தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
June 12, 2025 at 01:15 AM
உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள்  -7 உடல் சுத்தி உடல் சித்தி முறைக்குத் தேவையான பொருள்களைப் பார்ப்போம் . பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வங்காளப் பச்சை, வசம்பு ஆகிய 4 பொருள்களையும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். இந்த நான்கு பொருள்களின் மொத்த எடைக்கு 10 பங்கு குட்டி விளா இலையையும் அதே அளவு சீயக்காய் காயையும் எடுத்துக் கொள்ளவும். இந்தப் பொருள்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தவும். பின்பு நன்கு இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும் காலையில் எழுந்தவுடன் இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும். தந்த சுத்தி, நேத்திர சுத்தி, குடல் சுத்தி, கப சுத்தி ஆகிய நான்கையும் முடித்தவுடன் இளம் சுடுநீரில் இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கவும். இதனால் உன் உடலின் மயிர்க்கால்களில் தங்கியுள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம், உடல் இடுக்குகளின் உப்புப் படிதல், தோலின் வறட்சி, தோல் நோய்கள் நீக்குவதுடன் தோல் பளபளப்போடு வாசனையும் இருக்கும். இவ்வாறு முறையாக நித்ய சுத்தியை ஒரு யோகியானவர் அவருடைய யோக சாதனை செய்துவரும் காலங்களில் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எவ்விதமான உடல் உபாதைகளும் இன்றி அவருடைய யோக சாதனையானது நடைபெறும்.  எனவே இந்த நித்திய சுத்தி முறைகளை முறையாகவும், விடாமலும் கடைப்பிடித்தால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இவ்வாறு நித்திய சுத்தி முறைகளை முறையாகச் செய்து வந்தாலும் தீவிரமான யோகப் பயிற்சியின் விளைவாக உதிரமானது விரைவாக ஓடுவதன் காரணமாகவும், உடலின் நீர்த் தன்மையானது வியர்வையாக அதிகம் வெளியேறுவதன் காரணமாகவும் உடலில் அதிக உஷ்ணம் ஏற்பட்டு உடல் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு இணைப்புகளிலும் இடுப்புப் பகுதிகளிலும் உள்ள ஜவ்வு மண்டலங்கள் வறட்சியடைந்து வலி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே இவ்வாறு ஏற்படாமல் இருக்க மாதத்தில் இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை யோகப் பயிற்சி செய்பவர்கள் ‘பட்சசுத்தி’ எனும் முறையைக் கண்டிப்பாகக்  கடைப்பிடிக்க வேண்டும். https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
Image from தமிழர் மருத்துவம்🍎: உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள்  -7  உடல் சுத்தி  உடல் சித்தி முறைக்க...

Comments