
📚Edukinniya🎓
June 10, 2025 at 06:07 PM
🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
-----------------------------------
🔹𝗡𝗼: 57
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.A.F.Azha
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Paragahadeniya
#edukinniya #storycompetition
➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு
அந்த இடத்திற்கு சென்றார். அந்தப்பையினுள் தங்க நகைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நகை யாருடையது என யோசித்து கொண்டிருந்தார். இதை எடுத்துக்கொள்ளவா வேண்டாமா இது நல்லதா கெட்டதா என யோசித்தார். இந்நகைகளை எடுத்தால் எனது எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும் என யோசித்தார். பின்பு இது தவறானது இன்னொருவரினது பொருளிற்கு ஆசைப்படக்கூடாது இந்நகையை அந்த உரிமையாளரிடமே கொடுக்க வேண்டும் என நினைத்தார். அப்பொழுது ஒரு பெண் அழுது புலம்பிக் கொண்டு அவ்வழியே வந்தாள். அதைக் கண்ட கணேஷன் "ஏன் அழுகிறீர்கள் " எனக்கேட்டார். அப்பெண் கூறினாள் எனது நகைகளை நான் இவ்வழியே தொலைத்து விட்டேன் அதை நீங்கள் பார்த்தீர்களா எனக் கேட்டாள். கணேஷன் அப்பெண்ணிடம் அந்நகையைக் கொடுத்து இது உங்களுடையதா எனப் பாருங்கள் என்றார். அப்பெண் " ஆமாம் இது என்னுடையது தான் " எனக்கூறிவிட்டு வேற யாராக இருந்தாலும் இந்நகையை அவருக்காக எடுத்து சென்றிருப்பார் ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை இந்நகையை விற்று தான் நான் எனது மகளின் புற்றுநோயை குணமாக்க முடியும். மிக்க நன்றி என்று கூறி விட்டு அப்பெண் சென்று விட்டாள். இதை ஒரு மிகப்பெரிய செல்வந்தர் பார்த்துக் கொண்டிருந்தார். அச்செல்வந்தர் கணேஷனிடம் ஐந்து இலட்சம் ரூபாயை கொடுத்து இது உங்களின் நேர்மைக்கான பரிசு எனக் கூறினார். அதன் பின் கணேஷன் அச்செல்வந்தருக்கு மிக்க நன்றி நான் இந்த உதவியை எப்பொழுதும் மறக்க மாட்டேன் எனக் கூறினார்.
கணேஷனுக்கு மிக்க மகிழ்ச்சி பிள்ளைகளின் கல்வியையும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என அதை வீட்டிற்குகொண்டு சென்றார்
👍
23