நிறுத்தும். உடல் சூட்டை குறைக்கும் ‌ கண் எரிச்சல், தலைவலி, பித்தக்கொதிப்பு, செம்பட்டைத்தலைமுடி தூக்கமின்மை போன்ற பற்பல பிரச்சனைகள் தீர்ந்து போகும். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/17/2025, 10:56:44 AM

https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW தடைகளை உடைக்கும் பிரத்யேக மலர் மருத்துவ குறிப்பு நமக்கு அறிமுகமான நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஹோமியோபதி மருந்துகளை விற்பனை செய்யும் நிலையத்திலோ ஸ்டார் ஆப் பெத்லகேம் எனும் மலர் மருந்தினை உருண்டை வடிவில் இருக்கிறதா என கேட்டு அதனை வாங்கிக் கொள்ளவும். உங்களுடைய பிறந்த கிழமைகளில் காலை - மதியம் - இரவு - என மூன்று வேளையும் உணவு உண்டபின் பிறகு நான்கு என்ற எண்ணிக்கையிலான ஸ்டார் ஆப் பெத்லகேம் மலர் மருத்துவ உருண்டையை சாப்பிடுங்கள். இதனை தொடர்ந்து 21 நாட்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு வர உங்களுக்கு நீங்களே விதித்துக் கொண்டிருந்த மாயத் தடைகள் விலகி, உள்ளுக்குள் உத்வேகம் பிறந்து, முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றியை காண்பீர். உங்களது வீட்டில் யாரேனும் உங்களது முயற்சிக்கு தடையாக இருந்தால் அவர்களுக்கும் இத்தகைய மருந்தினை தண்ணீரில் கலந்து பருக சொல்லுங்கள். உங்களுக்கு சுப பலன் கிடைக்கும் . 48 நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு தடையாக இருந்தவர்கள் மனமாற்றம் அடைந்து உங்களுக்கு பச்சை கொடியை காட்டுவார்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கான பணியை செய்து வெற்றி பெறுவீர்கள். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

Post image
Image
தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/28/2025, 3:14:50 AM

நலம் பல செய்யும் மருதம் பட்டை  இந்த பட்டைகள், இதய செயல்பாட்டை மேம்படுத்தி தமணியில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை கிட்டத்தட்ட 254 சதவீதம் குறைக்கிறது. மேலும், இந்த பட்டையிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றன.. அதேபோல, வெறும் தண்ணீரில் இந்த பட்டையை கொதிக்க வைத்து குடித்தாலே, உடலிலுள்ள உஷ்ணம் நீங்கும்.. நன்றாக தூக்கம் வரும்.. இந்த மருதம் பட்டையில் கஷாயம் வைத்து குடித்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.. வாய் புண்களும் தொண்டை கரகரப்பும் நீங்கும்.. இந்த மருதம் பட்டையை தூளாக்கி வைத்து கொண்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.. குறிப்பாக, இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், சுவாச கோளாறுகள் நீங்கும்... கடும் காய்ச்சலும் நீங்கும்.. ஒரு டம்ளர் மோரில், சிறிது மருதம் பட்டை பொடி செய்து கலந்து குடித்தாலே அஜீரணம் நீங்கி, செரிமானமும் சரியாகும்.. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக்கூடியது இந்த பட்டை பொடி கொழுப்பு சேர்வதால் ஏற்படும் அபாயத்தை போக்குகிறது.. இந்த பொடியிலிருந்து வெறும் 5 கிராம் சாப்பிட்டாலே, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது கட்டுப்படும். இந்த பொடியை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், வாத நோய்கள், மூட்டுவலிகள் குணமாகும்.. மருத மரத்தின் இலையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் பித்தவெடிப்பு தீரும்  . . https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW

