
📚Edukinniya🎓
June 9, 2025 at 05:40 PM
🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 51
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: S.Samsiga
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Ampara
#edukinniya #storycompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
அதனை எடுத்து மெல்ல விரித்துப்பார்த்தார்.அவருக்கு நம்பமுடியாத வியப்பு ஏற்பட்டது. அதற்குள் கட்டுகட்டாக கொஞ்சம் பணமும் கொஞ்சம் புத்தகங்களும் இருந்தன. அந்த பொதியை பத்திரமாக எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டு பின்னர் தனது சுத்தம் செய்யும் பணியை செய்தார். சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடமாக ஒருவர் எதனையோ தேடி அலைந்து கொண்டிருப்பதை கண்டார். அவரிடம் சென்று நீங்கள் ஏதும் தவறவிட்டீர்களா எனக்கேட்டார்.
அதற்கு அந்த நபர் ''எனது பொதியை தவறவிட்டுவிட்டேன்.அதைத்தான் நீண்ட நேரமாகத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அதை நீங்கள் கண்டீர்களா தயவுசெய்து அதை கண்டால் எனக்கு கூறுங்கள்'' என்றார்.
அதற்கு கணேஷன் '' இதுவா உங்களது பை?
இதனை நான் வீதியோரமாக கண்டு அதை எடுத்து வைத்தேன்." எனக்கூறி அந்த பையை எடுத்து காட்டினார். அதற்கு அந்த நபர் ஆம் எனக்கூறி " எனக்கு இந்த பை கிடைக்கும் என நம்பிக்கையே இல்லை. இருந்தும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன்தான் தேடி வந்தேன். ஆனால் கிடைத்து விட்டது. மற்றவர்களது பணம், பொருள் மீது ஆசை படும் தற்காலத்தில் இப்படியும் ஒரு மாமனிதர் இருக்கின்றீங்களே? "என கணேஷனிடம் கேட்டார்.அதற்கு கணேஷன் இவ்வுலகில் எல்லாரும் அவ்வாறு இல்லை. நல்ல குணங்களுடன் தான் எனது தாயும் தந்தையும் என்னை வளர்த்தார்கள். அதனால்தான் நானும் அப்படியே வளர்ந்து விட்டேன் எனது பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்க்கின்றேன்."எனக்கூறினார்.அதற்கு அந்த நபர்" நல்லது, தயவுசெய்து உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமானாலும் இப்போதே கூறுங்கள் நான் நிச்சயம் சென்கின்றேன்."
என்றார். கணேஷன்
அவ்வேளை "எனது பிள்ளைகளின் கல்விக்காகத்தான் நான் படாதபாடு படுகின்றேன்." எனக்கூறி தனது மனக்கஷ்டங்களை கூறினார். அதற்கு அந்த நபர் உங்கள் மூத்த பிள்ளையின் கல்வியை நான் பொறுப்பேற்கின்றேன். உனது பிள்ளைகளை நன்றாக படிக்க வை ஏழைகளுக்கு படிப்புதான் கைகொடுக்கும்.உனது நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் எனக்கூறினார் "அதற்கு கணேஷன் "மிக்க நன்றி ஐயா இதனை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் "என மகிழ்ச்சியுடன் கூறினார்.
அந்த நபர் கூறியவாரே
பிள்ளைகளை படிக்க வைத்தார்.கணேசன் பிள்ளைகளும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தனர். கணேசன் வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக மாறியது.
""நல்லதை நினைக்க நல்லதே நடக்கும்""