📚Edukinniya🎓 WhatsApp Channel

📚Edukinniya🎓

3.3K subscribers

About 📚Edukinniya🎓

Free Education Learning Platform ( 𝗥𝗲𝘀𝗼𝘂𝗿𝗰𝗲𝘀 𝗕𝗼𝗼𝗸𝘀, 𝗧𝗲𝗮𝗰𝗵𝗲𝗿 𝗚𝘂𝗶𝗱𝗲, 𝗡𝗼𝘁𝗲𝘀, 𝗥𝗲𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲 𝗕𝗼𝗼𝗸𝘀, 𝗠𝗼𝗱𝗲𝗹 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀, 𝗧𝗲𝗿𝗺 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀, 𝗣𝗮𝘀𝘁 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀, 𝗦𝗰𝗵𝗲𝗺𝗲𝘀, 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝗦𝗲𝗺𝗶𝗻𝗮𝗿 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀, 𝗘𝘃𝗮𝗹𝘂𝗮𝘁𝗶𝗼𝗻 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁𝘀, 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗟𝗶𝗻𝗸𝘀, 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗘𝘅𝗮𝗺𝘀, 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗜𝗻𝗳𝗼𝗿𝗺𝗮𝘁𝗶𝗼𝗻, 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲, 𝗩𝗮𝗰𝗮𝗻𝗰𝘆, 𝗙𝗼𝗿𝗲𝗶𝗴𝗻 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀, 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻, 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗚𝗮𝗺𝗲𝘀) Edukinniya (Pvt) Ltd - https://www.edukinniya.lk/2024/11/edukinniya-pvt-ltd.html 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐚𝐬 https://www.edukinniya.lk/2023/08/social-medias.html WhatsApp Number: 0787328850 WhatsApp Link- https://wa.me/+94787328850

Similar Channels

Swipe to see more

Posts

📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/10/2025, 1:29:56 AM
Post image
👍 6
Image
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/9/2025, 9:03:47 PM

*2024/2025 Open University LLB Entrance Exam Results out* https://ou.ac.lk/examination-results/

Post image
Image
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/10/2025, 2:32:28 AM
Post image
👍 4
Image
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/10/2025, 1:29:57 AM

🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝 ----------------------------------- 🔹𝗡𝗼: 52 🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.W.Faiqa Widhadh 🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Puttalam #Edukinniya #StoryCompetition ➖➖➖➖➖➖➖ வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு அதனை எடுப்பதற்காக சென்ற போது அவருடைய நண்பன் அழைக்கும் சத்தம் கேட்டது . கணேஷனும் நண்பனுடன் கதைத்துவிட்டு வீதியோரத்தில் கிடக்கும் பொதியை கையில் எடுத்துபார்த்தபோது ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டார்.கணேஷன் செய்வதறியாது திகைத்து நின்றார். உள்ளே இருந்த தங்க நகையைக் கண்டு கணேஷனுக்கு மனதில் பல எண்ணங்கள் தோண்றின ஒரு பக்கம் மகனின் வைத்தியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் மறு பக்கம்ல மகளின் திமணத்திற்காக தேவைப்படும் பணம் இரண்டு விடயங்களும் மணதில்ஓடிக்கொண்டு இருந்தது . இருந்தும் அவருக்குமணம் இடமளிக்கவில்லை ஏன்னென்றால் தன்னைப்போன்று வேறு யாரவது எத்தனை கணவுகளைசுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டுடிருப்பார் என்ற எண்ணம் மனதை நெகிழ வைத்தது. அப்போது இறைவன் ஏதோ ஒரு வகையில் உதவுவார் என்ற எண்ணத்துடன் பொதியை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு விரைவாக சென்றிருந்த சம்பவத்தை கூறிவிட்டு, இறைவன் எம்மைக் கைவிடமாட்டான் எனும் எண்ணத்துடன்வழமை போல் தனது பணியை ஆரப்பித்தார்