Post image
Image
தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/21/2025, 1:31:33 AM

https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம் நன்கு முற்றிய கல்யாண பூசணிக் காயிலிருந்து 250 மி.லி சாறு எடுக்கவும். பாதாம் பருப்பு – 10 கிராம் பிஸ்தா பருப்பு – 10 கிராம் அக்ரோட் பருப்பு – 10 கிராம் சாரப் பருப்பு – 10 கிராம் கசகசா – 10 கிராம் பாதாம் பிசின் – 10 கிராம் வேலம் பிசின் – 10 கிராம் ஆவாரம் பிசின் – 10 கிராம் முருங்கைப் பிசின் – 10 கிராம் மேற்கண்ட பருப்பு மற்றும் பிசின் வகைகளை பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். கல்யாணப் பூசணிச் சாற்றில் 500 கிராம் கற்கண்டு, ½ லிட்டர் பசும்பால் சேர்த்துக் கரைத்து அடுப்பேற்றி, சிறுதீயாய் எரிக்கவும். பாகு பதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள பருப்பு, பிசின் வகைகளை முறைப்படி கலந்து கிண்டி கீழிறக்கவும். லேகியம் ஆறிய பின் 250 கிராம் நெய் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும். தினசரி காலை, இரவு உணவுக்குப்பின் பாலுடன் 5 கிராம் அளவு லேகியம் சாப்பிட உடல் உஷ்ணம் தணிந்து, தேகம் வலுத்து தாது பெருகும். அதி உஷ்ணம் எனப்படும் வெட்டை அதிகரித்த நிலையில், உயிர்துளியில் (விந்து) உள்ள அணுக்கள் அசையும் தன்மையை இழக்கவும், மடிந்து போகவும் விந்து நீர்த்து வீணாக்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. இவர்கள் மேற்கண்ட லேகியம்  அவசியம் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.

Post image
Image
தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/15/2025, 6:43:47 AM

இரத்தத்தை விருத்தி செய்ய எளிய வழிகள் இரத்தத்தை சுத்தப்படுத்துவது  மற்றும் விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப் படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும் https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW

Post image
Image
தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/23/2025, 4:21:39 PM

புல்லுருவி பலன்கள் ஏதேனும் ஒரு மரத்தில் இருந்து முளைக்கும் மற்றோர் செடி அல்லது கொடி புல்லுருவி எனப்படும். அதாவது தனக்கு வேண்டிய சத்துக்களை அந்த மரத்தில் இருந்து இது எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு புல்லுருவிக்கு ஒவ்வொரு நாள், நட்சத்திரம், திதி, பலி பூசைகள் இருக்கிறது. முழுமையான பூஜைகள் செய்து எடுத்தால்தான் முழுமையாக பலன்கள் உண்டாகும். (1) மா புல்லுருவி வசியம் செய்யலாம். நல்ல பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். (2) மூங்கில் புல்லுருவி நமக்கு கெட்டது செய்யும் சதா தொந்தரவு செய்யும் எதிரியை இல்லாமல் செய்துவிடும், சர்வ சத்ரு நாசம். (3) அரச மர புல்லுருவி இழந்த சொத்துகளை திரும்ப பெறலாம் நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். (4) நெல்லி மர புல்லுருவி எதிராளி துன்பப்படுவான், அழிந்து போவான் (5) வெள்ளெருக்கன் புல்லுருவி பகையாளி வணங்குவர், வியாபார விருத்தி, உத்தியோகம், தொழில் விருத்தி ஏற்படும். (6) வெண்நாவல் புல்லுருவி போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், பங்கு சந்தை வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி. (7) காட்டு எலுமிச்சை புல்லுருவி எந்த பொருளை தொட்டாலும் பலமடங்கு பெருகும், புத்திர சந்தானம் எற்படும். (8) அரச மர புல்லுருவி ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும். (9) மலை வாகை புல்லுருவி எவ்வளவு வறுமையில் இருந்தாலும் மிகப்பெரிய செல்வந்தன் ஆவார்கள். (10) காட்டு இலந்தை மர புல்லுருவி ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும். (11) வில்வ புல்லுருவி தொழில் வசியம், வியாபார வசியம் மற்றும் கடன் தொல்லை நீங்கி நல்ல தொழில் நடக்கும். (12) வன்னிமர புல்லுருவி போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், பங்கு சந்தை வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி. (13) பவளமல்லி புல்லுருவி ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும். (14) இலுப்பை புல்லுருவி தொழில் ரீதியாக சத்ருக்கள் இருந்தால் விலகி போவார்கள், போட்டி பொறாமைகள் நீங்கும். (15) கருங்காலி புல்லுருவி குல தெய்வம் இஷ்ட தெய்வம் வசியமாகும், தேவதா வசியம் ஏற்பட்டு அபூர்வ ஆற்றல் உண்டாகும், இறை சிந்தனை எற்பட்டு தீய சக்தி விலகும். உதாரணத்திற்கு மா புல்லுருவியை எடுத்து கொள்வோம் அவிட்ட நட்சத்திரத்தில் மாமரத்தின் மேல் உள்ள புல்லுருவிக்கு காப்புக்கட்டி பலிகொடுத்து தூபதீபம் கொடுத்து  வசிய மந்திரம் ஜெபித்து. கொண்டு வந்து வேண்டியவர் வீட்டில் மந்திரம் ஜெபித்து வைக்க வசியமாவர். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

