
தமிழர் மருத்துவம்🍎
June 7, 2025 at 10:03 AM
உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -2
தந்த சுத்தி
வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, நாயுருவி வேர் பட்டை, கடுக்காய்த் தோல், கிராம்பு ஆகிய ஐந்து பொருள்களையும் சம அளவாக எடுத்து வந்து நன்கு வெயிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும்.
இந்த சூரணத்திற்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பைப் பொடி செய்து கலந்து வைக்கவும். இதுவே தந்தாதி சூரணம் எனப்படும்.
தினமும் அதிகாலையில் இந்தச் சூரணத்தைக் கொண்டு பற்களை நன்கு அழுத்தித் தேய்த்துத் துலக்குவதன் மூலமாக பற்களில் உள்ள கறைகள், கிருமிகள் நீங்கும். பற்களில் வசீகரம் உண்டாகும். முகவசீகரம் ஏற்படும். அத்துடன் பற்களின் மேல் உள்ள ஈறுகள் நன்கு இறுகும்.
தந்த வாய்வு மற்றும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவு முதலியவைகள் நீங்குவதுடன் வாயில் உண்டாகும் வழுவழுப்புத் தன்மையும் மாறும்.
பயிற்சியின் போது அதிக நேரம் அப்பியாசம் செய்வதால் வாயுவானது கபாலத்தை நோக்கி வரும்போது தந்தங்களின் மேலுள்ள ஈறுகளின் உட்புறத்தில் தங்க நேரிடும். அவ்வாறு நடக்கும்போது ஈறுகளில் வீக்கமும் உண்டாகும். இரத்தக்கசிவு கூட உண்டாகும்.
இதனால் ஈறுகள் விரைவில் கடினத்தன்மையை இழந்து பற்கள் உதிரும். எனவே தந்த சுத்தியானது மிகவும் முக்கியமானதாகும்.
இனி அடுத்ததாக மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் அரிய பலனைக் கொடுக்கும் நேத்திரசுத்தி என்னும் கண்களின் கழிவுகளையும், கண்களின் அழற்சியையும் நீக்கும் அற்புத முறையைக் காண்போம் .
