Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
June 12, 2025 at 01:34 PM
கோயமுத்தூர் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், ‘உயிர்’ அறக்கட்டளையும் இணைந்து ‘உயிர் குட்டிக் காவலர் சாலைப் பாதுகாப்பு பாடத்திட்டத்தை’ வடிவமைத்துள்ளார்கள். இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் 2022 அக்டோபரில் தொடங்கி வைத்து சிறப்பித்தார். சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பயிற்றுவிக்கும் ‘குட்டிக் காவலர்’ திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கான கையேட்டினை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலை அரங்கத்தில் இன்று வெளியிட்டோம். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டி நூல்களையும் வழங்கினோம். 🛣️ சாலைகள் நமது வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, நமது முடிவுக்கானதாக இருக்கக் கூடாது. 🚗 நாட்டின் வளர்ச்சியில் சாலைப் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. சாலைகளை மிக பாதுகாப்பாக பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றுவோம். 🚦 பாதுகாப்போடு பயணித்து மகிழ்ச்சி காண்போம்” என உரையாற்றினோம்.
Image from Anbil Mahesh Poyyamozhi: கோயமுத்தூர் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், ‘உயிர்’ அறக்கட்டளையும்...
❤️ 👍 🙏 21

Comments