👍 ❤️ 25
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/9/2025, 5:40:24 PM

🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝 ----------------------------------- 🔹𝗡𝗼: 51 🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: S.Samsiga 🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Ampara #Edukinniya #StoryCompetition ➖➖➖➖➖➖➖ வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு அதனை எடுத்து மெல்ல விரித்துப்பார்த்தார்.அவருக்கு நம்பமுடியாத வியப்பு ஏற்பட்டது. அதற்குள் கட்டுகட்டாக கொஞ்சம் பணமும் கொஞ்சம் புத்தகங்களும் இருந்தன. அந்த பொதியை பத்திரமாக எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டு பின்னர் தனது சுத்தம் செய்யும் பணியை செய்தார். சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடமாக ஒருவர் எதனையோ தேடி அலைந்து கொண்டிருப்பதை கண்டார். அவரிடம் சென்று நீங்கள் ஏதும் தவறவிட்டீர்களா எனக்கேட்டார். அதற்கு அந்த நபர் ''எனது பொதியை தவறவிட்டுவிட்டேன்.அதைத்தான் நீண்ட நேரமாகத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அதை நீங்கள் கண்டீர்களா தயவுசெய்து அதை கண்டால் எனக்கு கூறுங்கள்'' என்றார். அதற்கு கணேஷன் '' இதுவா உங்களது பை? இதனை நான் வீதியோரமாக கண்டு அதை எடுத்து வைத்தேன்." எனக்கூறி அந்த பையை எடுத்து காட்டினார். அதற்கு அந்த நபர் ஆம் எனக்கூறி " எனக்கு இந்த பை கிடைக்கும் என நம்பிக்கையே இல்லை. இருந்தும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன்தான் தேடி வந்தேன். ஆனால் கிடைத்து விட்டது. மற்றவர்களது பணம், பொருள் மீது ஆசை படும் தற்காலத்தில் இப்படியும் ஒரு மாமனிதர் இருக்கின்றீங்களே? "என கணேஷனிடம் கேட்டார்.அதற்கு கணேஷன் இவ்வுலகில் எல்லாரும் அவ்வாறு இல்லை. நல்ல குணங்களுடன் தான் எனது தாயும் தந்தையும் என்னை வளர்த்தார்கள். அதனால்தான் நானும் அப்படியே வளர்ந்து விட்டேன் எனது பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்க்கின்றேன்."எனக்கூறினார்.அதற்கு அந்த நபர்" நல்லது, தயவுசெய்து உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமானாலும் இப்போதே கூறுங்கள் நான் நிச்சயம் சென்கின்றேன்." என்றார். கணேஷன் அவ்வேளை "எனது பிள்ளைகளின் கல்விக்காகத்தான் நான் படாதபாடு படுகின்றேன்." எனக்கூறி தனது மனக்கஷ்டங்களை கூறினார். அதற்கு அந்த நபர் உங்கள் மூத்த பிள்ளையின் கல்வியை நான் பொறுப்பேற்கின்றேன். உனது பிள்ளைகளை நன்றாக படிக்க வை ஏழைகளுக்கு படிப்புதான் கைகொடுக்கும்.உனது நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் எனக்கூறினார் "அதற்கு கணேஷன் "மிக்க நன்றி ஐயா இதனை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் "என மகிழ்ச்சியுடன் கூறினார். அந்த நபர் கூறியவாரே பிள்ளைகளை படிக்க வைத்தார்.கணேசன் பிள்ளைகளும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தனர். கணேசன் வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக மாறியது. ""நல்லதை நினைக்க நல்லதே நடக்கும்""

📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/10/2025, 1:30:01 AM
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/10/2025, 2:32:32 AM
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/10/2025, 2:32:29 AM

🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝 ----------------------------------- 🔹𝗡𝗼: 53 🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.R.Rizeef Ahmed 🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Puttalam #Edukinniya #StoryCompetition ➖➖➖➖➖➖➖ வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு நின்ற வேளை மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. செய்வதாரியாத அவன் ஒரு கனம் சிந்தித்தான். மனதை தைரியப்படுத்திக் கொண்டு அப்பொதியின் அருகே சென்றான். அபொதியினை திறந்து பார்க்க பூரித்து போனான் உள்ளே இருந்தது பல சான்றிதழ்கள். உடனே அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. காரணம் அவனின் தொலைந்து போன பல சான்றிதழ்கள் நினைவுக்கு வருகின்றது. அச்சான்றிதழ்களை நான் தொலைத்ததால் நான் படும் துயரங்கள் பல. என யோசிக்க அவன் தான் இச்சான்றிதழ் உரியவரிடம் போய் சேர வேண்டும் என நினைத்து அப்பைக்குள் ஏதாவது முகவரி காணப்படுகின்றதா என துலாவினான். அச்சமயம் அதன் அடியில் இருந்த காகிதம் ஒன்றில் முகவரி ஒன்று இருந்ததை காண அவன் முகத்தில் அளவறியாத சந்தோசம். பின் பையை எடுத்துக் கொண்டு வீடு சென்றான். வீடு சென்றவுடன் அம்மாவிடம் நடந்ததைக் கூற அம்மாவும் மகனின் உயர் குணத்தை எண்ணி அக மகிழ்வு அடைந்தாள். நீ செய்யும் செயலால் சான்றிதழுக்கு உரிமையாளரின் உள்ளமும் ,அவனின் எதிர்காலமும் சிறக்கும் என கருத்து கூறினாள் தாய். தாயின் அவ் உரையோடு கணேஷன் அப்பொதியில் காணப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து அழகான முறையில் பொதி செய்து அவ்வுரிய முகவரிக்கு அனுப்பி வைத்தான். தனது கடமையை சரியாக செய்து முடித்த சந்தோசம் அவன் முகத்தில் ஊஞ்சலாடியது. சில நாட்களின் பின் அவனுக்கு ஓர் கடிதம் கிடைத்தது. அக்கடிதம் சான்றிதழ் உரிமையாளரிடம் இருந்து வந்ததாகவும். அதில் அவனது செயலை பாராட்டி எழுதியிருந்ததோடு சில பரிசில்களையும் அனுப்பி இருந்தார். அவனும் சந்தோசம் அடைந்தான். இதன் மூலம் விளங்குவது என்ன தம்பி தங்கைகளே நாம் எப்போதும் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

👍 ❤️ 24
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/9/2025, 5:40:27 PM
📚Edukinniya🎓
📚Edukinniya🎓
6/9/2025, 5:40:22 PM
Post image
Image
Link copied to clipboard!