📚Edukinniya🎓
📚Edukinniya🎓
June 10, 2025 at 04:31 AM
🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝 ----------------------------------- 🔹𝗡𝗼: 54 🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.N.Fathima Nasra 🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Puttalam #edukinniya #storycompetition ➖➖➖➖➖➖➖ வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு அவசரமாகவும் அதிசயத்துடனும் அருகே சென்று அதனைப் பார்த்தார். அது ஒரு பிளாஸ்டிக் பொதியாகவும் சற்று திறந்த நிலையிலும் இருந்தது. அதனுள் இருந்து வெளிச்சத்தில் ஒளிரும் தங்கக் கடிகாரம் ஒன்றும், அவற்றை சுற்றி அடுக்கப்பட்டிருந்த பணக் கட்டுகளும் தெரிந்தன. இதனைக் கண்ட கணேஷன் சில நொடிகள் உறைந்து நின்றார். “இது யாருடையது? இது வீதியோரத்தில் எப்படிப் போடப்பட்டது?” என்று அவரின் மனதில் பல வினாக்கள் எழுந்தன. ஆனால், உடனே அவர் மனசாட்சி பேச ஆரம்பித்தது. “இது எனது பொதி இல்லை. யாரோ தவறவிட்டு போய் இருக்கலாம். இது அவர்களின் அத்தியாவசியம்!” தன்னிடன் இருந்த தொப்பியில் அந்தப் பொதியை அப்படியே வைத்துக் கொண்டு நேராக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றார். அங்கு சம்பவத்தை விவரித்து, பொதியினை பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் கணேஷனின் நேர்மையை மனதார பாராட்டினர். இந்நிகழ்வின் செய்திகள் விரைவில் ஊடகங்களில் வெளியாகின. “துப்புரவு தொழிலாளி ஒரு கொடையான சொத்தை நேர்மையுடன் ஒப்படைத்தார்” என்ற தலைப்பில் வந்த செய்தி கணேஷனை பிரபலமாக்கியது. அந்தத் தொகையின் உரிமையாளர் ஒரு கடற்கரை தொழிலதிபர் என்பதும், அவர் பணம் மற்றும் தங்கத்தை தவறுதலாக வாகனத்திலிருந்து வீதியோரத்தில் வீசியதும் பின்னர் தெரியவந்தது. அவர் நேரில் வந்து கணேஷனை பாராட்டி, நன்றிக்காக நல்லத்தொகையும், அவரது பிள்ளைகளுக்கான கல்வி உதவித் தொகையும் வழங்கினார். இந்நிகழ்வு கணேஷனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரது குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அவரது நேர்மையும் மனசாட்சியும் ஒருபோதும் வீழாத மதிப்பாகும் என்பதை நம் அனைவரும் உணர்ந்தோம். *"நேர்மையான வாழ்வில் வெற்றி என்றும் நிலைத்திருக்கும்" என்ற அர்த்தமுள்ள ஒரு உணர்வுபூர்வக் கதையாக இது ஆனது.*
👍 ❤️ 😢 65

Comments