❤️ 1
தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
6/2/2025, 4:00:57 AM

https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p *பித்தப்பை கற்களை விரைவாக கரைக்கவும், வராமல் தடுக்கவும் இதை சாப்பிடுங்க!* நமது உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை. சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது. இந்த பித்தப்பை கற்கள் எப்படி உண்டாகிறது.. அதனை தடுக்க என்ன சாப்பிட வேண்டும் என்னென்ன சாப்பிட கூடாது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். *பித்தநீர்க் கற்கள்* சாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன. ஏன்? பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும். இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. *காரணங்கள் என்ன?* 1. உடல் பருமன் 2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள். 3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது. 4. பரம்பரைக் கோளாறு. 5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது. 6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது. 7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது. 8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது. 9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது. 10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது. 11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது. 12. அடிக்கடி விரதம் இருப்பது. 13. கர்ப்பம். 14. முறையான உடற்பயிற்சி இல்லாதது. 15. ‘சிக்கில் செல்' ரத்தசோகை. *அறிகுறி 1:* பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. *அறிகுறி 2:* இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது அடுத்த வகை. *அறிகுறி 3:* வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும். அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம் முக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும். பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர். சிலருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. வேறு பாதிப்புகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது, பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரும். *மஞ்சள்* மஞ்சளில் உள்ள மிக முக்கியமான மூலக்கூறு கூர்குமின் ஆகும். இதன் மருத்துவ குணங்கள் மிக நீண்ட காலமாக அறியப்பட்டது ஆகும். தினமும் உங்களது உணவில் ஒரு டீஸ்பூன் முதல் ஒரு டேபிள் ஸ்பூன் வரையில் மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள்.. அல்லது மிதமான சூடுள்ள பாலில் சிறிதளவு மஞ்சள், தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து பருகலாம். இதில் மிளகும் சேர்த்து பருகலாம். *பழங்கள் மற்றும் காய்கறிகள்* உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்களை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு பிரஷ் ஆன எலுமிச்சை, தக்காளி, ஆப்பிள் போன்ற பழங்களை தினமும் சாப்பிடுங்கள். அடிக்கடி பழம் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட ஜூஸ் வகைகளை பருகலாம். ஆப்பிள் ஜூஸ் பருகுவது கல்லீரலை சுத்தம் செய்யவும் கற்களை நீக்கவும் உதவுகிறது. *ஆரோக்கியமான கொழுப்புகள்* ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உண்பதன் மூலமாக உங்களது உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. இது பித்தப்பை கற்களை குறைக்கவும் உதவுகிறது. ப்ரூட் மற்றும் காய்கறி சாலட்டுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW *காபி* காபியை குறைவாக பருகினால் ஆரோக்கியம் தான்.. தினமும் ஒன்று முதல் இரண்டு கப் காபிகளை பருகுவதன் மூலமாக உங்களுக்கு பித்தப்பை கற்கள் வராமல் பாதுகாக்கலாம். ஒரு கப் காபி குடிப்பதால் எந்த வித தீங்கும் உண்டாகாது. ஆனால் நீங்கள் காபி குடிப்பதை அதிகரிக்கும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். *நார்ச்சத்து நிறைந்த உணவுகள்* நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் வராமலும், கல்லீரலில் கற்கள் உண்டாகாமலும் காக்கும். மாம்பழம், ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். *உணவை தவிர்க்க வேண்டாம்* நீங்கள் அடிக்கடி சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி விரதம் இருப்பது போன்றவைகளும் உங்களுக்கு கல்லீரலில் கற்கள் வர காரணமாக இருக்கலாம். எனவே தினமும் குறிப்பிட்ட இடைவெளிகளில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். *உடல் எடை* உங்களது உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வாருங்கள். உடல் எடையை டயட் என்ற பெயரில் மிகவும் அதிகமாக குறைப்பதாலும் இந்த பித்தப்பை கற்கள் உண்டாகும்.

தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
6/1/2025, 3:47:25 AM

*அஜீரணத்தை போக்கும் இய‌ற்கை வைத்தியம் :-* *எலுமிச்சை , இஞ்சி & தேன்* https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம். *மோர் & பால் :* தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும். *இருமல் :* கக்குவான் இருமல் நிற்க துளசி பூங்கொத்து,திப்பிலி, வசம்பு பொடி, இவற்றை கலந்தது 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இர்ம்மல் தீரும். *காய்ச்சல் :* சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/16/2025, 4:21:55 AM

பிரம்மி தைலம் இது வல்லாரை தைலம் ‌ தலை நரம்புகளையும் நரம்பு மண்டலத்தையும் வலிமைப் படுத்தும் தேவையான பொருட்கள் சுத்தமான தேங்காய் எண்ணை – 16 பாகம் வல்லாரை இலைச்சாறு – 16 பாகம் கிராம்பு, ஏலக்காய் – 1 பாகம் செய்முறை இவற்றை கலந்து நீர்வற்றும் வரை காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். இத்துடன் 16 பாகம் நெல்லிக்காய் சாற்றை சேர்த்துக் கொண்டால் நல்லது. https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p

Post image
Image
தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
5/14/2025, 3:43:40 PM

https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW காயசித்தி நீலத்தாமரைப் பூவின் இதழ்கள், நாக பூவின் இதழ்கள், பொற்சீந்தில் இவை மூன்றையும் நெய், தேனில் கலந்து 48 நாட்கள் தின்று வர, காயசித்தி உண்டாகி, நரை திரை மாறும். விழுதியிலையையும் அதன் கிழங்கையும் ஒரு மண்டலம் பசும் பாலில் அரைத்து அந்தி சந்தியில் தின்று வந்தால் காயசித்தி உண்டாகி சரீரத்திலுள்ள நோய்களெல்லாம் விலகும்.,  சித்தர்களெல்லாம் கேட்டதை எல்லாம் கொடுப்பார்கள் கொத்தான் என்ற செடிக்கு வேரில்லாமல் இருந்தாலும் அது எவ்விடத்தில் படர்ந்திருக்கின்றதோ அதன் கீழ் எங்கு அக் கொடி நின்றுவிடுகிறதோ அதற்கு நேராக அக் கிழங்குயிருக்கும். அதைக் கண்டுபிடித்து அவ்விடத்தில் வரகு வைக்கோலைப் பொட்டு கொளுத்திவிட்டு அதன் பிறகு தோண்டினால் கிழங்கு அகப்படும். அதைக் கொண்டு பசும் பாலில் அரைத்து ஒரு மண்டலம் தின்று வந்தால் காயசித்தி உண்டாகும் வெள்ளெருக்கு சமூலத்தை கொண்டு வந்து பசும் பாலில் அரைத்து அந்தி சந்தியில் 48 நாட்கள் சாப்பிட்டுவர மூன்றுலோகமும் வசியமாகும்.

Post image
Image
Link copied to clipboard!